இந்த ஜனநாயக நாட்டில், பேசுபொருளுக்கு பஞ்சமில்லை, பேசவா உரிமையில்லை, பேசினால் தவறில்லை, பேசித்தான் ஆகவேண்டும், வேறு வழியில்லை! நாங்கள் பேசுகிறோம், சிறு சாரல்களாய் வீசுகிறோம் ! அதை இந்த , பாட்கேஸ்ட் சாளரம் வழி "காற்றின் மொழியாக" சிறிதே சுவாசியுங்கள்..!
வணக்கம் மக்களே!!⛅ "செம்மொழி இது எம்மொழி சிதையா தொரு தொன்மொழி முச்சங்கம் வளர்த்திட்ட எம்மொழி எக்காலமும் அழியா தமிழ்மொழி" இதோ " தமிழ் வழி தூது" வின் முதல் 1️⃣ அத்தியாயம்
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்."தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்" என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள்.. அத்தகைய பழமை வாய்ந்த தமிழ் மற்றும் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள,
உதவியதற்கு, உரிய நேரத்தில் நன்றி சொல்ல உரிய நாளான தமிழர் திருநாளில் இன்பம் பொங்க வாழ்த்துகள்
இன்றியமையாத இயற்கை அதோட இன்னிங்ஸ் ஆட ஆரம்பிச்சா... நம்பலோட(மனிதம்) இயலாமை என்னனு இன்னைக்கோ நாளைக்கோ நமக்கு தெரியவரும்..!
வாழ்க்க ஒரு வட்டம் டா இங்க புதியன அலுக்கும் பழையன பழக்கும் புரியலயா.... வாழ்க்கை ஓட்டத்துல சான்றோர் சொன்ன வாக்கு சற்றுமுன் நடந்தது இல்ல ,சரித்திரம் பேசுவது , சாஸ்திரம் சொல்வது . அதெல்லாம் எதுக்கு-னு தெரிஞ்சிக்கிட்டு எங்கையாவது பயன் படுத்த முடிஞ்சா பயன் படுத்தலாமே .... Friendsssssssss....
ஆக.., கோவை தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, தமிழ் மன்றம் புனைந்து, காற்றோடு கலந்து ஒலிக்க வருகிறது காற்றின் மொழி. இக்காலத்திற்கேற்ற அப்டேடட் வெர்ஷனில் ஆழமான கருத்துகளை அதிரடியாக தங்களிடம் பரிமாறவும், பகிரவும் "காற்றின் மொழி" என்னும் வலையொலியை இனிதே துவங்கியுள்ளோம். கேளுங்க கேளுங்க இனி வரப்போற எல்லாத்தையும் நல்லா கேளுங்க மறக்காம கேளுங்க.!