We post ancient siddhargal songs and their correct explanation to help people evolve themselves and understand what real spirituality is all about
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ? கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். ராமதேவர் பாடல்
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! சிவவாக்கியர்
மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே முக்காலைக் காணாமல் என் கண்ணம்மா முழுதும் தவிக்கிறண்டி! அழுகண்ணர் பாடல்
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச் சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன் வேகாத காலறியேன் விதிமோச மானேனடி நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா! நொடியில்மெழு கானேனடி அழுகண்ணர் சித்தர்
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மய மானவர்கள். பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்கு வரத்துதானே மெய்யென்று சொன்னவர்கள் அகப்பேய் வீடு பெறலாமே. அகப்பேய் சித்தர்
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித் தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா வாழ்வெனக்கு வாராதோ அழுகண்ணி சித்தர்
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே ஔவையார் பாடல்
அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்; பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்; பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்; மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு; சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே. வால்மீகர் பாடல்
ஊணியதோர் ஓங்காரம் மேலுமுண்டே உத்தமனே சீருண்டே யூணிப்பாரே ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும் ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கிநிற்கும் ஏணியா யிருக்குமடா அஞ்சுவீடே ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப்பாரு தோணிபோற் காணுமடா அந்தவீடு சொல்லாதே ஒருவருக்குந்துரந்திட்டேனே. அகத்தியர் பாடல்
அறிவிலே ப பிறந்திருந்து ஆகமங்கள் ஓதுறீர், நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர், உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணைதேடும் அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே? சிவவாக்கியர் பாடல்
சொல்லுகிறேன் வாருதிபோற் கபநீர்வீழும் சோதிக்கி லண்ணாக்கிற் குறியைக்கேளு மல்லுகிறேன் சுழிமுனையின் ராகுகேது மைந்தனே சங்கொடுசக் கரம்போல்நிற்கும் அல்லுகிறேன் பேருரவி மதிதானென்பார் ஆச்சரிய மிடையின்னா யமர்ந்தநாக்கு கொல்லுகிறே னென்றுசொல் ஜனங்களைத்தான் கூட்டியல்லோ கபத்தையுள்ளே வளர்க்குந்தானே. சட்டை நாதர் பாடல்
உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே; அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்; கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி; கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு, துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே. அகத்தியர் பாடல்
காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக் கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்; பூணுகின்ற இடைகலையில் பம்பரம்போ லாடும் பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும் ஆணவங்களான வெல்லா மழிந்து போகும் பத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்; ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்; ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே. அகத்தியர் பாடல்
சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்; அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்; அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி; உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்; ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று; நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா! நாதர்களி லிதையாரும் பாடார் காணே! அகத்தியர் பாடல்
துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்; துரியமாய் நடுநிலையை யூணிப் பாராய்; அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்; உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும் நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா! நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே. அகத்தியர் பாடல்
ஆணவத் தால்வந்த காயம் அதில் ஐவரிருந்து தொழில் செய்யும் ஞாயம் காணவ மாம்போகு மாயம் நன்றாய்க் கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம். மூடர் உறவு பிடியாதே நாரி மோக விகாரத்தால் நீ மடியாதே ஆடம் பரம் படியாதே-ஞான அமுதம் இருக்க விஷம் குடியாதே. மலை சித்தர்
தாண்டவமா யங்குனின்று விளையாடுங் கூத்தை சந்ததமும் விலகாமல் பிசகாமற்றான் தூண்டி லல்லோ தீபவொளி ஜோதிகாணுந் தூண்டாமல் தூண்டுவது சுழினைதானே நந்தி தேவர் பாடல்
பேசினதால் வருவதென்ன பொருளையெல்லாம் பிதற்றினதால் பலித்திடுமோ பேயேசொல்லு மாசிமறு வில்லாத நிலைமையுள்ள மனதைனெடு நாட்பழக்கத் தாலேகண்டு தேசியென்ற குதிரைவழி நடத்துமார்க்கஞ் செப்புவாய் ஞானமென்ற போதந்தன்னை வீசிவிளை யாடுகின்ற காலம்பார்த்து விளங்கவே ரவிமதியின் விபரஞ்சொல்லே. நந்தி தேவர் பாடல்
பிள்ளையென்றா லவரல்லோ போக ருக்குப் புகழான ரிஷிகளெல்லாஞ் சித்த ரென்பார் தள்ளையென்றா லவர்தாமூலரிடம் போன சச்சிதா னந்தவின்ப மான பிள்ளை கொள்ளையென்றா லவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியைப் கேட்டு மீண்டார் பிள்ளையென்று வந்ததனால் கீர்த்தி யாச்சு வேதாந்த அந்தமெல்லாம் வெளியாய்ப் போச்சே. அகத்தியர்
ஊணுதற்கு வாசிகொண்டு உடலிலூத உத்தமனே யோகமென்று உரைத்திட்டேனே உரையான ததைக்கண்டால் ஞானமப்பா உத்தமனே புலஸ்தியனே உண்மைகேளு நிறையான ரூபமடா சத்தி சத்தி நேர்ந்தசபை சிவமாக நின்றுதையா மறையாத கணபதிகுண் டலியோகங்காரம் மண்பிரமண் மால் நீராம் வன்னிருத்ரன் குறையாத கால்மயே சுரன்விண் ணப்பா கூரான சதாசிவனாங் குறையைந்தாச்சே. அகத்தியர் பாடல்
பண்ணப்பா குஷ்டமொடு கறப்பான் போக பண்பொன்று சொல்லுகிறேன் மைந்தா கேளு நண்ணப்பா பரங்கியுட பட்டை வாங்கி நலமான பழச்சாற்றில் ஊறல் போட்டு விண்ணப்பா ரவிபடவே உலறப் போட்டு விசையாக இப்படியே பத்து முறை பண்ணு தண்ணப்பா நன்றாக உலர்ந்த பின்பு தாக்கி நன்றாய் இடித்து வடிக் கட்டிடாயே கட்டாகச் சிவனார் தன் வேம்பை வாங்கி கண்டமதாய் நருக்கிக குழித் தயிலம் வாங்கி திட்டம தாய் தயிலமதில் பட்டைத் தூளும் சேர்த்து நன்றாய்ப் பிசைந்துருட்டி வைத்துக் கொண்டு மட்டாத நெல்லிக்காய் அளவு கொண்டால் மாறாத கிரந்தியொடு சூலை புண்கள் தொட்டவுடன் ஓடுகின்ற குஷ்ட ரோகம் சொரி சிரங்கு பெருஞ்சிரங்கு இனங் ககேளே அகத்தியர் பாடல்
ஒடுமே வலியோங்குங் குடைச்சலும் காடு வசம்பு கருது மமுக்கரா தேடு மதுரந் தேர்ந்த ரோகணியும் நீடு மல்லி நெருங்கு மனிச்சையே ஏகு மெண்ணெ யெழிலான வாமணக் பாகு மொன்றாய்க் கலந்துமே காச்சியே பாகு மேனியில் பகரவே பூசிடியில் போகு மேல்வலி பொருந்தப் பறக்குமே. தேரையர் பாடல்
மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும் மூன்றுமஞ் சும்எழுத்துமாய் முழங்குமவ் எழுத்துளே ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும் தோன்றுமண்டத்திலே சொல்லவெங்கும் இல்லையே. சிவவாக்கியர் பாடல்
மோகமென்ற வுரலுக்குள் மனந்தான் சிக்கி முசியாம லிடிப்பதற்கைம் பொறியுங் கோல்தான் பாகமென்ற கோபம் வந்தே யுருவாய் நின்று பதையாமற் சண்ணிச்சே யுலக மெல்லாந் தாகமென்ற ஞானம்வந் தென்ன செய்யும்? சண்டாள இந்திரியச் சார்பி னாலே வேகமென்ற மனலகரி யைத்தான் கொண்டு விண்ணுக்கு ளேநிற்க வெளியாய்ப் போமே. சட்டைமுனி பாடல்
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின் நாலுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில் பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம் ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை உண்மையே. சிவவாக்கியர் பாடல்
ஒன்றுமொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான ணதொன்றுமே கற்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால் அன்றுதெய்வ ம்உம்முளே அறிந்ததே சிவாயமே. சிவவாக்கியர் பாடல்
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின்ஓரிலை நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல் பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம் பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே. சிவவாக்கியர் பாடல்
மூலநாடி தன்னிலே முளைதேழுந்த சோதி நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம ஆகலாம் ஆலமுண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே சிவவாக்கியர் சித்தர்
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் நம்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ ஐம்புலனை வென்றிடா தவத்தமே உழன்றிடும் வம்பருக்கும் ஈவதுங் கொடுப்பதும் அவத்தமே. சிவவாக்கியர் பாடல்
காக்கைமூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய் ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில் பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே. சிவவாக்கியர் பாடல்
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப் பிடாரி கோயிலில் பொங்கல் வைத்தும் ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட நங்க சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய் உங்கள் குல தெய்வம் உம்மை உரு குலைப்ப துண்மையே. சிவவாக்கியர் பாடல்
காதரான காதரும் கலத்திலுள்ள சைவரும் கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம் வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும் பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே. சிவவாக்கியர் பாடல்
பன்னிரண்டு கால் நிறுத்திப் பஞ்சவர்ணம் உற்றிடின் மின்னியே வெளிக்குள்நின்று வேரிடத்து அமர்ந்ததும் சென்னியாம் தலத்திலே சீவனின்று இயங்கிடும் பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம மானதே. சிவவாக்கியர் பாடல்
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகார ணத்திலே நாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய் ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல் பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே. சிவவாக்கியர் பாடல்
வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர் வேணுமென்று தேடினாலும் உள்ளதல்ல தில்லையே வேணும்என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின் வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாண லாகுமே. சிவவாக்கியர் பாடல்
எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே. சிவவாக்கியர் பாடல்
இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும் ஒன்றிநின்றதை எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே. சிவவாக்கியர் பாடல்
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமா மாடுமக்கள் பெண்டீர்சுற்றம் என்றிருக்கு மாந்தர்காள் நாடுபெற்ற நண்பர்கையில் ஓலைவந்து அழைத்தபோது ஆடுபெற்ற தவ்விலை பெறாதுகாணும் இவ்வுடல். சிவவாக்கியர் பாடல்
சிட்டர்ஓது வேதமும் சிறந்தஆக மங்களும் நட்டகார ணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும் கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின். சிவவாக்கியர் பாடல்
அல்லல்வாசல் ஒன்பது மறுத்தடைந்த வாசலும் சொல்லுவாசல் ஓரைந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே. சிவவாக்கியர் பாடல்
ஓம்நமசி வாயமே உணர்ந்மெய் உணர்ந்தபின் ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின் ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே. சிவவாக்கியர் பாடல்
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே ஆகிலும் அழகிலும் அதன்கணேயம் ஆனபின் சாதிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே. சிவவாக்கியர் பாடல்
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே ஆகிலும் அழகிலும் அதன்கணேயம் ஆனபின் சாதிலும் பிறக்கிலும் இல்லை இல்லை இல்லையே. சிவவாக்கியர் பாடல்
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகார ணத்திலே நாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய் ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல் பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே. சிவவாக்கியர் பாடல்
அறிவிலே புறந்திருந்து ஆகமங்கள் ஓதுறீர், நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர், உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணைதேடும் அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே? சிவவாக்கியர் பாடல்
காணப்பா பூரணத்தைக் கண்டு பேசி கைமுறையாய் கொண்டதினால் காணும் சித்து வீணப்பா என்று சொல்லி நினைத் தாயானால் வேதாந்தம் சித்தாந்தம் இரண்டுங் கிட்டா தானப்பா தாமவனாய் தன தாய் அந்தத் தன்மையுள்ள பூரணத்தின் நன்மையாலே தூ ணப்பா துரும்பா குந் துரும்பு தூணாம் சொல்லாதே இந்நூல் தான் குரு நூலாமே. அகத்தியர் பாடல்
புலத்தியருக்கு தமதனுபவ முரைத்தல் உண்டான சேதியடா இன்னமொன்று உரைக்கிறேன் புலத்தியனே உண்மையாக அண்டர் தொழுஞ் செகஜோதி தன்னைக் காண ஆராலும் கூடுமடா அப்பா கேளு பண்டையிலே விட்டகுறைக் காரனென்றால் பரம குருபதம் போற்றிப் பணி குவான் கேள் கண்டனடா குருபதத்தை யென்று சொல்வான் காசினியில் வாய்பிலுக்காய் கருதுவானே. அகத்தியர் பாடல்
ஏறுகின்ற மூலாதா ரத்தில் நின்ற என் மகனே புலத்தியனே யிசைந்து கேளு மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறி மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம் வேறு துறை யேதுமில்லை மவுனத் தூட்டு வேதாந்த சுழிமுனையின் நாட்ட மாகும் தேறுமப்பா கற்பமது மவுனத் தாலே ஜெகசாலச் சித்தகலை மவுனந்தானே அகத்தியர் பாடல்
க்கலியுலகினிலே மக்களைப் பெறுவதிலும் மிக்கநல்விவேகமூட்டணும் - பெரியார்கட்கு தக்கமரியாதைகாட்டணும். தந்தைதாய்பெரியவர்க்கு வந்தனைகள் செய்திடாது நிந்தனைபுரிதல்தகுமா - அவர்கள் மனம் நொந்திடில் வினைகள் போகுமா? சித்ரமுத்து அடிகளார்
கிட்டினா லென்னபலன் தானுமப்பா கீர்த்தியுள்ள புலத்தியனே சொல்வேன்கேளு நிட்டையிலே தாமிருந்து நேமம்பூண்டு நீங்காத கவலையுடன் பிறர்காணாமல் துட்டரென்னுங் கர்மிகளைத் தாமகற்றி துப்புரவாய் பத்தியுடன் வினையங்கொண்டு சட்டமுட னடந்தவற்கு யெல்லாஞ்சித்தி சதுரான புண்ணியற்கு லபிக்குந்தானே. அகத்தியர் பாடல்
சொல்லுகிறேன் வாருதிபோற் கபநீர்வீழும் சோதிக்கி லண்ணாக்கிற் குறியைக்கேளு மல்லுகிறேன் சுழிமுனையின் ராகுகேது மைந்தனே சங்கொடுசக் கரம்போல்நிற்கும் அல்லுகிறேன் பேருரவி மதிதானென்பார் ஆச்சரிய மிடையின்னா யமர்ந்தநாக்கு கொல்லுகிறே னென்றுசொல் ஜனங்களைத்தான் கூட்டியல்லோ கபத்தையுள்ளே வளர்க்குந்தானே. சட்டை நாதர் பாடல்