இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!
முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிக்குச் செல்லும் பெண்களே, சம்பளம் முதல் பாலியல் தொல்லைகள் வரை இத்துணை பாகுபாட்டுக்கு, சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் எனில், முறைப்படுத்தப்படாத துறைகளில் வேலைபார்க்கும் பெண்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. #StopExploitingWomen
தாமதமான நடவடிக்கை என்பதன் மறைமுகப் பொருள், குற்றம் சுமத்தப்பட்டவரை பாதுகாப்பது அன்றி வேறில்லை. ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க முனையும் இவர்களை எப்படி நாட்டின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்று ஏற்றுக்கொள்வது? #VoiceOfAval
`இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மரபு, கண்ணியம்' என்கிறீர்கள் வெங்கடேஷ். உண்மையில் அது, இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வக்கிரம்.
தன் பள்ளியின் மாணவிகளுக்கு நடந்த குற்றம் குறித்த துடிப்பைவிட, தங்கள் பள்ளியின் பெயர் பழுதுபடாமல் பார்த்துக்கொள்ளும் மனநிலையையே பள்ளியின் அறிக்கை காட்டுகிறது. மேலும், பள்ளியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், `பள்ளியின் மாண்பு காக்கப்பட வேண்டும்' என்ற அரற்றலே உள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களின் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இல்லை.
மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு - திரும்பிய பக்கமெல்லாம் இத்தகையக் கதறல்களால் இந்திய சுகாதாரத் துறையின் நுரையீரல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆம், கொரோனா மீண்டும் வேகமெடுத்து, ஒரு மாதத்துக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அறல வைத்துக் கொண்டிருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தில் ஏன் சம்பந்தமே இல்லாமல் பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசும் கமென்ட்கள் மீண்டும் மீண்டும் மேடையேறுகின்றன? ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்து அடுத்ததாக தயாநிதி மாறன், ராதாரவி வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம்' என்று பேசிக்கொண்டே, வானதி ஶ்ரீனிவாசனும் ஆதித்யநாத்தும், உண்மையில் அதற்கு முரண் அரசியலில் நிற்கிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தேவைப்படுகின்றன ஆ.ராசாவுக்கு. தன்னை `விக்டிமைஸ்' செய்து அனுதாபம் தேடிக்கொள்ள அந்த வார்த்தைகள் கிடைத்திருக்கின்றன முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திக்கிலும், அறிவு போதாமையுடன் அரசியல் களத்தில் தள்ளாடும் ஆண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தேர்தலில் உங்கள் கட்சி ஜெயிக்கலாம், தோற்கலாம்... ஆனால் நீங்கள் ஏற்கெனவே தோற்றுவிட்டீர்கள்!
உயர்வர்க்க பெண்களிடம் இவரால், 20 குழந்தைகளை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கேட்க முடியுமா? சாமானிய மக்களிடமே அவரால் அதைச் சொல்ல முடியும். எனில், இது அறிவிலி வார்த்தைகள் அல்ல; இல்லாதவர்களிடம் மட்டுமே பாயும் ஆதிக்க வார்த்தைகள்.
காட்சிகள் மாறலாம். அதிகாரம் வழக்கம்போல் தன் ஆட்டத்தைக் காட்டி குற்றம் சுமத்தப்பட்டவரை கைதூக்கிவிடலாம். என்றாலும், இந்த நொடி, இது பெண் எஸ்.பி-யின் வெற்றி. #VoiceOfAval
முன்னொரு காலத்துல வானம், பூமி, சூரியன், நிலா இப்படி எதுவுமே இல்ல. கடவுள் மட்டுமே தனியா உட்கார்ந்திட்டிருந்தாராம். தனிமையில இருக்கிறது கடவுளுக்கு போரடிச்சுப் போச்சு.
ஒரு நாட்டுல பெரிய பாலைவனம் ஒண்ணு இருந்துச்சு. அந்த பாலைவனத்துல நிறைய ஒட்டகங்கள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல `மிக்கி'ன்னு ஓர் ஒட்டகம் ரொம்ப கர்வம் பிடிச்சுது. அதோட கர்வத்துக்கு காரணம் என்னன்னா அது மத்த ஒட்டகங்களைவிட ரொம்ப உயரமா, பலமா இருக்கும்.
ஓர் ஊர்ல பெரிய ஆலமரம் ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அதுல இருக்கிற பழங்களுக்காக அந்த ஆல மரத்துல நிறைய பறவைகள் கூடுக்கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்துச்சுங்க.
சுதந்திரம் என்பது ஒரு முறை கிடைத்த காற்றாக இல்லாமல், நினைத்த நேரத்தில் பறக்க உதவும் சிறகாக இருக்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.
ஓர் ஊர்ல குளம் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் குளத்துல நிறைய தவளைகளும் மீன்களும் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுங்களை சாப்பிடுறதுக்காக அந்தக் குளத்துக்கு நிறைய கொக்குகளும் வரும். அதுல ஒரு கொக்குக்கு பாட்டுப் பாடறதுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
முன்னொரு காலத்துல, வானுலகத்துல ரொம்ப நாட்டி பாய் ஒருத்தன் வாழ்ந்துட்டு வந்தான். அவனால வானத்துலேயும் வாழ முடியும். பூமியிலேயும் வாழ முடியும். இந்தத் திறமையை வெச்சுட்டு அவன் என்னல்லாம் சேட்டை செஞ்சான் தெரியுமா?
சென்னையில ஓர் அப்பார்ட்மென்ட்ல குடியிருந்தான் அஜய்ங்கிற குட்டிப்பையன். அவன் எப்போ பாரு அவனோட ரூமுக்குள்ளேயே இருப்பான். வெளியே போய் மத்த பசங்களோட விளையாடவே மாட்டான். அதனால, அவனோட அம்மாவும் அப்பாவும் அவனோட ரூம் நிறைய பொம்மைகளா வாங்கி வெச்சுட்டாங்க.
முன்னொரு காலத்துல பட்டாம்பூச்சி பட்டணம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல நிறைய பூந்தோட்டங்கள் இருந்ததால அந்த ஊருக்கு பல ஊர்கள்ல இருந்தும் கலர் கலரா நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்து வரும்.
ஒர் ஊர்ல ஒரு ஸ்கூல் இருந்துச்சு. அந்த ஸ்கூல்ல படிப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்களோ அதே அளவுக்கு சுற்றுப்புறம் பத்தின விழிப்புணர்வும் சொல்லிக் கொடுப்பாங்க.
ஓர் ஊர்ல மகிழ்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தா. அவளுக்கு கலர் கலரா இருக்கிற சாமந்திப் பூக்கள்னா ரொம்ப பிடிக்கும். அவளோட விருப்பத்தைத் தெரிஞ்சுகிட்ட அவளோட அப்பா நிறைய சாமந்திப் பூச்செடிகள் வாங்கிக் கொடுத்தார்.
ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமம் மரம், செடி, கொடிகள்னு பச்சைப்பசேல்னு இருக்கும். தேவையான மழை, நல்ல விவசாயம்னு அந்தக் கிராமம் ரொம்ப செழிப்பா இருந்ததால, அங்க வாழ்ந்துட்டு இருந்தவங்க எல்லாம் நல்ல வசதியா இருந்தாங்க. அந்தக் கிராமத்துக்கு வெளியே ஒரு பனை மரம் இருந்துச்சு.
ஓர் ஊர்ல ரியாங்கிற குட்டிப் பொண்ணு அவ ஃபேமிலியோட வாழ்ந்துட்டு வந்தா. ரியா சரியாவே சாப்பிட மாட்டாங்கிறதால ரொம்ப ஒல்லியா, பலவீனமா இருந்தா. அவங்க அம்மாவும் அப்பாவும் விதவிதமா சமைச்சுக் கொடுத்தாலும் ரியா சாப்பிட மாட்டா.
ஓர் உயரதிகாரி பாலியல் குற்றம் செய்கிறார். அடுத்தடுத்த அடுக்கில் உள்ள அதிகாரிகள் அவரை பாதுகாக்க ரௌடியிஸம் செய்கிறார்கள். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யின் கார் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறிக்கப்பட்ட காட்சிகள், ஒரு கேங்ஸ்டர் படத்துக்கான ஸ்கிரிப்ட் அளவுக்கு வன்முறையுடன் நடந்துள்ளன.
ஒரு நாட்ல செழிப்பான காடு ஒண்ணு இருந்துச்சு. ஒரு காலத்துல அந்தக் காட்டோட செழிப்பைப்பத்தி கேள்விப்பட்ட பக்கத்துக் காட்டை சேர்ந்த ஓநாய் கூட்டம் ஒண்ணு இந்தக் காட்டுக்குள்ள நுழைஞ்சு எல்லா மிருகங்களையும் தங்களுக்கு அடிமையாக்கி வெச்சுக்கிச்சுங்க.
ஒரு ஊர்ல குளம் ஒண்ணு இருந்துச்சு. பொதுவா குளங்கள்ல தாமரைப்பூக்களும் அல்லிப்பூக்களும் இருக்குமில்லையா... ஆனா, இந்தக் குளத்துல வேண்டாத செடிகள் நிறைய வளர்ந்திருந்துச்சு.
ஒரு காட்டுல புலிக்குடும்பம் ஒண்ணும் நரிக்குடும்பம் ஒண்ணும் நல்ல ஃபேமிலி ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க. புலிக்குடும்பம் வாழுற குகைக்கு நரிக்குடும்பம் டின்னருக்கு போறதும், வீக் எண்டுல ரெண்டு குடும்பங்களும் சேர்ந்து ஆத்தோரத்துல ஒண்ணா சாப்பிடுறதும், புலிக்குட்டிகளும் நரிக்குட்டிகளும் சாயங்கால நேரத்துல ஒண்ணு சேர்ந்து விளையாடுறதும் பார்க்கிறதுக்கு அவ்ளோ இனிமையா இருக்கும்.
ஒரு நாட்டுல பெரிய கடல் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் கடலுக்குள்ள பல கடல் வாழ் உயிரினங்கள் ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல ஒரு நண்டு, ஒரு இறால், ஒரு கெளுத்தி மீன் மூணும் ரொம்ப ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க.
கொள்கை முழக்கங்களும் முற்போக்கு கருத்துகளும் தெறிக்கவிடப்படும் அரசியலில், பெண் அரசியல்வாதிகளை இன்னும் இரண்டாம் தரமாகவே நடத்தும்போக்கு நீடிப்பது, கண்டனத்துக்குரியது. சமீபத்திய உதாரணம், கே.எஸ்.அழகிரியின் பேச்சு. #VoiceOfAval
ஓர் ஊர்ல பாழடைஞ்ச பங்களா ஒண்ணு இருந்துச்சாம். அந்த பங்களாவுல நிறைய சுண்டெலிகள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்களாம். அந்த பங்களா ஊருக்கு ரொம்ப ஒதுக்குப்புறமா இருந்ததால, சுண்டெலிகள் எல்லாம் தனித்தனியா வலை தோண்டாம சுதந்திரமா நடமாடிட்டு இருந்துச்சுங்க.
ஒரு கிராமத்துல சர்க்கஸ் கூடாரம் ஒண்ணு இருந்துச்சு. அது ரொம்ப சின்ன சர்க்கஸ் டீம்கிறதால அந்தக் கூடாரத்துல ஒரு கரடி, ஒரு குரங்கு, ஒரு புலி, 20 பறவைகள் மட்டும்தான் இருந்துச்சுங்க.
ஒரு கிராமத்துல பறவைக்கார வீடு ஒண்ணு இருந்துச்சு. அந்த வீட்ல பறவைகள் கூடு கட்டுவதற்காக நிறைய பொந்துகள் வச்சு கட்டியிருந்ததால அந்த வீட்ல பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துட்டு வந்துச்சுங்க.
ஒரு மலை உச்சியில குண்டு கழுகு ஒண்ணு வாழ்ந்து வந்துச்சு. எப்போ பார்த்தாலும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறதுதான் அதோட வேலையே. தனக்கான இரையை ரொம்ப தூரம் போய் தேடறதுக்குக்கூட அது சோம்பல்படும்னா பார்த்துக்கோங்க.
ஓர் ஊர்ல சிவான்னு ஒரு குட்டிப்பையன் இருந்தான். அவனுக்கு பாகற்காய்னா சுத்தமா பிடிக்காது. ஆனா, ஸ்வீட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். ஸ்வீட்ஸ் அதிகமா சாப்பிடறதால, அவனுக்கு வயித்துல பூச்சி வந்து அடிக்கடி வயித்துவலின்னு அழுவான்.
ஓர் அடர்ந்த காட்டுல வயசான ஒற்றை யானை ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. ஒற்றை யானைகள் ரொம்ப கோவமா இருக்கும்கிறதால, மற்ற விலங்குகள் அதுங்க பக்கத்துல போகவே பயப்படுங்க.
ஒரு நகரத்துல அன்பான அம்மா அப்பா இருந்தாங்க. அவங்களுக்கு ஜான், ஜனனின்னு ரெண்டு அழகான குழந்தைகள் இருந்தாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஜங்க் ஃபுட்னா ரொம்ப பிடிக்கும்.
பச்சைப்பசேல்னு ஓர் அழகான புல்வெளி. அதுக்கு நடுவுல வாசனையான ஒரு மல்லிகைப்பூ செடியும் ஒரு மஞ்சள் நிற ரோஜாச் செடியும் ஜாலியா பூத்துக் குலுங்கிட்டு இருந்துச்சுங்க.
ஒரு காட்ல பெரிய மலையொண்ணு இருந்துச்சாம். அந்த மலையில உயரமான மரம் ஒண்ணு இருந்துச்சு. அதுல ரொம்ப பெரிய்யய... தேனடை ஒண்ணு இருந்துச்சு. அந்த மலையில வாழ்ந்துகிட்டிருக்குற எல்லா விலங்குகளுக்கும் அந்தத் தேனடை மேல ஒரு கண்ணு.
ஒரு குளத்துல ரெண்டு மீன்கள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. ஒரு மீனோட பேரு பாசிட்டிவ். இன்னொரு மீனோட பேரு நெகட்டிவ். பாசிட்டிவ் மீன் எந்த விஷயமா இருந்தாலும் அதோட நல்ல பக்கத்தை மட்டுமே பார்க்கும். நெகட்டிவ் மீனோ நல்லவங்ககிட்ட கூட ஏதாவது கெட்ட விஷயம் இருக்குதான்னு தேடும்.
ஒரு கிராமத்துல விவசாயி ஒருவர் வாழ்ந்துட்டு வந்தார். அவரு தினமும், காலையில் வானத்துல சூரியன் வர்றதுக்கு முன்னாடியே தன்னோட உழவு மாடுகள் ரெண்டையும் கூட்டிக்கிட்டு வயலுக்குப் போயிடுவாரு.
ஒரு காட்ல சிங்கம், புலி, கரடி, மான், மயில், காண்டாமிருகம், நரி, பாம்புன்னு அத்தனையும் ஒண்ணோட ஒண்ணு சண்டை போட்டுக்காம அமைதியா வாழ்ந்துட்டு வந்துச்சுங்களாம்.
ஒரு கிராமத்துல தென்னந்தோப்பு ஒண்ணு இருந்துச்சு. அந்தத் தோப்புல அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, குட்டிகள்னு குரங்கு ஃபேமிலி ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு.
நிர்பயா முதல் ஹத்ராஸ் பெண் வரை ஒவ்வோர் உயிரை கொடூரமாகப் பலி கொடுக்கும்போதும், இதற்குத் தீர்வுதான் என்ன என்று நாம் அயர்ந்திருக்கும் நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது எத்துணை ஆபத்தானது?
ஒரு கிராமத்துல தென்னந்தோப்பு ஒண்ணு இருந்துச்சு. அந்தத் தோப்புல ஓர் அணில் குடும்பம் வாழ்ந்துட்டு வந்துச்சு. மழைக்காலம் வர்றதுக்கு முன்னாடி தங்களோட குடும்பத்துக்கான கொட்டைகளையும் பழங்களையும் சேகரிச்சு வெச்சுக்கிறது, அந்த அணில் குடும்பத்தோட வழக்கம்.
ஒரு நாட்டுல ஒரு பெரிய்ய்ய்ய... கடல் இருந்துச்சாம். அந்தக் கடல்ல குட்டி மீன்கள், பெரிய மீன்கள், இறால், சுறா, நண்டு, திமிங்கலம்னு பல வகையான மீன்கள் சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்துச்சாம்.
ஓர் அழகான காடு. காடெல்லாம் கலர் கலரா பூக்கள். பூக்கள் அதிகமா இருக்கிறதால அந்தக் காட்ல நிறைய தேனடைகள் இருந்துச்சு. அந்தத் தேனடைகளைச் சாப்பிட்டு, அந்தக் காட்ல இருந்த கரடிகள் எல்லாம் நல்ல ஹெல்தியா, எனர்ஜியா இருந்துச்சுங்களாம்.
ஒரு காட்ல பெரிய யானைக் குடும்பம் ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அந்தக் குடும்பத்துல குளிக்கிறதே பிடிக்காத குட்டி யானை ஒண்ணும் இருந்துச்சு.
ஒரு காட்டுல ஒரு முயலும் ஆமையும் நல்ல நண்பர்களாக இருந்துச்சுங்களாம். காலையில எழுந்ததும் ஒண்ணா வாக்கிங் போறதுல இருந்து நைட்டு டின்னர் சாப்பிடறது வரைக்கும் இரண்டுமே ஒண்ணாதான் இருக்குங்க.
ஒரு காட்ல மூணு மாடுகள் ரொம்ப நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்துச்சிங்களாம். மூணுமே ஜங்க் ஃபுட்டெல்லாம் சாப்பிடாம சத்தான உணவுகளா சாப்பிட்டு நல்லா ஸ்ட்ராங்கா இருந்துச்சுங்களாம். இந்த மாடுகளை எப்படியாவது சாப்பிடணும்னு புலி ஒண்ணு ரொம்ப நாளா முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு.
ஒரு ஊர்ல வாழைத்தோப்பு ஒண்ணு இருந்துச்சாம். அந்தத் தோப்புக்குள்ள நிறைய பூச்சிகள் சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்துச்சாம். அதுல ஒரு வெட்டுக்கிளி, ஒரு தும்பி, ஒரு கம்பளிப்பூச்சி, ஒரு வண்ணத்துப்பூச்சி, ஒரு சித்தெறும்பு ஆகிய அஞ்சும் ரொம்ப ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்களாம்.
ஆண்கள் தங்கள் குழந்தை மகப்பேறின்போது உடன் இல்லையென்றாலும் கொண்டாடப்படுகிறார்கள், உடன் இருந்தாலும் போற்றப்படுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு சாய்ஸாக இருக்கிறது. பெண்களுக்கு இறக்கி வைக்க முடியாத சுமையாக இருக்கும் குழந்தை கடமைகளில் கிடைப்பதெல்லாம் மனஉளைச்சலும் குற்றவுணர்வும்தான். `இப்படியெல்லாம் தியாக உருவாக இருப்பவள்தான் சிறந்த அம்மா, அது தன்னிகரில்லாத ஓர் உன்னத உணர்வு' என்று தாய்மையை ரொமான்ட்டிசைஸ் செய்வதை நிறுத்தி, அப்பாக்களின் கைகளும் குழந்தைகளின் டயப்பரை சுத்தம் செய்யலாம் என்று தந்தைமையை செயலுக்குக் கொண்டுவருவது எப்போது?
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளில் காவலர்களே ஈடுபடும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குற்றத்தில் ஈடுபடும் காவலர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும்? சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் இதற்கான விடையை நமக்கு அளிக்கக்கூடும். #VoiceOfAval