Kathai Solli

Follow Kathai Solli
Share on
Copy link to clipboard

Reading out aloud, Tamil stories for kids. When we read to kids, they develop interest in reading, extend their attention span and stretch their imagination. Let our children explore the treasure.

Kathai Solli


    • Jun 23, 2021 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 2m AVG DURATION
    • 45 EPISODES


    Search for episodes from Kathai Solli with a specific topic:

    Latest episodes from Kathai Solli

    ஆயிரம் காசுகள் - 45வது கதை

    Play Episode Listen Later Jun 23, 2021 4:26


    எல்லாரும் தான் தெய்வத்திடம் வேண்டுவாங்க. முனுமுனுமுனுன்னு நிறைய காசு வேணும், பணம் வேணும், நகை வேணும் இன்னும் என்னென்னல்லாமோ வேண்டுவாங்க. நஸ்ருதீன் ஹோட்ஜாவும் வேண்டுவார். ஆனா அவர் கொஞ்சம் வித்தியாசமா வேண்டுவார். கொஞ்சம் சத்தம் போட்டு வேண்டுவார். “தெய்வமே! எனக்கு ஆயிரம் தங்கக்காசுகள் வேணும். ஆயிரம் காசு. அதுக்கும் குறையா ஒரு காசு நீ கம்மியா குடுத்தாலும் எனக்கு வேண்டாம். ஆயிரம்னா ஆயிரம் தான்.” அப்படின்னு தினமும் வேண்டுவார். இது இவரோட பக்கத்து வீட்டுக்காரருக்கும் கேட்கும். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர் நஸ்ருதீன் ஹோட்ஜாவ சும்மா சீண்டிப்பாத்து விளையாடலாம்னு நினைச்சாரு. ஒரு பையில எண்ணி சரியா தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தங்கக் காசுகளை போட்டு வைச்சுக்கிட்டாரு. அதாவது ஆயிரத்துக்கு ஒரு காசு கம்மி. நஸ்ருதீன் ஹோட்ஜா தெய்வத்திடம் காசு வேணும்னு வேண்டும்போது, அவர் வீட்டுக்குள்ள அந்தப் பையை ஜன்னல் வழியா தூக்கிப் போட்டாரு. நஸ்ருதீன் ஹோட்ஜா தன் பக்கத்துல வந்து விழுந்த அந்தப் பையைப் பார்த்ததும் “ஆஹா! தெய்வம் நம்ம வேண்டுதலை நிறைவேத்திருச்சு.”ன்னு சந்தோஷமா அந்தப் பைக்குள்ளப் பார்த்தாரு. அட! பூராந் தங்கக் காசு. அப்படியே அங்கயே கொட்டி ஒன்னுவிடாம எண்ணிப் பாத்தாரு. தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது. திரும்பவும் எண்ணிப் பாத்தாரு. திரும்பத் திரும்ப எண்ணிப் பாத்தாரு. இருந்ததென்னவோ தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தான். “என்னடா, நம்ம தெய்வத்திடம் ஆயிரம் காசு கேட்டோம். ஆனா இதுல ஒன்னு குறையா இருக்கே. சரி பரவால்ல. இவ்ளோ குடுத்த தெய்வம் இன்னொன்னு குடுக்காமையா போகும்.”ன்னு நினைச்சுட்டே, குடுத்த தெய்வத்துக்கு நன்றிய சொல்லிட்டு, பைய மடில முடிஞ்சாரு. இதையெல்லாம் வெளிலருந்து பாத்துட்டேயிருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், “ஏய், ஏய், ஏமாத்துக்காரா.. ஒரு காசு கம்மியா குடுத்தாலும் வேணாம்னு வேண்டிட்டு இப்ப எடுத்து மடில வைச்சுக்கிட்டியே. குடுய்யா என் காச”ன்னு நஸ்ருதீன் ஹோட்ஜாட்ட சண்டைக்குப் போனாரு. “காசு தரணுமா? எதுக்கு?” ஹோட்ஜா கேக்க, “அது எல்லாம் என் காசுதான். உன்னை சோதிச்சுப் பார்க்க நான் தான் போட்டேன்”ன்னு சொன்னார். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முத்திப்போச்சு. பிரச்சனைய தீர்க்க நீதிமான் கிட்ட போலாம்னு சொன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். அதுக்கு ஹோட்ஜா, “அது முடியாது. எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலி. அவ்ளோ தூரம் என்னால நடந்து வர முடியாது”ன்னு சொன்னாரு. “அப்படியா, அப்போ என் கழுதை மேல் உக்காந்து வா”ன்னு சொன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். “இல்லல்ல, நீதிமான் முன்னாடி போய் நிக்க என்கிட்ட நல்ல துணிமணி கூட இல்ல”ன்னாரு ஹோட்ஜா. “அப்படியா, இதோ நான் தர்றேன் நல்ல உடுப்பு உனக்கு. போலாம் வா”ன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். பக்கத்து வீட்டுக்காரரோட புது உடுப்பையும் போட்டுட்டு, அவரோட கழுதை மேலேயே உக்காந்துட்டு, நீதிமான்ட்ட போனாரு ஹோட்ஜா. பக்கத்து வீட்டுக்காரர் நீதிமான்ட்ட ஹோட்ஜாவின் வேண்டுதல் பத்தியும், தான் காசு போட்டது பத்தியும் சொன்னாரு. நீதிமான் எல்லாத்தையும் கேட்டுட்டு ஹோட்ஜாவைப் பாத்து, இதுக்கு நீ என்னப்பா சொல்றேன்னு கேட்டாரு. ஹோட்ஜா அதுக்கு, “நான் என்னத்தங்க சொல்றது. இவரு எப்பவுமே இப்படித்தான். மத்தவங்க பொருட்களை தன்னோடதுன்னு சொல்லி வம்புக்கு வருவாரு. இப்போ நீங்களே பாருங்களேன். இந்த கழுதை யாருதுன்னு கேட்டா தன்னோடதுன்னு சொல்வாரு பாருங்களேன்”ன்னாரு. நீதிமான் அதே மாதிரி பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து இந்தக் கழுதை யாருடையதுன்னு கேட்க, அவரும் அது தன்னோடதுன்னு சொன்னார். திரும்பவும் ஹோட்ஜா நீதிமான்கிட்ட, “ஐயா பாத்தீங்களா பாத்தீங்களா இப்போ நான் போட்டிருக்க சட்டையும் கூட அவருதுன்னு சொல்லுவாரு பாருங்களேன்”ன்னாரு. பக்கத்து வீட்டுக்காரரும் உடனே, “ஆமாம் அந்த சட்டையும் என்னுடையது தான்”னு சொன்னாரு. உண்மையிலேயே அந்த கழுதையும் சட்டையும் அவரோடது தானே. இதையெல்லாம் பார்த்த நீதிமான் தீர்ப்பு சொன்னாரு, “மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களை நீ உன்னுடையது என்று முறையிடுவது தவறு” என்று எச்சரித்து அனுப்பினாரு. தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தங்கக்காசுகளும் போய், இப்போ கழுதையும், ஒரு நல்ல உடுப்பும் போய், அந்த பக்கத்து வீட்டுக்காரர் பரிதாபமாய் நின்றார். தன்னை மன்னித்து தன்னுடையதைத் தந்துவிடுமாறு ஹோட்ஜாவிடம் வேண்டினார். ஹோட்ஜா புன்னகையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவருடையை பணத்தையும் கழுதையையும் உடுப்பையும் திருப்பித் தந்தார். அந்த பக்கத்து வீட்டுக்காரர் அதன்பின் ஹோட்ஜாவிடம் எந்த வம்பும் செய்வதேயில்லை.

    ஊரெல்லாம் டாக்டர்ஸ் - 44வது கதை

    Play Episode Listen Later Jun 15, 2021 2:04


    ஒரு நாள் ராஜாவும் மந்திரியும் பேசிகிட்டு இருந்தாங்க. ராஜா மந்திரியிடம் நம்ம ராஜ்ஜியத்தில நிறைய மக்கள் பலவகையான தொழில் செய்றாங்க. எந்த தொழில் மிக பிரபலமாக இருக்கிறதுன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு. டாக்டரா? விவசாயியா? தொழிலாளியா? Government வேலையா? இத நீங்க கண்டுபிடிச்சி சொல்லுங்க ன்னார் . மந்திரியும் சரி ன்னார். சில நாள் கழிச்சு மந்திரி ராஜாகிட்ட வந்து நம்ம ராஜ்ஜியத்தில டாக்டர்ஸ் தான் அதிகமா இருக்காங்க என்றார். அத நான் எப்படி நம்புறதுன்னு கேட்டறாரு ராஜா. நீங்க வேணும்ன்னா மாறுவேடம் அணிஞ்சு என் கூட ஊர் சுற்றி பாருங்க உங்களுக்கே நான் சொல்றது தான் சரின்னு தெரியும் என்றார் மந்திரி. ராஜாவும் சரின்னு ஒத்துக்கிட்டார். மாறுவேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் மறுநாள் காலையில ஊரு சுத்தி பார்க்க கிளம்புனார். கையில் ஒரு bandage கட்டிக்க கொண்டு வந்தார் மந்திரி. என்ன ஆச்சு? என்று கேட்டார் ராஜா. மனைவி வீட்டில் இல்லை. நான் சமையல் செய்தப்போ கையை சுட்டுக் கொண்டேன். என்று சொன்னார் மந்திரி. இரண்டு பேரும் ஊருக்குள் சென்றனர். ஒரு சாதாரண நபர் போல் வேடம் அணிந்து ராஜா மந்திரியுடன் போனாங்க. நகரத்துல பலபேருக்கு மந்திரியை தெரியும். தெரிஞ்சவங்க மந்திரியை நலம் விசாரிச்சாங்க. எல்லோரும் கையில் ஏற்பட்ட காயத்திற்கு அட்வைஸ் கூறினாங்க. தேங்காய் எண்ணெய் தடவ சொன்னார் ஒருத்தர். பச்சிலை தடவ சொன்னார் இன்னொருத்தர். கத்தாழைச் சாற்றை காயம்பட்ட இடத்தில் தடவினால் சீக்கிரம் சரியாகிவிடும்ன்னு சொன்னார் மற்றொருத்தர். இப்படி எல்லோரும் மந்திரிக்கு மருந்துக்களை அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருப்பதை ராஜா பார்த்தார். சிரிச்சிக்கிட்டே மந்திரியின் புத்திசாலித்தனத்தை எண்ணி பாராட்டினார். ஊரெல்லாம் டாக்டர்ஸ் தான்னு ராஜா ஒத்துக்கிட்டார்.

    பெரிய்ய்யப் பரிசு - 43வது கதை

    Play Episode Listen Later Jun 10, 2021 1:55


    ஒரு நாள், விவசாயி ஒருத்தர் தன் ஏர் கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு தன் வயலுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போ ஒரு வேலியோரம் எதேர்ச்சையாகப் பார்வை பட, ஏதோ ஒன்று பெரிதாகக் கண்ணில் பட்டது. “இவ்ளோ பெருசா!” நம்ப முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தார். நன்றாக உருண்டு திரண்ட ஒரு பெரிய பரங்கிக்காய் அது. “இவ்ளோ பெரிய பரங்கிக்காய் நான் இதுவரை பார்த்ததில்லை” என்று ஆச்சரியப்பட்டார். இந்த அதிசயப் பரங்கிக்காயை ராஜாவிற்குப் பரிசளிக்கலாம் என்று தலையில் தூக்கிக்கொண்டு ராஜாவின் மாளிகைக்கு நடந்தார். பெரிய்ய்யப் பரங்கிக்காயைப் பார்த்ததும் ராஜாவுக்குப் பரவசம். “உலகிலேயே இதுதான் மிகப்பெரியப் பரங்கிக்காயாக இருக்க வேண்டும்” என்று ஆச்சரியமாகக் கூறினார் ராஜா. விவசாயியின் அன்பளிப்பைப் பெற்று மகிழ்ந்து, அவருக்குப் பொற்காசுகள் பரிசளித்து அனுப்பிவைத்தார். விவசாயியின் அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. அதைக் கேள்விப்பட்டார் ஒரு பணக்கார வியாபாரி. “பரங்கிக்காய்க்கேப் பொற்காசுகளா! அப்போ ராஜாவுக்கு என்னிடமுள்ள இந்த அழகிய முத்துமாலையைப் பரிசளித்தால் அவர் எனக்கு என்னென்ன பரிசுகள் தருவார். வண்டி நிறைய வைரமும் ரத்தினமும் தருவாரோ?”என்ற ஆசையில் ராஜாவின் மாளிகைக்குச் சென்றார். அந்த முத்து மாலையை ராஜாவுக்குப் பரிசளித்தார். “ஆ! என்ன ஒரு அழகான முத்துமாலை” என்று ராஜாவும் அந்த முத்துமாலையைக் கண்டு மகிழ்ந்தார். “இந்த அழகான முத்துமாலைக்கு ஈடாக நான் உங்களுக்கு என்ன கொடுக்க முடியும்? இவ்வளவு விலை உயர்ந்த பரிசை எனக்களித்த உங்களிடம் ஏற்கனவே பொன்னும் பொருளும் ஏராளமாக இருக்கவேண்டும். அதனால் வேறொரு அரிய, பெரிய, அதிசயப் பொருளை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்.” என்று, விவசாயி கொண்டுவந்த அந்த பெரிய பரங்கிக்காயை வியாபாரிக்குப் பரிசளித்து அனுப்பினார் ராஜா. ஏமாற்றத்துடன், அந்தப் பெரிய்ய்ய்யப் பரங்கிக்காயைத் தலையில் தூக்கிக்கொண்டு நடையைக் கட்டினார் வியாபாரி.

    சூரியனும் காற்றும் - 42வது கதை

    Play Episode Listen Later Jun 7, 2021 2:00


    ஒரு இலையுதிர் காலத்துல சூரியனுக்கும் காற்றுக்கும் சண்டை வந்துச்சாம். நான் உன்னை விட வலிமையானவன்னு காற்று சூரியனைப் பார்த்து சொல்லிச்சாம். ம்ஹும் இல்லவே இல்லன்னு சூரியன் மென்மையா சொல்லிச்சாம். அப்ப அந்த பக்கமா போர்வை போர்த்திக்கிட்டு பயணி ஒருத்தர் நடந்து போய்ட்டு இருந்தத சூரியனும் காற்றும் பார்த்தாங்க. நம்ம ரெண்டு பேர்ல யார் பயணிக்கிட்ட இருந்து போர்வைய பிரிக்கிறாங்களோ அவங்கதான் வலிமையானவங்க அப்படின்னு சூரியன் சொல்லிச்சாம். காற்றும் ஐ இது நல்லா இருக்கேன்னு ஒத்துக்குச்சாம். முதல்ல பயணிக்கிட்ட இருந்து போர்வைய நான் தான் எடுப்பேன்ன்னு சொல்லிச்ச்சு காற்று. ஓகே நீயே பண்ணிக்கோன்னு சொல்லுச்சி சூரியன். காற்று வீச ஆரம்பிச்சது. பயணி தன்னுடைய போர்வைய நல்லா சுத்திக்கிட்டாரு. காற்று இன்னும் பலமா வீசுச்சாம். பயணி தன்னுடைய போர்வைய இறுக்கிப் பிடிச்சிக்கிட்டாரு. காற்று கடினமா விசுச்சாம். பயணி தன்னுடைய போர்வைய இன்னும் கெட்டியா பிடிச்சிகிட்டாரு. காற்று வேகமா வீச வீச பயணி தன் போர்வைய நல்லா விடாப்படியா பிடிச்சிக்கிட்டாரு. வேற வழி இல்லாம காற்று தன் தோல்விய ஒத்துக்கிச்சாம். இப்போ நான் ட்ரை பண்றேன்னு சொன்ன சூரியன் பயணி போற திசையை அன்போட பார்த்தது. பயணிக்கு வேர்க்க ஆரம்பிச்சது. இறுக்கமா போர்த்திட்டு இருந்த போர்வைய கொஞ்சம் தளர்வாக்கினாரு. சூரியன் பயணியின் திசையைப் பார்த்து அதிகமா சிரிச்சசாம். சூரியனோட வெம்மைய பயணி உணர்ந்து போர்வைய பிரிச்சாரு. காற்று தன்னைவிட சூரியன் தான் வலிமையானவர்ன்னு ஒத்துக்கிச்சாம். சூரியன் புன்னகையோடு ஓகே சொல்லிச்சாம். பலத்தை விட திறமைதான் பெஸ்ட்.

    லட்சம் பறவைகள் - 41வது கதை

    Play Episode Listen Later May 7, 2021 3:11


    லட்சம் பறவைகள் ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும். நாட்டு மக்கள் அவர்கிட்ட தினமும் புதுசு புதுசா கதை சொல்லிகிட்டே இருப்பாங்க. ராஜா அவங்ககிட்ட அப்புறம் என்னாச்சு? கதை அவ்ளோதானா? வேற கதை சொல்லுங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாரு! யாராலையும் மன்னரின் கதைப்பசிக்கு தீனி போட முடியல. அரசருக்கு நாட்டுல கதை சொல்றவங்க குறைஞ்சிட்டாங்களோன்னு எண்ணம் வந்துருச்சி! அதனால ஒரு அறிவிப்பு வெளியிட்டார். யார் வேணுமுனாலும் ராஜாகிட்ட வந்து கதை சொல்லலாம். ராஜா எப்போ போதும் , கதை சொல்றது நிறுத்துன்னு சொல்றாரோ அதுவரைக்கும் அவங்க விடாம கதை சொல்லணும். அப்படி கதை சொல்றவங்களுக்கு 1000 தங்க நாணயங்களை வெகுமதி தர்றதா அறிவிச்சார் ராஜா. பல பேர் மன்னர்க்கிட்ட கதை சொன்னாங்க ஆனா யார்கிட்டயும் ராஜா கதை சொல்றது போதும்ன்னு சொல்லவேயில்லை. இன்னும் சொல்லு ! அடுத்தது என்ன? ன்னு கேட்டுகிட்டே இருந்தாரு ! கதை சொல்றவங்களோட முயற்சி தோல்வியிலதான் முடிஞ்சது. ஒரு நாள் காலையில ஒரு விவசாயி ராஜாகிட்ட வந்து மன்னர் தன்னை நிறுத்துன்னு சொல்றவரைக்கும் நான் ஒரு கதை சொல்வேன்னு சொன்னார். மன்னரும் சரின்னு சொல்லிட்டு கதை கேட்க உட்கார்ந்தார். விவசாயி கதை சொல்ல ஆரம்பிச்சார். ஒரு காலத்துல ஒரு பெரிய வேட்டைக்காரன் இருந்தான். அவன்கிட்ட ஒரு பெரிய வலை இருந்தது. அவன் ஒரு பெரிய காட்டுக்குப் போயி அந்த வலையை விரிச்சான். மதியத்துலயே லட்சக்கணக்கான பறவைகள் அவன் விரிச்ச வலையில சிக்கிருச்சி. ஆனா அதிர்ஷ்டவசமா அந்த வலையில ஒரு சின்ன துளை இருந்தது. சிறகடிச்சு முதல் பறவை தப்பிச்சிருச்சு. அப்புறம் என்னாச்சு ? கேட்டார் ராஜா. சிறகடிச்சு இரண்டாவது பறவை தப்பிச்சிருச்சி ! பிறகு ? ன்னு கேட்டார் அரசர். சிறகடிச்சு மற்றொரு பறவை பறந்து சென்றதுன்னாரு விவசாயி ! இப்படியே விவசாயி கதையை தொடர்ந்தார். ராஜா கேட்டுகிட்டே இருந்தாரு! விவசாயியும் மற்றொரு பறவை பறந்ததுன்னு சொல்லிகிட்டே இருந்தாரு ! லட்சம் பறவைகள் பறக்கிற வரைக்கும் விவசாயி இப்படியே தான் சொல்லிகிட்டே இருப்பாருன்னு புரிஞ்சிருச்சி மன்னருக்கு. இறுதியா ராஜா விவசாயியை கதை சொல்றது நிறுத்துன்னு சொல்லி 1000 தங்க நாணயங்கள் பரிசா கொடுத்தார். மன்னர் அப்புறம் ஒருபோதும் இந்த மாதிரி சவாலை முன்வெக்கல !

    எலி பொம்மை - 40வது கதை

    Play Episode Listen Later May 4, 2021 3:45


    எலி பொம்மை ஊர் தலைவரின் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மக்கள் எல்லோரும் விருந்துக்கு வந்திருந்தாங்க. அப்போ வீட்டுத் திண்னையில் எலி ஒண்ணு போறத பார்த்தாரு தலைவர். உடனே அவருக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோணுச்சு. அங்க இருந்த மக்கள்கிட்ட யார் தத்ரூபமா ஒரு எலி பொம்மைய செய்றாங்களோ அவங்களுக்கு 1000 ரூபாய் சன்மானம்ன்னு அறிவிச்சாரு. வேடிக்கையான யோசனையா இருந்ததால மக்கள் எல்லோரும் ஆர்வமாகிட்டாங்க. அதுல ஒருத்தர் தலைவர்கிட்ட எலி பொம்மையை நல்லா செஞ்சாங்கன்னு யார் தீர்ப்பு சொல்லுவா ? ன்னு கேட்டாரு. அதுக்கு தலைவர் எங்க வீட்டுல பூனை இருக்கு. அந்த பூனை எந்த எலி பொம்மைய எடுக்குதோ அந்த பொம்மைய செஞ்சவருக்குத்தான் பரிசு அப்படின்னு அறிவிச்சாரு. பூனைய விட எலிய யாருக்கு நல்லா தெரியும்ன்னு மக்களும் ஒத்துக்கிட்டாங்க. எல்லோரும் ஆவலா பங்கெடுத்துக்கிட்டாங்க. ஒருத்தர் எலிய குண்டா பண்ணினார். இன்னொருத்தர் எலியின் வால் அளவ பெருசா பண்ணினார். மற்றொருத்தர் எலியோட வண்ணம் மற்றும் உடலமைப்பை அப்படியே செஞ்சார். தலைவர் சொன்ன நாள்ல அவரவர் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சாங்க. அதுல ராஜீவ் என்கிற சிறுவனும் தான் செஞ்ச எலி பொம்மைய காட்சிக்கு வெச்சான். அவனது பொம்மை பார்க்கிறதுக்கு எலி மாதிரியே தெரியல. மக்களும் இது எலிதானா? போட்டி என்னனு தெரியுமா ? அப்படின்னு அவனை கிண்டல் பண்ணினாங்க. அவன் அமைதியா இருந்தான். தலைவர் தன் வீட்டு பூனைய எலி பொம்மைங்க கிட்ட விடுறதுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்த பொம்மைகள பார்த்தாரு. அவரும் ராஜீவ் கிட்ட வந்து தம்பி உன்னுடைய பொம்மை எலி மாதிரியே தெரியலயே. வெற்றி பெறும் வாய்ப்பும் உனக்கு இல்ல. போட்டியில கலந்துக்காத அப்படின்னு சொன்னாரு. அவன் ஒத்துக்கல. பூனையை எலி பொம்மைங்க முன்னாடி கொண்டு வர சொன்னாரு தலைவர் . பூனை வந்தது. தரையில வரிசைப்படுத்தி வச்சிருந்த எலி பொம்மைகளை பார்த்தது. தன பொம்மையை தான் எடுக்கும்ன்னு நினைச்சிட்டு இருந்தவங்க பொம்மையை பூனை எடுக்கல. ராஜீவ் செஞ்சிருந்த எலி பொம்மைய கவ்விக்கிட்டு ஓடிருச்சு. எல்லோருக்கும் ஏமாற்றம். மக்கள் யாரும் பூனையின் தீர்ப்பை ஒதுக்கல. தலைவர் மக்கள்கிட்ட நானும் அவன் பொம்மை எலி மாதிரியே இல்லை அப்ப்டிங்கிறத ஒத்துகிறேன்.ஆனா பூனை அவன் செஞ்ச எலியத் தான் எடுத்தது. மனுசன விட எலிகளை பத்தி பூனைகளுக்குத் தான் நல்லா தெரியும்ன்னு சொல்லி பரிசு பணத்த ராஜீவ் கிட்ட கொடுத்தார் தலைவர். அவன தனியா அழைச்சிட்டு போய் உன் பொம்மைய ஏன் எடுத்தது பூனை அப்படின்னு கேட்டாரு தலைவர். அதற்கு ராஜீவ் ஐயா நடுவராக பூனைக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சி நான் என் களிமண் எலி பொம்மைய கருவாடோட சேர்ந்து செஞ்சேன், அதனாலத்தான் ஜெய்ச்சேன்னு சொன்னான். ஊர் தலைவர் அசந்து போய்டடாரு. --- கதை மூலம்: Tinkle

    புஷ்டி லேகியம் - 39வது கதை

    Play Episode Listen Later Apr 28, 2021 2:32


    புஷ்டி லேகியம் ஒரு ஆடு. செவந்திப்பட்டில தான் அதோட வீடு. அந்த ஊருக்குப் பக்கத்துல ஒரு பெரிய காடு. பக்கத்து ஊர்ல இருக்க தன் சொந்தக்காரங்களைப் பாக்கப் போகணும்னா அந்தக் காட்டு வழியாத்தான் போகணும். அப்படி ஒருநாள், தன் சொந்தக்காரங்களைப் பாக்க, கையில குடம் நிறையத் தேன் எடுத்துட்டு, அந்தக் காட்டு வழியா ஆடு போயிட்டு இருந்துச்சு. அப்போ திடீர்னு, சொழுஞ்சொழுன்னு மழை பிடிச்சுருச்சு. நனைஞ்சுட்டேப் போக முடியாது, எங்கயாவது கொஞ்சம் ஒதுங்கி நிக்கலாம்னு பாத்துச்சு ஆடு. பக்கத்துலயே ஒரு குகை தெரிஞ்சுது. சரி மழை விடுற வரை அங்க இருப்போம்னு குகைக்குள்ள போச்சு. மழைல நனைஞ்ச சட்டை துணிமணில்லாம் புழிஞ்சுட்டு இருந்துச்சு. யாரோ வர்ற காலடி சத்தம் கேட்டுத் திரும்பி குகை வாசலைப் பார்த்தா, ஐயோ! சிங்கம் ஒன்னு, புலி ஒன்னு, பத்தாதத்துக்குக் கூடவே நரி ஒன்னு. என்னடா இது வந்த இடத்துல வம்பாப்போச்சுன்னு ஆடு திருதிருன்னு முழிச்சுது. அப்போ சிங்கம் ஆட்டைப்பார்த்து, “பயப்படாதீங்க! மழைல நல்லா நனைஞ்சுட்டீங்க போல. நாங்களும் மழைக்குத்தான் இங்க ஒதுங்கினோம்.”ன்னு சொல்லுச்சு. ஆடு ஆனா அதை நம்பல. சமயம் கிடைச்சா இவனுங்க நம்மள அடிச்சு விருந்து வைச்சுருவானுங்க. ஏதாவது பண்ணி மூணு பேரையும் இங்க இருந்து கிளப்பனுமேன்னு யோசிச்சுது. சிங்கமும் தானா வந்து பேச்சு குடுத்தது. “அந்தக் குடத்துல என்ன?”ன்னு ஆட்டைப் பாத்து கேட்டுச்சு. அதுக்கு ஆடு புத்திசாலித்தனமா, “ஓ, இதுவா! இது புஷ்டி லேகியம். ஒரு மருந்து. சாப்பிட்டா உடம்புக்கு ஒரு புதுத் தெம்பு வரும். கை கால்லாம் பலம் பெரும்.”ன்னு சொல்லுச்சு. “அப்படியா. அப்போ எனக்கும் கொஞ்சம் கொடேன். கை கால்லாம் வெடவெடங்குது.” ன்னு சொல்லுச்சு சிங்கம். “ஓ. கண்டிப்பா தரேன். ஆனா இதுல இன்னும் சிலது சேர்க்கணும். அப்போதான் இந்த மருந்து வேலை செய்யும்”ன்னு சொல்லுச்சு. “ஒன்னும் பிரச்சனை இல்ல. இன்னும் என்ன வேணும்னு சொல்லு. நான் ஏற்பாடு பண்றேன்”ன்னு கேட்டுச்சு சிங்கம். “ஒன்னுமில்ல. அதுல நரி வாலை நறுக்கி போட்டு நல்லா அரைக்கணும்”ன்னு சொல்லுச்சு ஆடு. சிங்கம் அப்படியே லேசாத் திரும்பி அங்க இருந்த நரியைப் பார்க்க, “அய்யய்யோ. ஆளை விடுங்கடா சாமி”ன்னு நரி அங்கருந்து ஓட்டம் பிடிச்சது. “டேய், டேய்.. நில்றா நில்றா”ன்னு சிங்கம் நரியைத் துரத்திட்டேப் போச்சு. அப்போ தனியா அங்க இருந்த அந்தப் புலியைப் பார்த்து ஆடு சொல்லுச்சு, “நல்லவேளை! நீ தப்பிச்ச”ன்னு. அதுக்கு, “ஏன் அப்படி சொல்ற”ன்னு புலி கேட்க, “இல்ல இல்ல.. நரி வாலோட சேத்து, புலிப் பல்லையும் புடுங்கி லேகியத்துல போடணும். ஆனா நான் தான் அதை சிங்கத்துக்கிட்ட சொல்லல”ன்னு ஆடு சொல்லுச்சு. “ஆகா.. இது விவகாரமான ஆடா இருக்கும்போலயே”ன்னு நினைச்ச புலி உடனே, “சரி.. மழை விட்டுருச்சுன்னு நினைக்குறேன். நான் அப்படியே கிளம்புறேன்”ன்னு சொல்லிட்டு அங்கருந்து நடையைக் கட்டியது. ஒரு வழியா இவனுங்கட்டருந்து தப்பிச்சோம் பிழைச்சோம்னு அங்கருந்து ஓட்ட ஓட்டமா தன் சொந்தக்காரங்களைப் பார்க்கப் போச்சு ஆடு. --- கதை மூலம்: The Goat's Medicine (Tinkle #020) - Story by Dr. S. Patel

    சாமர்த்தியம் - 38வது கதை

    Play Episode Listen Later Apr 21, 2021 3:02


    சாமார்த்தியமாக ஒரு இளைஞன் எப்படி முதலாளியை வென்றான் என்ற கதை. --- கதை மூலம்: Tinkle

    ராணியின் தீர்ப்பு - 37வது கதை

    Play Episode Listen Later Mar 18, 2021 4:10


    யார் உண்மையான குற்றவாளி என்று ராஜாவால் கண்டு பிடிக்க முடியவில்லை. ராணி விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அப்படி வழக்கு என்ன? வாங்க கேக்கலாம்..

    நதி நிறைய வைரம் - 36வது கதை

    Play Episode Listen Later Mar 10, 2021 2:06


    பிழைப்பிற்காக நகரம் செல்ல தீர்மானத்த ராமு வழியில் திருடர்களிடம் அகப்பட்டுக் கொண்டான்.  அவர்களிடமிருந்து தப்பித்தானா? அவன்  கொண்டு சென்ற வைரம் என்னவானது? தெரிந்து கொள்ள  இந்த கதையைக் கேளுங்கள்..

    காணாமற் போன பசுமாடு - 35வது கதை

    Play Episode Listen Later Mar 8, 2021 3:30


    பொழுது விடியுமுன்னே எழுந்து, பால் கறக்க வாளியைத் தூக்கிக்கொண்டு போனான் குப்பண்ணா. பட்டியில் போய்ப் பார்த்தால் பசுமாட்டைக் காணோம். சரி, கட்டு அவிழ்ந்துகொண்டு, அக்கம்பக்கத்து வயலில் போய் மேய்ந்துகொண்டிருக்கும் என்று தேடிப்பார்த்தான். அங்கேயும் காணவில்லை. பாவம் அவன்; ஏழை விவசாயி. ஒற்றைப் பசுமாட்டை வளர்த்து, அது தரும் பாலைக் கறந்து விற்றுத்தான் வருமானம் அவனுக்கு. முதலுக்கே மோசம் போல், இப்போது அந்த பசுமாட்டைக் காணவில்லை. “ஐயா, என் மாட்டைப் பார்த்தீர்களா?.. அம்மா, என் மாட்டைப் பார்த்தீர்களா?.. பட்டியில் தானே கட்டியிருந்தேன். எப்படிப் போச்சோ தெரியலியே?” என்று ஊர்க்கார்களிடம் புலம்பினான். ஆனால் யாருக்கும் அவன் மாட்டைப் பற்றிய விவரம் தெரியவில்லை. “அப்போ, இரவு எல்லோரும் தூங்கும்போது யாரோ திருடன் மாட்டை ஓட்டிக் கொண்டுபோயிருக்க வேண்டும்” என்று அனுமானித்துக்கொண்டான். தன் மாடு களவுபோனதைப் பற்றி ஊர்த்தலைவரிடம் சென்று தெரிவித்தான். அவர் அதை விவரமாகக் கேட்டுக்கொண்டு, ஊரிலுள்ள மற்ற விவசாயிகளிடம் திருடர்களைப் பற்றி எச்சரித்தார். “சரி, நரி தின்னக் கோழி கூவப் போறதில்ல.. காணாமப் போன மாடு இனி நமக்கு பால் தரப் போறதில்ல.. இன்னைக்குத் திங்கக்கிழம மேலப்பட்டி சந்தை. போனா ஒரு நல்ல பசுவாப் பாத்து வாங்கி வரலாம்” என்று நினைத்துக்கொண்டான். பால் விற்று சிறுகச்சிறுகச் சேர்த்தக் காசு மொத்தமும் எடுத்தக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். செவலை, செம்பூத்து, பால் வெள்ளை, காரி என பல நிறங்களில் மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. நல்ல ஒரு மாடாக வாங்க வேண்டும் என்று சந்தை முழுதும் தேடி அலைந்தான் குப்பண்ணா. அங்கே தூர, அவனது மாடு போலவே ஒரு மாடு இருப்பதைக் கண்டு அருகில் போய்ப் பார்க்க, “அட.. இது நம்ம மாடு.. கள்ளப்பய எவனோ நம்ம மாட்டத் திருடி இங்க விக்க ஓட்டி வந்திருக்கானே..” என்று எண்ணிக்கொண்டு, தன் மாட்டை வைத்துக்கொண்டிருந்தவரிடம் போய் முறையிட்டான். “ஐயா, இது என் மாடு.. இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?” என்று கேட்டான் குப்பண்ணா. மாட்டை வைத்திருந்தவர் அதற்கு, “கிடைச்சதா? இது என் மாடப்பா.. நான் இதை ரெண்டு மூணு வருஷமாவே வளர்த்து வரேன்.” என்றார். இது நம்ம மாடு என்று எப்படி நிரூபிப்பது என்று யோசித்த குப்பண்ணா, சட்டென மாட்டின் இரு கண்களையும் தன் இரு கைகளால் பொத்திக்கொண்டு, “ஐயா ஊர்க்காரங்களே! இங்க கேளுங்க.. இது என் மாடு. நேத்து ராத்திரிலருந்து காணல. ஆனா இது இவர் மாடுன்னு விக்க ஓட்டி வந்திருக்காரு. உண்மையிலேயே இது இவர் மாடுன்னா, இந்த மாட்டுக்கு ரெண்டு கண்ணுல எந்த கண்ணு குருடுன்னு இவர் சரியா சொல்லட்டும், நான் இந்த மாட்டைக் கேக்கல.. இதுக்கு நீங்கல்லாம் சாட்சி” என்றான். அதற்கு அந்தத் திருடன், திகைத்துப் போய், ‘இடது கண் குருடு' என்று உத்தேசமாகச் சொன்னான். “இடது கண்ணா?..” என்று குப்பண்ணா இழுக்க, “இல்லை.. இல்லை.. வலது கண்..” என்று இப்போது மாற்றிச் சொன்னான் அந்தத் திருடன். “ஐயா.. நீங்களே பாத்தீங்க.. முதலில் இடது கண் என்று சொன்னாரு. இப்போது வலது கண் ங்கிறாரு. ஆனால் உண்மையில் என் மாட்டிற்கு எந்தக் கண்ணிலும் பழுதில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.” என்றான் குப்பண்ணா. அசட்டுத்தனமாக மாட்டிக்கொண்ட திருடன் அங்கிருந்து நழுவப் பார்க்க, சுற்றி நின்ற ஊர் மக்கள் அவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குப்பண்ணா அவன் மாட்டை ஓட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினான். --- கதை மூலம்: Tinkle #006

    மந்திரத் தொப்பி - 34வது கதை

    Play Episode Listen Later Mar 4, 2021 6:24


    வினை விதைத்தவன் வினையறுப்பான் எனும் கருத்தில் அமைந்த, சிவா என்கிற ஒரு புத்திசாலி இளைஞனின் கதை. --- கதை மூலம்: Tinkle Double Digest #006

    ஒரு குட்டி ஆட்டின் கதை - 33வது கதை

    Play Episode Listen Later Mar 1, 2021 1:47


    தன் தனித்துவத்தையும் வலிமையையும் அறிந்த ஒரு குட்டி ஆட்டின் கதை.

    தலை தப்பியது - 32வது கதை

    Play Episode Listen Later Feb 25, 2021 2:06


    கதை மூலம்: Tinkle Double Digest #006ல் வெளியான ஒரு படக்கதையின் தமிழாக்கம்.

    கரடி சொன்ன இரகசியம் - 31வது கதை

    Play Episode Listen Later Feb 24, 2021 1:29


    கரடி சொன்ன இரகசியம் அடர்ந்த காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். திடீரென்று பெரிய கரடி ஒன்று எதிரே வருவதைப் பார்த்தனர். ஏய்! கரடி! கரடி! ஓடு! ஓடு! இருவரும் ஓட்டம் பிடித்தனர். ஓடும்போது கால் இடறி ஒருவன் மட்டும் கீழே விழுந்துவிட, மற்றவன் ஓடி மரத்தில் ஏறிக்கொண்டான். “டேய்! கால்ல அடிபட்டுருச்சுடா.. வந்து தூக்கிவிடுறா..” என்று விழுந்தவன் உதவி கேட்டான். மரத்தில் தொற்றிக்கொண்டிருந்தவன் உடனே, “எதுக்கு? கரடி வந்து என்னையுங் கடிக்கிறதுக்கா? போடா..” என்று, நண்பனுக்கு உதவாமல் தான் தப்பித்துக்கொண்டால் போதும் என்று மரத்திலேயே இருந்துவிட்டான். கரடி நெருங்கி வருவதைக்கண்டு, கீழே விழுந்தவன், மூச்சைப் பிடித்துக்கொண்டு பிணம் போலப் படுத்துக்கொண்டான். கரடி அவன் முகத்தருகே வந்து முகர்ந்து பார்த்தது. அவன் அசைவற்றுக் கிடக்கவே, வந்த வழியே போய்விட்டது. கரடி தூரப் போய்விட்டதா என்று எட்டிப் பார்த்துவிட்டு மரத்திலிருந்து இறங்கினான் மற்றவன். கீழே விழுந்தவன் மெல்லக் கையூன்றி எழுந்துகொண்டிருக்கையில், அவன் வந்து “என்ன? கரடி வந்து உன் காதுல எதோ சொன்னமாதிரி இருந்துச்சு!” என்று கேட்டான். “ஆமாண்டா, சொல்லுச்சு! கஷ்டம் வரும்போது காப்பாத்தாதவன்லாம் நண்பனே இல்லன்னு சொல்லுச்சு” என்றான் கோபமாக. --- கதை மூலம்: Tinkle #004

    ஆற்று நீர் உனதா எனதா? - 30வது கதை

    Play Episode Listen Later Feb 22, 2021 5:47


    ஒரு ராஜா இருந்தார். அப்பப்போ அவர் ஏதாவது முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிடுவார். அது நாட்டு மக்களுக்கு பெரும் கேடாக முடியும். அவருக்கு அமைந்த மந்திரி நல்ல அறிவாளி. ராஜாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது மந்திரி தான். இப்படியாகப் போய்க்கொண்டிருந்தது. ஒரு கோடைக்கால இரவு. தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தார் ராஜா. மணிக்கூண்டிலிருந்து ‘தொம்'மென்று முரசு ஒலித்தது. மணி ஒன்று. மணிக்கொருமுறை ‘தொம் தொம்' என்று ஒலித்துக்கொண்டிருக்கும். ஆறாவது முறையாக முரசு ஒலித்ததும் ராஜா எழுந்தார். இரவு சரியான தூக்கம் இல்லாததனால் சோர்வாக இருந்தது அவருக்கு. பசுமை நிறைந்த நாட்டுப்புறத்திற்குச் சென்றால் கொஞ்சம் உற்சாகமாக இருக்குமே என்று நினைத்தார். “யாரங்கே!” என்று சேவகரை அழைத்தார். சேவகர் வந்து வணங்கியதும் அவரிடம், “மந்திரியை ஆயத்தமாக இருக்கச்சொல். என் குதிரையையும் கிளப்பச் சொல்.” என்று ஆணையிட்டார். காலை உணவை முடித்துவிட்டு, மந்திரியையும் மேலும் சில காவல் வீரர்களையும் அழைத்துக்கொண்டு ராஜா புறப்பட்டார். சாலையோரம் பசுமையான மரங்கள், செடி,கொடிகள்,பயிர்கள் அடர்ந்த வயல்வெளி வழியே ஒரு மணிநேரத்திற்கும் மேல் சென்றனர். விளைந்து நின்ற வாழை, தென்னை, கம்பு, சோளம், நெல் மேலும் அழகழகான பூக்கள் இவை கண்டு ராஜா உற்சாகமானார். “ராஜா! இப்போது எப்படி இருக்கிறது உங்களுக்கு” என்றார் மந்திரி. “ம்.. அமோகம் அமைச்சரே அமோகம்!” என்று கூறிவிட்டு, “எனக்குக் கொஞ்சம் தாகமாக இருக்கிறது. அந்த ஆற்றங்கரைக்குச் செல்வோம்” என்று அனைவரையும் அழைத்துச் சென்றார் ராஜா. தெள்ளத்தெளிவான அந்த நீரோட்டம் கண்டு மகிழந்த ராஜா, “ஆமாம், இந்த நீர் எங்கே போகிறது?” என்று மந்திரியைக் கேட்டார். அது கீழை தேசத்திற்குப் பாய்கிறதைச் சொன்னார் மந்திரி. சட்டென வெகுண்ட ராஜா, “என்ன? நம்முடைய ஆற்று நீர் அடுத்த நாட்டிற்குப் பாய்வதா? உடனடியாக நிறுத்துங்கள் இதை” என்று ஆணையிட்டார். “ஆனால் ராஜா..” என்று மந்திரி ஆரம்பிக்க, “ஆனாவும் இல்லை ஊனாவும் இல்லை. உடனடியாக இங்கே அணையைக் கட்டி ஆற்று நீரைத் தேக்க வேண்டும்” என்றார் ராஜா. ராஜாவின் ஆணைப்படி ஓரிரு மாதங்களில் அணை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் நீரின் ஓட்டத்தைத் தடுத்து அணையைக் கட்டியதால் நீர் தேங்கி கரை வழிந்து ஊர்ப்புறங்களில் நீர் புகுந்தது; வயல்கள் வெள்ளக்காடாயின. மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று மந்திரி எச்சரித்தார். “அதனால் என்ன? நம்முடைய ஆற்று நீர் நமக்கே ஆயிற்றே” என்று பெருமையுடன் சொன்னார் ராஜா. ஊர் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. நீரைத் தடுத்ததற்கு கீழை நாட்டு மன்னன் நம் மீது போர் தொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. என்ன செய்வது? எப்படி ராஜாவைக்கொண்டே அந்த அணையை உடைக்கச்செய்வது? என்று சிந்தனையில் ஆழ்ந்தார் மந்திரி. ஒரு யோசனை தோன்றியது அவருக்கு. மணிக்ககூண்டிற்குச் சென்று முரசு கொட்டுபவரிடம், “வழக்கமாக நீ மணிக்கொருமுறை முரசு கொட்டுவாயல்லவா! இன்று இரவு அரை மணிக்கொருமுறை முரசு கொட்டவேண்டும்” என்று பணித்தார். அதன்படியே, இரவு மூன்று மணிக்கெல்லாம் ஆறாவது முரசு ஒலிக்க, காவலில் இருந்த வீரர்கள் துணுக்குற்றனர். தூங்கிக்கொண்டிருந்த மற்ற காவலர்களையும் எழுப்பினர். அதற்குள் மணி ஆறாகிவிட்டதா? ஆனால் சூரியன் இன்னும் உதிக்கவில்லையே! என்று வியந்தனர். வியப்பு சிறிது நேரத்தில் பயம் ஆனது. ஊரிலுள்ள அனைவரையும் எழுப்பி சூரியன் உதிக்காததைக் கூறினர். இப்போது பதைபதைப்பு ராஜாவின் அரண்மனைக்குள்ளும் தொற்றிக்கொண்டது. படைத்தளபதி ராஜாவை எழுப்பி சூரியன் உதிக்காததைக் கூறினார். உதயநேரம் ஆகியும் சூரியன் உதயமாகாதது கண்டார் அரசர். உடனே மந்திரியை அழைத்து வரச்சொன்னார். மந்தரி வந்ததும், “என்னவாக இருக்கும்? ஏன் இன்று சூரியன் உதிக்கவில்லை?” என்று பரபரத்தார் ராஜா. மேலும் படிக்க https://chevichelvam.com/kathaisolli/ஆற்று-நீர்-உனதா-எனதா

    ஓங்கி அடிக்க ஒண்ணரை காசு - 29வது கதை

    Play Episode Listen Later Feb 9, 2021 2:04


    ஓங்கி அடிக்க ஒண்ணரை காசு சுமார் ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர், இன்றைக்கு துருக்கி என்று வழங்கப்படுகின்ற தேசத்தில் வாழ்ந்தவர் நஸ்ருதீன் ஹோட்ஜா. அவர் ஒரு சூஃபி ஞானி. அவர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான நிகழ்வு இது. ஒருநாள் மதிய நேரம், ஹோட்ஜா தெருவின் ஓரமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் ஹோட்ஜாவின் பின்னால் வந்து அவர் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தார். ஹோட்ஜா அலறித் துடித்து, “ஏய், யாரது? என்னை ஏன் அடித்தாய்?” என்று கத்தினார். “ஓ! என்னை மன்னித்துவிடுங்கள்! நான் என் நண்பரோ என்று நினைத்து அடித்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்றார் அடித்தவர். “அப்படியா? அதை வந்து நீதியரசரிடம் சொல்லுங்கள். நான் அவரிடம் புகார் கொடுக்கப்போகிறேன்” என்று கூறி அவரை நீதியரசரிடம் அழைத்துச் சென்றார் ஹோட்ஜா. ஆனால் அவரை அடித்த அந்த நபரும் நீதியரசரும் நண்பர்கள் என்று ஹோட்ஜாவுக்குத் தெரியாது. ஹோட்ஜாவின் புகாரைக் கேட்டுக்கொண்ட நீதியராசர், குற்றவாளியாக நின்ற தன் நண்பரை விசாரித்தார் — “நீர் இந்த அப்பாவி மனிதரை அடித்தீரா?” “ஆம்ம்.. ஆமாம்.. அடித்தேன் ஐயா” என்றார் அவர். “அப்படியானால் அவரை அடித்ததற்குத் தண்டனையாக நீர் அவருக்கு ஒண்ணரை காசு அபராதமாக தரவேண்டும்” என்று நீதியரசர் தீர்ப்பளித்தார். என்ன.. வெறும் ஒண்ணரை காசுகள் தானா? — நீதியரசரின் ஒருதலைப்பட்சமான அந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்தார் ஹோட்ஜா. தண்டனை பெற்ற நபரோ தன்னிடம் தற்போது காசு இல்லை என்றார். அப்படியானால் வீட்டிற்குப் போய் எடுத்து வந்து ஹோட்ஜாவிடம் கொடுக்குமாறு அவரை அனுப்பிவைத்தார் நீதியரசர். தன்னை அடித்த நபருக்கு நீதியரசர் சகாயம் செய்வதை உணர்ந்தார் ஹோட்ஜா. வருத்ததுடன் காத்திருந்தவருக்கு ஒரு யோசனை வந்தது. நீதியரசரின் முதுகுக்குப் பின்னால் சென்று, ஹோட்ஜா, நீதியரசரின் முதுகில் பளீரென்று ஒரு அடி வைத்தார். “ஓங்கி அடிக்க ஒண்ணரை காசு தானே. என்னை அடித்தவர் வந்து தருவதை நீரே வாங்கிக் கொள்ளும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். நீதி தவறியதற்காக அடிபட்டார் நீதியரசர். --- கதை மூலம்: Tinkle #001

    முயல் விடு தூது - 28வது கதை

    Play Episode Listen Later Jan 26, 2021 4:10


    முயல் விடு தூது ஹாசன் ஒருநாள் மிகவும் வருத்தமாக இருந்தார். வியாபாரி எஸ்தி ஹாசனுக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார். எப்படியும் ஒருநாள் தன் பணத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று உறுதியாக இருந்தான் ஹாசன். வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார். அவரைக் கண்டதும் அவரது மனைவி அவரை வரவேற்று, “வந்துவிட்டீர்கள்! உங்களுக்குத்தான் காத்திருந்தேன்! உங்கள் நண்பர் அலி வந்தார். அவரால் இன்று மதியம் விருந்திற்கு வர இயலாதாம். ஆனால் நான் ஏற்கனவே சமைத்து விட்டேனே! என்ன செய்வது?” என்று கூறினார். “விருந்திற்கு என்ன சமைத்திருக்கிறாய்?” என்று கேட்டார் ஹாசன். பிரியாணி சமைத்திருப்பாதாகக் கூறினார் அவர் மனைவி. “ரொம்ப மகிழ்ச்சி! எனக்குத்தான் பிரியாணி பிடிக்குமே! அவ்வளவையும் நானே சாப்பிடப்போகிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினார். அப்போது, ஒரு மூலையிலே இரண்டு முயல்கள் கூண்டில் இருப்பது கண்டு மனைவியை ஏதென்று கேட்டார். அவரது நண்பர் அலி அன்பளிப்பாகக் கொண்டு வந்ததைக் குறிப்பிட்டார் மனைவி. அப்போது ஹாசனுக்கு ஓர் யோசனை தோன்றியது. விருந்துக்கு ஒருவரை அழைத்து வருவதாகக் கூறி, கையில் ஒரு முயலைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டார். நேரே தன்னை ஏமாற்றிய வியாபாரி எஸ்தியின் வீட்டிருக்குச் சென்று, “காலையில் உங்களை நான் கடுமையாகப் பேசிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். அதை நேர்செய்ய நான் உங்களுக்கு விருந்தளிக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் மறுக்காமல் வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். வியாபாரி எஸ்தியும் மகிழச்சியாக, விருந்துக்கு வருவதாகக் கூறினார். உடனே ஹாசன் தன் கையிலிருந்த முயலிடம், “குட்டி முயலே! நீ விரைந்தோடிப் போய் என் மனைவியிடம், நான் விருந்துக்கு ஒருவரை அழைத்து வருகிறேன். பிரியாணி தயாரித்து வைக்கச் சொல்லிவிடு” என்றார். கையிலிருந்த முயலை அவர் விடுவித்ததும் அது எங்கோ ஓடி மறைந்தது. வியாபாரி எஸ்திக்கு அந்த அதிசய முயலைக் கண்டு அளவில்லா ஆச்சரியம். “அந்த முயல் கண்டிப்பாக விஷயத்தை உன் மனைவியிடம் சொல்லுமா?” என்று ஹாசனைக் கேட்டார். ஹாசன் அதற்கு, “ஓ! கண்டிப்பாக. அந்த முயல் சேதி சொல்லப் பழக்கப்படுத்தப்பட்டது. இதற்கு முயல் விடு தூது என்று பெயர்” என்றார். மதியம் வியாபாரி எஸ்தி, ஹாசனின் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார். இருவரும் சுவையான பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர். அங்கே மூலையில் ஒரு முயல் கூண்டுக்குள் இருப்பதைக் கண்ட எஸ்தி ஹாசனிடம், “ஆக முயல் வந்து உன் மனைவியிடம் சேதியைச் சொல்லியிருக்கிறது!” என்று சொன்னார். ஹாசன், “அதிலென்ன சந்தேகம்!” என்றார். இந்த அதிசய முயல் தன்னிடம் இருந்தால் நண்பர்களிடம் காட்டி அசத்தலாமே என்று ஆசைப்பட்ட எஸ்தி ஹாசனிடம், முயலை தனக்கு விற்றுவிடுமாறு கேட்டார். ஈடாக 50.. 60.. 75.. பொன் தருவதாகக் கூறியும் ஹாசன் அதற்கு மறுத்துவிட்டார். எஸ்தி விடாமல் 100 பொன்னும் ஹாசனுக்கு முன்னரே அவர் தரவேண்டிய பணமும் சேர்த்துத் தருவதாகக் கூறினார். ஹாசன் அரை மனதாக ஒப்புக்கொள்வது போல், முயலை எஸ்திக்கு கொடுத்தார். பேசியபடி பணமும் ஹாசனின் கையில் வந்தது. முயலைப் பெற்றுக்கொண்ட எஸ்தி, முயலிடம், “குட்டி முயலே! ஓடிப்போய் என் மனைவியிடம் நான் இன்று மாலை தேநீருக்கு நண்பர்களை அழைத்து வருகிறேன். இனிப்பும் சேர்த்துத் தயாரித்து வைக்கச் சொல்லிவிடு” என்று கூறி முயலை கையிலிருந்து விடுவித்தார். முயல் ஓட்டமாக ஓடி எங்கோ மறைந்தது. மாலை வேளை, எஸ்தி தன் நண்பர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். மனைவியிடம் தேநீரும் இனிப்பும் தயாரா என்று கேட்டார். மனைவி அதற்கு, “முன்னரே சொல்லியிருந்தால் தயாராக வைத்திருப்பேனே” என்றார். நான் முயலிடம் சொல்லி அனுப்பினேனே! முயல் சொல்லவில்லையா?” என்றார் எஸ்தி. அவரது மனைவி குழப்பமாக, “எந்த முயல்? முயல் எப்படி சொல்லும்” என்று கேட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த எஸ்தி தன் நண்பர்களை அனுப்பிவிட்டு, நேரே ஹாசனிடம் சென்று முறையிட்டார், “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். உன் முயல் என் வீட்டிற்கு சென்று சேதி சொல்லவில்லை”. அதற்கு ஹாசன், “அது உன் தவறு. நீ உன் வீட்டு முகவரியை முயலிடம் தெரிவிக்கவில்லையே” என்று கூறி சமாளித்துவிட்டார். விழி பிதுங்கி நின்ற எஸ்திக்கு, தான் ஹாசனுக்குத் தரவேண்டிய பணம் வட்டியுடன் போய்ச் சேர்ந்தது அப்போது தான் புரிந்தது. --- கதை மூலம்: Tinkle Double Digest #16

    பூனைக்கு மணி கட்டுவது யார்? - 27வது கதை

    Play Episode Listen Later Jan 18, 2021 2:07


    பூனைக்கு மணி கட்டுவது யார்? எலியூர் என்ற ஊர் இருந்தது. அங்கே நிறைய எலிகள் ஒன்றாக அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தன. அப்போது திடீரென்று பூனை ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது. நிம்மதியாக வாழ்ந்து வந்த எலிக் குடும்பங்கள் இப்போது கலங்கி நின்றன. பூனை எப்போது தன்னையோ தன் குடும்பத்தாரையோ பிடித்துத் தின்னுமோ என்று எல்லா எலிகளும் அஞ்சின. இதற்குத் தீர்வு காண எலிசபை கூடியது. இந்தப் பூனைப் பிரச்சனைக்கு முடிவுகட்ட வழிதெரியாது சபையில் அனைவரும் திணற, அனுபவத்திலும் வயதிலும் மூத்த எலி ஒன்று முன்வந்து ஒரு திட்டத்தைச் சொன்னது. அந்தத் திட்டத்தின்படி, தங்கள் எலிக்கூட்டத்துக்கு நண்பனான ஒரு காக்கையை பூனையிடம் தூது அனுப்பி, பூனையை ஓட்டப்பந்தப் போட்டிக்கு அழைத்தன. அந்தப் போட்டிக்கு நடுவராக ஒரு பெரிய நாயை நியமித்தன. போட்டி நடக்கும் நாள் வந்தது. போட்டியில் ஏமாற்று வேலை செய்ய முயலவேண்டாம் என்று பூனையை அந்த நடுவாரான நாய் எச்சரித்திருந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் எலிகளிடம் அந்த மூத்த எலி வந்து ரகசியமாக, “நீங்கள் போட்டியில் கலந்துகொள்வது ஜெயிப்பதற்காக அல்ல, பூனைதான் ஜெயிக்கவேண்டும். அதனால் நீங்கள் பூனையைவிட மெதுவாக ஓடவேண்டும்” என்று சொன்னது. போட்டி ஆரம்பித்தது. மூத்த எலியின் யோசனைப்படி மெதுவாக ஓடிக்கொண்டிருந்த எலிகளை பூனை நாலு கால் பாய்ச்சலில் எளிதாக ஜெயித்தது. சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எலிக்கூட்டத்தின் முன்னேவந்து, “யாரை ஜெயிக்கப் பார்க்கிறீர்கள். எப்படி உங்களை ஜெயித்தேன் பார்த்தீர்களா!” என்று அலட்டிக்கொண்டது. தோல்வியை ஒப்புக்கொண்ட மூத்த எலி, பூனைக்குப் பரிசாக தங்கத்தால் ஆனா ஒரு மணியை தந்தது. நடுவர் நாய் அதைப் பூனையின் கழுத்தில் மாட்டி கௌரவித்தது. இனி பூனை எலிகளைப் பிடிக்க வரும்போது, பூனையில் கழுத்தில் உள்ள மணியின் ஓசை கேட்டு, எலிகள் தப்பித்துத் தங்கள் வளைகளில் ஒழிந்துகொள்ளலாம். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே உண்மையில் யார் ஜெயித்தது என்று! --- கதை மூலம்: Tinkle Double Digest #5

    அந்தக் காட்டிலே என்ன இருக்கிறது? - 26வது கதை

    Play Episode Listen Later Jan 4, 2021 1:36


    அந்தக் காட்டிலே என்ன இருக்கிறது? ஒரு ஊரில் மீனா என்ற சுட்டிப் பெண் இருந்தாள். அவள் நல்ல புத்திசாலிப் பெண். அவள் ஊருக்கு மேற்கே ஒரு அடர்ந்த காடு இருந்தது. மீனாவுக்கு அந்தக் காட்டினுள்ளே அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் அந்தக் காட்டிற்குள் போக வேண்டாமென அவளது பெற்றோர் எச்சரித்திருந்தனர். ஒருநாள் மீனாவின் பெற்றோர் அடுத்த ஊரில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றுவிட்டனர். அவர்கள் இல்லாத சமயத்தில் அந்தக் காட்டிற்குள் புகுந்து பார்த்துவிடுவதென மீனா முடிவெடுத்தாள். யாரும் பார்க்காதபோது காட்டிற்குள் நுழைந்தாள். அவள் காலடியில் மிதிபட்டு சருகுகள் ஓசை எழுப்பின. நடுக்காட்டிற்குள் நடந்துகொண்டிருக்கையில் திடீரென்று அங்கே ஒரு பெரிய பூதம் அவள் முன்னே வந்து நின்றது. அதைக் கண்டு திடுக்கிட்டாள் மீனா. அவளைவிடப் பத்து மடங்கு உயரமாக இருந்தது அந்த பூதம். “ம்ம்ம், என் மதிய உணவு நீதான்” என்று அவளைப் பார்த்துக் கூறி பயங்கரமாகச் சிரித்தது. “அதோ அங்கே இன்னொரு பூதம்” என்று கூறி பயந்தவளாய் பூதத்தின் பின்னே பார்த்தாள். அவள் காட்டிய திசையில் அந்த பூதம் திரும்பிப் பார்க்கையில் மீனா தப்பி ஓடினாள். நில்லாமல் ஓடி காட்டிற்கு வெளியே வந்தாள். நேரே வீட்டிற்குள் போய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டாள். பூதம் பெரிதாகவும் பருமனாகவும் இருந்ததால் அவளுக்கு ஈடுகொடுத்துத் துரத்திப் பிடிக்க இயலவில்லை. மீனாவின் சமயோசித புத்தி அவளைக் காப்பாற்றியது. அதன்பின் அந்தக் காட்டிற்குள் நுழைவதேயில்லை என்று சத்தியம் பண்ணிக்கொண்டாள். இப்படியாக மீனா அன்று தப்பித்தாள். --- "365 Moral Stories" என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

    தன்னம்பிக்கை - 25வது கதை

    Play Episode Listen Later Jan 1, 2021 1:11


    தன்னம்பிக்கை ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதைவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்துகொள்ள முன் வந்தான். “போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டிவிடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?” என்றார்கள். அவன் சொன்னான், “ஐயா, வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும், உயிரில்லையே” என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்றுவிடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள். அனைவரும் அறிந்த ‘முயல் – ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு ‘முயலாமை'யே காரணம். --- way2new தளத்தில் பகிரப்பட்டக் கதை

    தீய பழக்கங்கள் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 30, 2020 1:54


    தீய பழக்கங்கள் ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால், அவர் ஒரு வயது முதிர்ந்த ஞானியிடம் தனது பையனைத் திருத்த உதவி கேட்டார்.அந்த ஞானியும் ஒப்புக்கொண்டு அத்தொழிலதிபரின் பையனை சந்தித்து நடை பயணம் மேற்கொள்ள அழைத்து சென்றார். அச்சமயம் அவர்கள் இருவரும் வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கையில், அந்த வயதான ஞானி சிறுவனிடம் ஒரு சிறு செடியைக் காட்டி, “அதை உன்னால் பிடுங்க இயலுமா?” என்று கேட்டார்; சிறுவனும் உடனே அதைப் பிடுங்கிக் காட்டினான். பின்னர் ஞானி சற்று பெரிய தாவரத்தை காட்டி, “இதை பிடுங்க இயலுமா?” என வினவினார்; சிறுவனும் எளிதாகப் பிடுங்கிக் காட்டினான். சற்று தூரம் சென்ற பின் ஒரு முட்புதரைக் காட்டி, இதனைப் பிடுங்கிட முடியுமா என்று வினவ சிறுவனும் தனது சக்தியைப் பயன்படுத்தி அதைப் பிடுங்கிக் காட்டினான்; பின்னர் ஞானி ஒரு சிறிய மரத்தைக் காட்ட, பெரும்முயற்சி மேற்கொண்டு சிறுவன் அதை சாய்த்துக் காட்டினான். இப்பொழுது ஞானி வயது முதிர்ந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி பிடுங்குமாறு சிறுவனிடம் கூற, சிறுவன் செய்வதறியாது நின்றான். அப்பொழுது ஞானி சிறுவனிடம், “பழக்கங்களும் இது போன்றதே!தீயப் பழக்கத்தை முளையில் கிள்ளி எறிந்துவிடலாம். ஆனால் அது வளர்ந்து விட்டால், அதிலிருந்து விடுபட்டு நற்பழக்கங்களை மேற்கொள்வது கடினம்.” என்று கூறினார். --- Mom Junction தளத்தில் Soundarya Subbaraj அவர்கள் தொகுத்த குழந்தைகளுக்கான 15 சிறிய நீதிக்கதைகளிருந்து.

    யானையும் எறும்பும் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 28, 2020 1:00


    யானையும் எறும்பும் ஒரு காட்டில், ஒரு யானையும் எறும்பும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டே காலாற மலைஉச்சி வரை நடந்தன. அப்போது அந்த யானை எறும்பிடம் ஜம்பமாக  “நான் பலமாக மூச்சு விட்டால் கூட நீ பறந்து போவாய்” என்று ஏளனமாகக் கூறிச் சிரித்தது. அந்த யானைக்கு எப்போதுமே தான் வலியவன் பெரியவன் என்ற தலைக்கனம் இருந்தது. திடீரென்று அப்போது பூமி குலுங்கி, காலடியில் நிலம் பிளந்தது. அதிர்ந்த யானை கீழே விழுந்து முன்னங்காலை முறிந்துக்கொண்டது. ஆனால் எறும்பு லேசாக மிதந்து கீழே இறங்கியது. வலியில் பிளிறிகொண்டிருந்த யானையைப் பார்த்து எறும்பு, “நான் சிரியவனாக இருப்பதே எனக்கு மகிழச்சி” என்று கூறியது. வலியில் துடித்தத் தன் யானை நண்பனுக்குக்கு சிகிச்சையளிக்க மருத்துவரைத் தேடிப் போனது. --- "365 Moral Stories" என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

    கட்டை விரலும் மற்ற விரல்களும் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 27, 2020 0:49


    கட்டை விரலும் மற்ற விரல்களும் ஒருமுறை, எல்லா விரல்களும் கட்டை விரலுக்குப் போட்டியாகச் சேர்ந்து கொண்டன. தங்களைவிட கட்டை விரல் உயரம் குறைவாகவும் பருமனாகவும் இருப்பாதாகக் கூறி கேலி செய்தன. அதைக் கண்டு வருந்திய கட்டை விரல், இனி மற்ற விரல்களுடன் சேரக் கூடாதென எண்ணித் தனித்து அசையாமல் நின்றுகொண்டது. கை எதையாவது எழுதவோ பிடிக்கவோ முயன்றபோது கட்டைவிரலின்றி இயலவில்லை. மற்ற விரல்கள் இதைக் கண்டு கட்டை விரலின் அருமையை உணர்ந்தன. கட்டைவிரலிடம், “நீதான் பெருவிரல்” என்று கூறித் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரின. கட்டை விரலும் அவர்களை மன்னித்து அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய, கை மீண்டும் பலம் பெற்றது. --- “365 Moral Stories” என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

    கோபக்கார அரக்கன் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 26, 2020 1:18


    கோபக்கார அரக்கன் முன்னொரு காலத்தில், கோபக்கார அரக்கன் ஒருவன் இருந்தான். சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவான் அவன். கோபம் வந்தால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. ஒருநாள், அவன் தனக்கென ஒரு அழகான மரவீடு கட்டிக்கொள்ள ஆசைப்பட்டான். வீடு கட்ட, அந்தக் காட்டிலே உயரமாக வளர்ந்திருந்த மரத்தைத் தேர்ந்தெடுத்தான். பத்து நாட்கள் கடினமாக உழைத்து வீட்டைக் கட்டி, பதினோராம் நாள், வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தான். அப்போது பறந்து கொண்டிருந்த புறா ஒன்று எச்சமிட, அது அவன் தோள் மேலே விழுந்தது. அதனால் கோபம் கொண்ட அந்த அரக்கன், புறாவைத் தேடித் துரத்தினான். வெகுநேரம் தேடித் திரிந்த பின், ஒரு மரத்தின் மீது அந்தப் புறா அமர்ந்திருப்பது கண்டான். கண்டதும் அரக்கனுக்கு கோபம் கண்ணை மறைக்க, புறா அமர்ந்திருப்பது அவன் வீடு கட்டிய மரம் தான் என்பது தெரியாமல் அதை வெட்டி வீழ்த்தினான். கட்டிய வீடும் சரிந்தது. கண்மூடித்தனமானக் கோபம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். --- '365 Moral Stories' என்ற நூலிலிருந்து தெரிந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

    ஐஸ்கிரீம் என்னாச்சு? - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 26, 2020 0:44


    ஐஸ்கிரீம் என்னாச்சு? துளசி என்றொரு பெண் இருந்தாள். ஒருநாள், அவள் தன் நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கழைத்து ஐஸ்கிரீம் விருந்தளிக்க ஆசைப்பட்டாள். ஐஸ்கிரீம் செய்வதெப்படி என்று தன் தந்தையிடம் கேட்டறிந்து, தயாரித்து, அது உறைய ஃப்ரீசரில் வைத்தாள். சில நிமிடங்களிலேயே, பொறுமையிழந்தவளாய் ஃப்ரீசரைத் திறந்து ஐஸ்கிரீம் உறைந்துவிட்டதா என்று பார்த்தாள். அதெப்படி சடுதியில் உறையும்! பத்து நிமிடங்களுக்கொருமுறை ஃப்ரீசரைத் திறந்து பார்த்தாள். அவள் ஒவ்வொருமுறை திறக்கும்போதும் குளிர்க்காற்று வெளியேறியது. நான்கு மணி நேரம் கழிந்தும் உறையவில்லை. போதாக்குறைக்கு, துளசியின் நண்பர்கள் வரும் வேளையில், ஃப்ரிட்ஜ் பழுதானது. பொறுமையற்ற துளசியின் ஐஸ்கிரீம் விருந்தும் பாழானது. --- ‘365 Moral Stories' என்ற நூலிலிருந்து தேர்ந்த கதையின் தமிழாக்கம்.

    பேனாவும் பென்சிலும் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 25, 2020 0:37


    பேனாவும் பென்சிலும் ஒரு நாள், ஒரு பேனாவும் பென்சிலும் அருகருகே ஒரு மேஜையில் அமர்ந்திருந்தன. முன்மாலை நேரம், இருவரும் வேலை எதுவுமின்றி ஓய்வாகப் பேச ஆரம்பித்தனர். பேனா பென்சிலிடம் கேட்டது, “ஒவ்வொருமுறை உன்னை யாரேனும் பயன்படுத்தும் போதும் நீ தேய்கிறாயே, உனக்கு வருத்தமாக இல்லையா?” என்று. “முதலில் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. பின், என்னைக் கொண்டு அவர்கள் தீட்டும் அழகழகான ஓவியங்களைப் பார்க்கும்போது, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தேன்” என்று பதிலளிதத்து பென்சில். உன் நிலையின் நீ மகிழ்ச்சியாய் இரு. --- ‘365 Moral Stories” என்ற நூலிலிருந்து தேர்ந்த கதையின் தமிழாக்கம்.

    ஃபில்லின் புன்னகை - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 24, 2020 0:48


    ஃபில்லின் புன்னகை ஃபில் என்ற ஒரு பையன் இருந்தான். அவனுக்கு சந்தோஷமாகச் சிரிப்பது பிடிக்கும். எல்லோரைப் பார்த்தும் அவன் புன்சிரிப்பு சிரிப்பதுண்டு. கிறிஸ்துமஸ் தினத்து முதன்நாள், சாண்டா கிளாஸ் அவர்கள் பரிசுகளை அனைவருக்கும் கொடுப்பதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். துரதிஷ்டவசமாக, சாண்டா அவரது சிரிப்பைக் காணாமல் தேடிக் கொண்டிருந்தார். எங்கே வைத்தார் என்று தெரியவில்லை. சட்டென அவருக்கு ஃபில்லின் ஞாபகம் வந்தது. ருடால்ஃப் மான் வண்டியை இழுக்க, அவர் ஃபில்லின் வீட்டிற்கு வந்தார். ஃபில் கதைவைத் திறந்து சாண்டாவைப் பார்த்து மிகப்பெரிய புன்னகை புரிந்தான். அப்படித்தான் சாண்டாவிற்கு அவரது புன்னகை திரும்பக் கிடைத்தது! ஒரு சிறு புன்னகையும் பெரிய ஆச்சரியங்கள் புரியும். --- '365 Moral Stories' எனும் நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

    அடம்பிடித்தவள் - கதைசொல்லி - ஒரு நிமிடக்கதை

    Play Episode Listen Later Dec 23, 2020 0:40


    அடம்பிடித்தவள் ஒருநாள் காலை, வானில் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன. பள்ளிக்குச் செல்லும்போது குடையை எடுத்துச் செல்லுமாறு அவளுக்கு அறிவுறுத்தினாள் அம்மா. அதற்கு அவள், “மழையில் நனைந்தால் என்ன, சட்டென உடைகள் காய்ந்துபோகும். கவலை வேண்டாம், அம்மா” என்றாள். தாய் கூறியது போலவே மழை பெய்தது. அவளும் நனைந்து விட்டாள். நாள் முழுதும் ஈர உடையிலே இருந்தாள். காய்ச்சல் கண்டது அவளுக்கு. அதனால் மருத்துவரைப் பார்க்க நேர்ந்தது. அவரும் அவள் குணமுடைய பல கசப்பான மருந்துகளைத் தந்தார். தாய் கூறியதைத் தட்டியதை எண்ணி வருந்தினாள். வருமுன் காப்பதே நல்லது. --- '365 Moral Stories' என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

    சுண்டெலிக் கல்யாணம் - அழ. வள்ளியப்பா - பஞ்ச தந்திரக் கதை

    Play Episode Listen Later Dec 16, 2020 2:37


    வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு, விஷ்ணு சர்மா என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் ஒரு கதையே இது. தமிழில் ஆக்கியது அழ. வள்ளியப்பா திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 1962) பதிப்பித்தது.

    முத்து மாலை - அழ. வள்ளியப்பா - பஞ்சதந்திரக் கதை

    Play Episode Listen Later Dec 15, 2020 1:11


    வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு, விஷ்ணு சர்மா என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் ஒரு கதையே இது. தமிழில் ஆக்கியது அழ. வள்ளியப்பா திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 1962) பதிப்பித்தது.

    நான்கு நண்பர்கள் - அழ. வள்ளியப்பா - பஞ்சதந்திரக் கதை

    Play Episode Listen Later Dec 14, 2020 3:30


    வெகு காலத்துக்கு முன்பு பாடலிபுரத்து அரச குமாரர்களுக்கு, விஷ்ணு சர்மா என்பவர் சொன்ன கதைகளே பஞ்சதந்திரம். அந்த மணி மணியான கதைகளில் ஒரு கதையே இது. தமிழில் ஆக்கியது அழ. வள்ளியப்பா திருநெல்வேலி எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், குழந்தைகள் தினத்தன்று (14 நவம்பர் 1962) பதிப்பித்தது.

    வித்தைப் பாம்பு - அழ வள்ளியப்பா - சிறுகதை

    Play Episode Listen Later Dec 12, 2020 8:53


    வித்தைப் பாம்பு கதை மூலம்: லயிக் ஃபுடேஹள்ளி தமிழில்: அழ. வள்ளியப்பா ‘பாம்புக்குப் பகை கீரி' என்று பாடப் புத்தகத்திலே படித்திருக்கிறோம். ஆனால், பாம்பும் கீரியும் விளையாட்டுச் சண்டை போடும் வித்தையை நேரில் பார்த்திருக்கிறீர்களா? ராகி என்று ஒரு நல்லப் பாம்பு. அது நல்ல நல்ல வித்தைகளெல்லாம் செய்யும். அதைப் பார்த்துக் குழந்தைகள் ஆனந்தம் அடைவார்கள். அவர்கள் ஆனந்தம் அடைவதைப் பார்த்து அந்தப் பாம்பும் ஆனந்தமடையும். இக்கதை தென்மொழிப் புத்தக டிரஸ்ட் ஆதரவில் பதிப்பிக்கப்பெற்றது. --- Tamil Translation of Raagi The Naag by Laeeq Futehally.

    ஒற்றுமையே வலிமை - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 11, 2020 1:03


    ஒற்றுமையே வலிமை வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர். இவர்கள் இப்படியே இருந்தால், குடும்பம் சிதறிப் போகுமே என்று வருந்தினார் வயதான தந்தை. அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர். ஒருநாள் மக்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை. அவர்கள் வந்து கட்டிலைச் சுற்றி நின்றனர். தன் காலடியில் கிடந்த மூங்கில் கட்டு ஒன்றை மூத்த மகனிடம் கொடுத்து, “இதை முறி” என்றார். தன் பலம் முழுவதையும் பயன்படுத்தினான். ஆனால், முறிக்க முடியவில்லை. அடுத்து இரண்டாவது மகன், மூன்றாவது மகன், நான்காவது மகன், மூவரும் முயன்று பார்த்தனர், ஒருவராலும் முறிக்க இயலவில்லை. பிறகு, கட்டைப் பிரித்து ஆளுக்கு ஒரு குச்சியைக் கொடுத்தார். நால்வரும் சுலபமாக முறித்து விட்டு நின்றனர். “இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும், நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை உறுதியாக விளங்கும். எவரும் உங்களை ஏமாற்ற முடியாது, சண்டை சச்சரவு செய்து, தனித்தனியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பீர்களானால், சிதறிப் போவீர்கள். ஒற்றுமையே வலிமை அளிக்கும்” என்றார் தந்தை. --- முல்லை முத்தையா அவர்கள் எழுதிய இக்கதை ‘மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்' என்ற நூலில் வெளியானது.

    எளியவர்களால் உதவ முடியும் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக்கதை

    Play Episode Listen Later Dec 10, 2020 1:16


    எளியவர்களால் உதவ முடியும் செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பெரிய காடு. அங்கு ஆண் சிங்கம் ஒன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது சுண்டெலி ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது. அதனால் சிங்கத்தின் தூக்கம் கலைந்தது. சினம் பொங்கியது, கண்கள் சிவந்தன. சுண்டெலியைக் கடுமையாகப் பார்த்தது. சுண்டெலி அஞ்சி நடுங்கியது. சிங்கத்தின் காலடியில் வீழ்ந்து “வனராஜனே! என்னை மன்னித்து விடு, எப்போதாவது நன்றி மறவாமல், உனக்கு உதவி செய்வேன்” என்று மன்றாடியது. சிங்கம் ஏளனமாகச் சிரித்து, “நீயா எனக்கு உதவி செய்யப் போகிறாய்? ஓடிப்போ” என்று கூறி, சுண்டெலியை மன்னித்தது. பல நாட்களுக்குப் பிறகு, வேடர்கள் விரித்த வலையில் அந்தச் சிங்கம் அகப்பட்டுக் கொண்டது. தப்பிக்க வழி இல்லாமல் தவித்தது. அந்தக் காடே அதிரும்படி முழக்கமிட்டது. இதர மிருகங்கள் எல்லாம் பயந்து ஓடி மறைந்தன. சிங்கத்தின் குரலைக் கேட்ட சுண்டெலி ஓடி வந்து பார்த்தது. சிங்கத்தின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தியது. “வனராஜனே! முன்பு நீ மன்னித்ததை நான் மறக்கவில்லை; என்னுடைய பற்களால் சிறுகச் சிறுகக் கடித்து, வலையைத் துண்டித்து விடுகிறேன். நீ உடனே வலையிலிருந்து வெளியேறி விடலாம்” என்று கூறி, வலையைக் கடித்து, துண்டித்து விட்டது சுண்டெலி. சுண்டெலி தனக்கு உதவி, உயிர் பிழைக்கச் செய்ததை சிங்கம், நன்றிப் பெருக்கோடு சுண்டெலியைப் பாராட்டியது. முன்பு, ஏளனமாக நினைத்ததை எண்ணி வருந்தியது. --- ‘மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்' என்ற தொகுப்பில் முல்லை முத்தையா அவர்கள் எழுதிய கதை இது.

    தங்கையின் பரிவு - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 9, 2020 0:53


    தங்கையின் பரிவு அக்காளும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை உண்டாகும். ஒரு நாள் இருவருக்கும் சச்சரவு அதிகமாயிற்று. அப்பொழுது தங்கையின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அடி அடி என்று பலமாக அடித்து விட்டாள் அக்காள். அதை அறிந்த பெற்றோர் அவளைத் திட்டி, ஒரு அறையில் தள்ளி, பூட்டி வைத்தனர். மேலும், அவளுக்குப் பகல் உணவு அளிக்காமல் பட்டினி போடவேண்டும் என்று தீர்மானித்தனர். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. அப்பளம், வடை, பாயாசத்துடன் எல்லோரும் வயிறு நிறைய உண்டு மகிழ்ந்தனர். அக்காள் பட்டினியாக கிடப்பாளே என்று இரக்கப்பட்டு,பெற்றோருக்குத் தெரியாமல், உணவை எடுத்துச் சென்றாள் தங்கை. தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி, சாப்பிடச் செய்தாள். தங்கை தன்னிடம் கொண்டிருந்த அன்பையும், தான் அவளிடம் நடந்து கொண்ட மூர்க்கத் தனத்தையும் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர்மல்கியது. ‘இனி, உன்னோடு ஒரு போதும் சண்டையிட மாட்டேன், இது உறுதி!” என்றாள் அக்காள். சகோதர பாசம் என்பது இதுதான்! --- இக்கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதிய 'மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்' என்ற நூலில் வெளியானது.

    நிலத்தில் கிடைத்த மோதிரம் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 8, 2020 0:56


    நிலத்தில் கிடைத்த மோதிரம் ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான நிலத்தில் கூலிக்காக ஒரு ஏழை உழுது பயிரிட்டு வந்தான். வழக்கம் போல விவசாயி உழுது கொண்டிருக்கும்போது, ஒரு தங்க மோதிரத்தைக் கண்டு எடுத்தான். வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து விட்டான். தான் கண்டு எடுத்த மோதிரத்தை தன் மனைவியிடம் காட்டினான். அதைப் பார்த்ததும் அவன் மனைவி, தனக்குக் காதோலை செய்து போட்டுக் கொள்ள ஆசைப்பட்டாள். “நிலம் பண்ணையாருடையது, நான் கூலிக்காகவே உழுகிறேன்; நிலத்தில் கிடைப்பது அவரைச் சேர்ந்தது. நாம் எடுத்துக்கொள்வது அவருக்குத் துரோகம் செய்வதாகும்” என்றான் அவன். கணவன் கூறியது மனைவிக்குத் திருப்தி அளிக்கவில்லை. “பண்ணையாருக்கு எப்படி தெரியும்? அவர் வந்து பார்த்தாரா?” என்று வாதாடினாள் மனைவி. இருவருக்கும் இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. “பண்ணையார் வந்து பார்க்கவில்லை தான். ஆனாலும், என் மனசாட்சி உறுத்துகிறது” என்று கூறிவிட்டு, காலையில் எழுந்து பண்ணையாரிடம் சென்று, மோதிரத்தைக் கொடுத்து விவரத்தைக் கூறினான் அவன். பண்ணையார், விவசாயியின் நேர்மையைப் பாராட்டி, அதை அவனுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார். --- முல்லை முத்தையா அவர்கள் எழுதி, ‘மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்' என்ற தொகுப்பில் இக்கதை வெளியானது.

    ஏமாந்த சகோதரர்கள் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 7, 2020 1:20


    ஏமாந்த சகோதரர்கள் ஒரு ஊரில் இரண்டு வாலிபர்கள் முரட்டுத்தனமாக சச்சரவிட்டு, அடிதடியில் இறங்கி விட்டனர். வழியில் சென்ற ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு, “எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். “நாங்கள் இருவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். எங்கள் தந்தை ஒரு முனிவர். அவர், மிகச் சிறப்பு வாய்ந்த மூன்று பொருள்களை வைத்துவிட்டு மறைந்துவிட்டார். அவற்றை யார் எடுத்துக் கொள்வது என்ற சச்சரவில் இப்போது ஈடுபட்டு இருக்கிறோம் என்றனர் வாலிபர்கள். “அந்த மூன்று பொருள்களும் என்னென்ன?” என்று கேட்டார் வழிப்போக்கர். அவை “பாதக்குறடு, கைத்தடி, அமுத சுரபிக் கிண்ணி. பாதக் குறட்டை காலில் மாட்டிக் கொண்டு, எங்கே செல்ல விரும்பினாலும், உடனே போய்ச் சேரலாம். கைத்தடியால் எதை வரைந்தாலும் அது உடனே உருவம் பெற்றுவிடும். அமுத சுரபிக் கிண்ணத்தில் வேண்டும்போது வேண்டிய உணவு நிறைந்திருக்கும். இதுதான் அந்தப் பொருள்களின் சிறப்பு” என்று இருவரும் கூறினர். அந்தப் பொருள்களின் ரகசியத்தை தெரிந்துக்கொண்ட வழிப்போக்கர் அவர்கள் இருவருக்கும் ஒரு யோசனை கூறினார். இருவரும் ஒரு மைல் தொலைவு ஓடி, எவன் முதலில் வெற்றி அடைகிறானோ, அவனே அந்தப் பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்” என்றார். அதற்குச் சம்மதித்து இருவரும் ஓட முற்பட்டனர். அவர்கள் இருவரும் ஓடுகையில், வழிப்போக்கர் பாதக் குறடை காலில் மாட்டிக்கொண்டு, அமுதசுரபிக் கிண்ணத்தையும், கைத்தடியையும் கையில் எடுத்துக்கொண்டு பறந்து போய் விட்டார். சகோதரர்கள் இருவரும் தாங்கள் ஏமாந்துபோனதை நினைத்து வருந்தினர். பாகப் பிரிவினை என்று சச்சரவு ஏற்படும்போது, எல்லாவற்றையும் இழக்க நேரிடும். --- இக்கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி, ‘மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்' என்ற நூலில் வெளியானது.

    செத்த எலியால் வியாபாரி ஆனான் - முல்லை முத்தையா - ஒரு குட்டிக் கதை

    Play Episode Listen Later Dec 6, 2020 3:12


    செத்த எலியால் வியாபாரி ஆனான் சிறிய நகரம் ஒன்றில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவன் பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் எவரும் இல்லை. குடியிருக்க சிறிய வீடு மட்டும் இருந்தது. வேலையும் கிடைக்க வில்லை. ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்றால், பணமும் இல்லை. அவனிடம் அனுதாபம் கொண்ட ஒருவர், ஒரு யோசனை கூறினார்: “பக்கத்து ஊரில், ஒரு செட்டியார் இருக்கிறார். வியாபாரம் செய்யக் கடன் கொடுப்பார். பிறகு, வட்டியோடு அசலையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அவரிடம் சென்று கேட்டுப் பார்” என்று கூறினார். மறுநாள் மிகுந்த உற்சாகத்தோடு செட்டியாரைக் காணச் சென்றான் அந்த இளைஞன். அந்த நேரத்தில் செட்டியார், ஒருவனைக் கோபித்துக் கொண்டிருந்தார். அவன் செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், அசலும் வட்டியும் கொடுக்கவில்லை என்று பேச்சில் தெரியவந்தது. மேலும், “முதலை இழக்கும்படியான வியாபாரத்தை எந்த முட்டாளாவது செய்வானா? திறமைசாலியாக இருந்தால், அங்கே கிடக்கும் செத்த எலியைக் கொண்டே பணம் சம்பாத்தித்து விடலாமே” என்று கடுமையாகப்பேசினார். அவனும் பிறகு வருவதாகக் கூறி போய் விட்டான். பிறகு செட்டியார், இளைஞனை ஒரு பார்வை பார்த்தார். “நீ எதற்காக வந்திருக்கிறாய்?” என்பது போலிருந்தது அவர் பார்வை. இளைஞன் புத்திசாலித்தனமாக, “எனக்குக் கடன் எதுவும் வேண்டாம். அங்கே மூலையில் கிடக்கின்ற செத்த எலியைக் கொடுத்தால் போதும்” என்றான். “தாராளமாக எடுத்துச் செல்” என்றார் செட்டியார். இளைஞன், செத்த எலியை எடுத்துக்கொண்டு சென்றான். ஒரு கடலை வியாபாரி, தான் வளர்க்கும் பூனைக்கு இரை ஆகுமே என்று நினைத்து, செத்த எலியை வாங்கிக் கொண்டு ஒரு ஆழாக்கு கடலையைக் கொடுத்தான் இளைஞனுக்கு. அதை வீட்டுக்குக் கொண்டுவந்து, வறுத்துப் பொட்டுக் கடலையாக்கினான். அதோடு, ஒரு குடத்தில், குடிதண்ணீர் எடுத்துக்கொண்டு போய் ஊருக்கு வெளியே மரத்தடியில் உட்கார்ந்தான். கடுமையான வெயிலில், விறகு வெட்டிக் கொண்டிருந்த விறகு வெட்டிகள் சிலர், களைப்புமிகுதியால், இளைப்பாற மரத்தடியில் அமர்ந்தனர். அவர்களுக்கு கொஞ்சம் கடலையும், ஒரு குவளை தண்ணீரும் கொடுத்தான். அவர்கள் மகிழ்ச்சியோடு, ஆளுக்கு இரண்டு விறகுக்கட்டைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். கிடைத்த விறகுக் கட்டைகளைச் சுமந்து சென்று, விறகுத்தொட்டியில் விற்றுப் பணம் பெற்றுச் சென்றான். இளைஞன் மீண்டும் அந்தப் பணத்துக்குக் கடலை வாங்கி, வறுத்து, ஆதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். விறகு வெட்டிகள் பலரும் அவனுக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். தினமும் அவனுக்குக் கிடைத்த விறகுகளில் ஒரு பகுதியை விற்று, மீதியை வீட்டில் சேமித்து வைக்கலானான். விறகுகள் வீட்டில் மலைபோல் குவிந்தன. திடீரென்று அந்த ஊரில் அடைமழை பெய்யத் தொடங்கியது. விறகுத் தொட்டிகளில் இருந்த விறகுகள் எல்லாம் தீர்ந்தன. விறகுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலையும் அதிகமாகியது. இளைஞன் தன் வீட்டில் சேமித்து வைத்திருந்த விறகுகள் அனைத்தையும் நல்ல நல்ல விலைக்கு விற்றதால், பணம் நிறையக் கிடைத்தது. அந்த தொகையை மூலதனமாகக் கொண்டு, சிறிய வியாபாரம் ஒன்று தொடங்கினான். பிறகு, அது வளர்ந்து பெருகி, பெரிய வியாபாரி ஆனான். ஒருநாள், யாரால் இந்த அளவுக்கு முன்னேறி, பணம் சம்பாதித்தோம் என்பதை நினைத்துப் பார்த்தான் இளைஞன். பிறகு, வெள்ளியினால் ஒரு எலி செய்து, அதை அந்தச் செட்டியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து வணங்கி நின்றான் இளைஞன். அதைப் பார்த்ததும் செட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. இளைஞன், தான் முதன்முதலில் வந்து, செத்த எலியைக் கொண்டு சென்றது முதல் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான். அவனுடைய ஊக்கத்தையும், உழைப்பையும், நாணயத்தையும் கண்டு செட்டியார் அவனைப் பாராட்டி மகிழ்ந்தார். அதன்பின், தன்னுடைய ஒரே மகளை, அந்த இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார் செட்டியார். ஊக்கமும், உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால், எப்படியும் முன்னேறலாம். --- இக்கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி, 'மாணவர் மானவியருக்கு நீதிக்கதைகள்' என்ற தொகுப்பில் வெளியானது.

    பெரிய வாயாடி - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 5, 2020 1:17


    பெரிய வாயாடி ஒரு ஊரில் ஒரு பிராமணரும் அவர் மனைவியும் வாழந்து வந்தனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தனர். அவர் புரோகிதர் வேலைக்குச் செல்வார். அந்த வேலை கிடைக்காத போது, சமையல் வேலை பார்ப்பதும் உண்டு. அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவருடைய மனைவி பெரிய வாயாடி. யாரிடமாவது ஏதேனும் பேசி, வம்பளத்துக் கொண்டிருப்பாள். அதனால் அவளுடன் யாருமே பேசுவது இல்லை. கணவனும் மனைவியும் அந்த ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். அவளுடைய குணத்தை தெரிந்து கொண்டதால், அடுத்த வீட்டில் வசிப்பவர்கள், எதிர் வீட்டில் இருப்போர் எவருமே அவளுடன் பேசுவதே இல்லை. இரண்டு, மூன்று மாதங்களில் அந்த ஊர் அவளுக்குப் பிடிக்கவில்லை. "வேறு ஊருக்குப் போவோம்" என்றாள் கணவனிடம். "இந்த ஊருக்கு வந்து இரண்டு, மூன்று மாதங்கள் தானே ஆகிறது, எதற்காக வேறு ஊருக்குப் போக வேண்டும்" என்றார் அவர். "இந்த ஊருக்கு வந்ததிலிருந்து ஒருவரும் பேசுவது இல்லை. ஒரு சண்டையும் கிடையாது, எனக்குப் பொழுது போகவில்லை" என்று சலிப்படைந்தாள். மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு இருவரும் புறப்படத் தயாரானார்கள். திண்ணையில் உட்கார்ந்தனர். சிறிது நேரம் கழித்து, மூட்டையை எடுத்து தலையில் வைத்தார் அவர். அப்போது, எதிர் வீட்டில் இருந்தவள், அவர்களின் மூட்டை முடிச்சுகளைப் பார்த்ததும், "தொலைந்தது சனியன்" என்றாள். அவள் சொன்னது அவள் காதில் விழுந்தது. "வந்தது சண்டை, மூட்டையைக் கீழே வையும்" என்றாள் அவள். "ஊருடன் கூடி வாழ்" என்பது பழமொழி. --- இக்கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி வெளியான "மாணவர் மாணவியருக்கான நீதிக்கதைகள்" என்ற தொகுப்பிலிருந்து.

    தவறு யாருடையது? - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 4, 2020 1:03


    தவறு யாருடையது? அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய அறையில் இருந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அப்போது, பாலைக் கொண்டுவந்து அவர் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றார் அவருடைய மனைவி. அதிகாரி அதைக் கவனிக்காமல் எழுதிக்கொண்டிருந்தார். அப்பொழுது, கல்லூரியில் படிக்கும் அவர்களுடைய மகள் ஏதோ ஒரு புத்தகதை எடுப்பதற்குச் சென்றாள். மேஜை மீது இருந்த பால் குவளையில் அவள் கைபட்டு, பால் கொட்டிப் போயிற்று. உடனே அந்தப் பெண், "அப்பா! என்னை மன்னித்து விடுங்கள், தவறுதலாக என் கைபட்டு, பால் கொட்டிவிட்டது" என்றாள். "அம்மா! உன் தவறு அல்ல, உன் தாய் பாலைக் கொண்டு வந்து வைத்ததுமே, அதை எடுத்து நான் குடித்திருக்க வேண்டும். அப்போதே குடிக்காதது என் தவறு" என்றார் அதிகாரி. அதைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரியின் மனைவி வந்து, "உங்கள் இருவர்மீதும் தவறு இல்லை, நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது நான் கொண்டு வந்து பாலை வைத்தது என் தவறு" என்றாள். ஒவ்வொருவரும் தங்கள் தவறை உணர்ந்தது உள்ளத்தை நெகிழச் செய்தது. தவறை உணர்வது எவ்வளவு நேர்மை! --- இந்தக் கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி "மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்" என்ற தொகுப்பில் வெளியானது.

    பணத்தைச் சேமித்தது எப்படி? - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 3, 2020 1:00


    பணத்தைச் சேமித்தது எப்படி? --- பெரியவர் ஒருவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவனுக்கு வருவாய் கிடைக்க வழியையும் ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் அமைத்து கொடுத்தார். அவ்வப்போது வந்து மகனைப் பார்த்துச் செல்வார் தந்தை. ஒருநாள் தந்தை வந்திருந்தார். இரவு நேரம், தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர். "அப்பா! நீங்கள் எப்படி பணத்தைச் சேர்த்தீர்கள்? என்னுடைய வருமானத்துடன், உங்களுடைய உதவி இருந்தும், எனக்கு ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறதே, ஏன்?" என்று கேட்டான் மகன். "மகனே! எதுவும் பழக்கத்தால் வருவது. வாழக்கையில் மிகவும் கவனம் தேவை. அவசியமான செலவு எது, அவசியம் இல்லாத செலவு எது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; ஆடம்பரமான உடைகள், சினிமா - நாடகம், சிற்றுண்டி விடுதிக்குச் செல்லுதல் ஆகியவற்றை நான் தவிர்த்து வந்துள்ளேன். வீட்டில் வெளிச்சத்துக்கு ஒரு விளக்கே போதும் என்றால், எதற்காக மற்றொரு விளக்கை எரிய விடவேண்டும்" என்று சொல்லிவிட்டு எழுந்தார். உடனே மகன் எழுந்து, தேவையின்றி எரிந்து கொண்டிருந்த மற்றொரு விளக்கை அணைத்தான். --- இக்கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி 'மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்' என்ற நூலில் வெளிவந்துள்ளது.

    உதவியும் ஒத்துழைப்பும் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 2, 2020 1:10


    உதவியும் ஒத்துழைப்பும் - முல்லை முத்தையா அவர்கள் எழுதிய 'மாணவர் மானவியர்களுக்கு நீதிக்கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து.

    விவசாயி அடைந்த வருத்தம் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Dec 1, 2020 0:50


    விவசாயி அடைந்த வருத்தம் - இக்கதை முல்லை முத்தையா அவர்கள் எழுதி மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் என்ற நூலில் உள்ளது.

    பண்புள்ள பையன் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை

    Play Episode Listen Later Nov 30, 2020 0:51


    பண்புள்ள பையன் - இந்த ஒரு நிமிடக் கதை முல்லை பி. எல். முத்தையா அவர்கள் எழுதிய "மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்" என்ற நூலில் உள்ளது.

    Claim Kathai Solli

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel