Saiva Siddhanta

Follow Saiva Siddhanta
Share on
Copy link to clipboard

The Vedas and the Sivagamas in Sanskrit and the Tirumurais and the Siddhanta Sastras in Tamil are the principal scriptures of Saiva Siddhanta. The four authors of the first eight of the Twelve Tirumurais are called the Samaya Acharyas. They are St. Tirugnana Sambandar, St. Tirunavkkarasar, St. Sundaramurthi, and St. Manikkavachakar. The hymns of the first three are generally known as Thevaram, and those of the last as Tiruvachakam. Reach us through : shanmugam.809@outlook.com (or ) shanmugam.809@gmail.com. stay in touch through WhatsApp or Phone : +91 9790480891 Regards shanmugam.g

suresh babu


    • Aug 31, 2023 LATEST EPISODE
    • monthly NEW EPISODES
    • 21m AVG DURATION
    • 194 EPISODES


    Search for episodes from Saiva Siddhanta with a specific topic:

    Latest episodes from Saiva Siddhanta

    Sanmaarkam

    Play Episode Listen Later Aug 31, 2023 22:04


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Thavathinil Unartyha

    Play Episode Listen Later Aug 15, 2023 20:16


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Nyaanameh Vazhi

    Play Episode Listen Later Jul 31, 2023 19:49


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Mohnanilai

    Play Episode Listen Later Jul 13, 2023 17:23


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Pasuyilakanam

    Play Episode Listen Later Jan 31, 2023 22:10


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Nyaanam

    Play Episode Listen Later Jan 15, 2023 20:09


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Nootpaa 8 Munnurai

    Play Episode Listen Later Dec 31, 2022 19:23


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Siththu

    Play Episode Listen Later Dec 15, 2022 21:24


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Aimpula Vehdar

    Play Episode Listen Later Nov 30, 2022 20:03


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Panbu

    Play Episode Listen Later Nov 15, 2022 18:42


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Anniyaminmai

    Play Episode Listen Later Oct 31, 2022 20:36


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Thiranda Karuthu

    Play Episode Listen Later Oct 15, 2022 18:33


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Nootpaa 8 Thohtruvaai

    Play Episode Listen Later Sep 30, 2022 20:12


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Nootpaa 8 Pozhippurai

    Play Episode Listen Later Sep 15, 2022 21:12


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Nootpaa 8 Yinaippu

    Play Episode Listen Later Aug 31, 2022 20:48


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Nootpaa 8 Pathavurai

    Play Episode Listen Later Aug 15, 2022 19:17


    மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

    Mapadiyam - Nootpaa 8 Vilakam

    Play Episode Listen Later Jul 30, 2022 27:04


    பக்தியையும் பழந்தமிழையும் வளர்த்து வான்புகழ் கொண்ட சிறப்புக்குரியவர் சிவஞான சுவாமிகள் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமிகு சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் சிவனிடத்து நீங்கா அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனந்தக்கூத்தர் மயிலம்மையார். இவ்விருவரும் செய்த தவத்தின் பயனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்கு ‘முக்காளலிங்கர்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முக்காளலிங்கருக்கு ஐந்து வயது நிரம்பியது. அவன் தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார். ஒரு நாள் பள்ளி சென்று இல்லம் திரும்பினான் சிறுவன். வருகின்ற வழியில் காவியுடை அணிந்த சுவாமிகள் சிலர் வருவதைக் கண்டான். அப்போது மிகுந்த அன்புடன் அவர்களை வணங்கி, பணிவுடன் ‘சுவாமிகள் அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்து உணவு உண்டு விட்டு செல்ல வேண்டும்' என்று வேண்டி நின்றான். அச்சுவாமிகள் அனைவரும் சிறுவனின் குணத்தைப் பாராட்டி, இல்லத்துக்கு வர இசைந்தனர். வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் சுவாமிகள் இருக்கும் திருமடம் சென்று வணங்கி ஆசி பெற்றனர். முக்காளலிங்கர் துறவு நிலை அடைய விருப்பம் கொண்டு திருமடத்திலேயே தங்கினார்.

    Mapadiyam - Saathanam

    Play Episode Listen Later Jul 10, 2022 20:57


    சிவனின் திருவடி நிழலில் சைவ சித்தாந்தத்தை உணர்த்திய சிவஞான சுவாமிகள் ஒரு சித்திரை மாதம் ஆயிலிய நட்சத்திரத்தன்று சிவனது திருவடி நிழலில் கலந்து முக்தி பெற்றார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஆயிலியத்தன்று விக்கிரமசிங்கபுரம், காஞ்சிபுரம், திருவாவடுதுறை, சுசீந்திரம் ஆகிய ஊர்களில் இவரது குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    Mapadiyam - Aanma Tharisanam

    Play Episode Listen Later Jun 30, 2022 19:34


    காஞ்சிபுரத்தில் சிவஞான சுவாமிகள் காஞ்சிபுரம் பயணம் மேற்கொண்டபோது அங்கு நெடுநாள் தங்கி, சிவஞான மாபாடியத்தை எழுதி முடித்தார். இந்நூல், இதுவரை தமிழிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ள மாபாடியங்கள் அனைத்திலும் இது சிறந்த நூலாகும். இது மட்டுமின்றி காஞ்சி புராணம், சோமேசர் முதுமொழி வெண்பா, இலக்கண விளக்க சூறாவளி உள்ளிட்ட பல சிறந்த நூல்களை அருளியுள்ளார்.

    Mapadiyam - Saathanai

    Play Episode Listen Later Jun 10, 2022 20:03


    அன்று மாலை வரையிலும் அப்பாடலை எவரும் பாடி முடிக்கவில்லை. இதனை அறிந்த ஏழை ஒருவன், அவ்வூரில் தங்கியிருந்த சுவாமிகளிடம் சென்று பாடலைப் பாடித் தரும்படி கேட்டார். சுவாமிகளும் ஏழையின் வறுமையை நீக்கும் பொருட்டுப் பாடலை எழுதிக் கொடுத்தார். ஏழை பாடலை வாங்கி அவையில் படித்துக் காட்டி பொன் முடிப்பை பெற்று மகிழ்ந்தார். சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள ஊர் கலசை. அங்கு உறையும் விநாயகர் செங்கழுநீர் விநாயகர். இக் கடவுள் மீது முனிவர் பாடிய நூல் ‘செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ். இந்நூலுக்கு ஒரு சிறப்புண்டு. விநாயகர் மீது பிள்ளைத் தமிழ் பாடிய மரபில் இந்நூலே முதல் நூலாகும்.

    Mapadiyam - Nootpaa 7

    Play Episode Listen Later Jun 5, 2022 20:15


    சுவாமிகளின் திருத்தலப் பயணங்கள் ஒரு சமயம் சிவஞான முனிவர் திருப்பாதிரிபுலியூருக்குத் தல யாத்திரை சென்றார். அங்கு சில காலம் தங்கினார். அங்கு ஒருநாள் கோயிலின் முன் புலவர்கள் பேரவை ஒன்று கூடியது. அப்பேரவையில் செல்வந்தர் ஒருவர் நூறு பொன் கட்டிய பொன் முடிப்பை அவை முன்பு வைத்தார். ‘கரையேறவிட்ட முதல்வா உன்னை அன்றியுமோர் கதியுண்டாமோ?' என்ற அடியை நான்காவது அடியாகக் கொண்டு ஒரு செய்யுள் இயற்றுபவருக்கு அப்பொன்முடிப்பு தரப்படும் என்று அறிவித்தார்.

    Mapadiyam - Nootpaa 6

    Play Episode Listen Later May 30, 2022 20:00


    குருவருளால் துறவு பூண்ட சுவாமிகள் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடி வழிபாடு செய்யத் தொடங்கினார். ஒருமுறை திருநெல்வேலிக்கு அருகிலுள்ள இராசவல்லிபுரம் சென்றார் சுவாமிகள். அங்கு அருளும் அம்மையாகிய அகிலாண்டேசுவரி மீது பதிகம் பாடி அங்கேயே அரங்கேற்றினார். இதுவே இவர் எழுதிய முதல் நூலாகும்.

    Mapadiyam - Pathi Nyaanam

    Play Episode Listen Later May 10, 2022 13:37


    குருவருளால் துறவு நிலை முக்காளலிங்கருக்குச் சித்தாந்த நூல்களைக் கற்றுத் தந்து அவருக்குக் குருவாக விளங்கியவர் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீவேலப்ப சுவாமிகள். இவரது குருவாகிய வேலப்பர், இவரின் அறிவுத் திறனையும், ஒழுக்கத்தையும் கண்டு ‘சிவஞானம்' எனும் பெயர் வழங்கி அருளினார்கள். அதுமுதலாக முக்காளலிங்கர், சிவஞான சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

    Mapadiyam - Pathi Yilakanam

    Play Episode Listen Later Apr 30, 2022 19:34


    வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் சுவாமிகள் இருக்கும் திருமடம் சென்று வணங்கி ஆசி பெற்றனர். முக்காளலிங்கர் துறவு நிலை அடைய விருப்பம் கொண்டு திருமடத்திலேயே தங்கினார்.

    Mapadiyam - Throhthaanam

    Play Episode Listen Later Apr 10, 2022 19:53


    ஒரு நாள் பள்ளி சென்று இல்லம் திரும்பினான் சிறுவன். வருகின்ற வழியில் காவியுடை அணிந்த சுவாமிகள் சிலர் வருவதைக் கண்டான். அப்போது மிகுந்த அன்புடன் அவர்களை வணங்கி, பணிவுடன் ‘சுவாமிகள் அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்து உணவு உண்டு விட்டு செல்ல வேண்டும்' என்று வேண்டி நின்றான். அச்சுவாமிகள் அனைவரும் சிறுவனின் குணத்தைப் பாராட்டி, இல்லத்துக்கு வர இசைந்தனர்.

    Mapadiyam - Sagasa Malam

    Play Episode Listen Later Mar 30, 2022 19:27


    பக்தியையும் பழந்தமிழையும் வளர்த்து வான்புகழ் கொண்ட சிறப்புக்குரியவர் சிவஞான சுவாமிகள் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமிகு சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் சிவனிடத்து நீங்கா அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனந்தக்கூத்தர் மயிலம்மையார். இவ்விருவரும் செய்த தவத்தின் பயனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்கு ‘முக்காளலிங்கர்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முக்காளலிங்கருக்கு ஐந்து வயது நிரம்பியது. அவன் தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார்.

    Mapadiyam - Nootpaa 3

    Play Episode Listen Later Mar 10, 2022 20:22


    சைவ சித்தாந்த சாத்திரங்கள் பற்றித் தமிழில் எழுந்த நூல்களைப் போன்றே வடமொழியிலும் சில நூல்கள் எழுந்துள்ளன. கி.பி 8 -12 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதான அட்டப்பிரகரணம் எனும் தொகுப்பிலுள்ள எட்டு நூல்களை அவ்வகையுள் குறிப்பிடலாம். அவை, தத்துவப் பிரகாசிகை தத்துவ சங்கிரகம் தத்துவத் திரய நிர்ணயம் இரத்தினத் திரயம் போக காரிகை நாத காரிகை மோட்ச காரிகை பரமோட்ச நிராச காரிகை என்பனவாகும்

    Mapadiyam - Immaiporul

    Play Episode Listen Later Feb 20, 2022 20:11


    இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன. சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

    Mapadiyam - Nootpaa 1,2

    Play Episode Listen Later Jan 31, 2022 20:04


    இரண்டாம் அதிகரணம் மேற்கோள் : இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது ஏது : இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின். உதாரணம் : இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால் இலயித்தவாறு உளதா வேண்டும் - இலயித்தது அத்திதியில் என்னின் அழியாது அவையழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு 2 வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம் அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம் வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக் கூட்டானே மண்போல் குளிர்ந்து 3 நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தில் தாக்காது நின்று உளத்திற் கண்டு இறைவன் - ஆக்காதே கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக் கண்டவனின் இற்று இன்றாம் கட்டு

    Mapadiyam - Muthal Nootpaa

    Play Episode Listen Later Jan 14, 2022 24:43


    முதல் சூத்திரம் அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை : என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரைவகை : இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க. 1. முதல் அதிகரணம் மேற்கோள் : ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது. ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின் உதாரணம் : பூதாதி ஈறும் முதலும் துணையாக பேதாய்! திதி ஆகும் பெற்றிமையின் - ஓதாரோ ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும் அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து 1

    Mapadiyam - Ullamkavar Kalvan

    Play Episode Listen Later Dec 31, 2021 18:54


    அவையடக்கம் தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை உடைமை எமை இகழார் - தம்மை உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில் புணராமை கேளாம் புறன்

    Mapadiyam - Vaazhga Anthanar

    Play Episode Listen Later Dec 12, 2021 19:31


    நூல் மங்கல வாழ்த்து கல்லால் நிழன்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே

    Mapadiyam - Thohdudauya

    Play Episode Listen Later Nov 30, 2021 21:34


    சிறப்புப் பாயிரம் நேரிசை ஆசிரியப்பா மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த உயர்சிவ ஞான போதம் உரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் பவநனி வன்பகை கடந்த தவரடி புனைந்த தலைமை யோனே.

    Mapadiyam - Nyaanappaal

    Play Episode Listen Later Nov 22, 2021 19:27


    Translation: Oh my mind ! You thought falsely the things that gets associated due to birth are harmful, so except for renounced people sufferings won't leave. Don't forget. You went in the right path. In whose head holy water is flowing, that Lord of justice's (Lord Shiva) ArUr (we) will worship and get saved ( from sufferings). Don't get scared by developing desires.

    Mapadiyam - Sirappurai

    Play Episode Listen Later Nov 4, 2021 16:53


    Among the three things of pathi, pachu, pAcham, like the pathi the pAcham of pachu is without origin. pAcham of pachu will not affect the pathi. If pathi approaches (the pachu) then the pAcham of pachu won't stay (with pachu). It is this concept of driving away the pAcham of pachus which surrendered to pathi, which is seen in many holy deeds of Lord Shiva like tripurasaMhAram. The three demons are like the three components of pAcham (ANavam, kanamam, mAyai). Lord Shiva, pathi, destroys them by His smile of grace. Thus when the three impurities are reduced to ash pathi dances there, bliss remains. Same is with the sUrasaMhAram. Lord subramanya is the form of grace of Lord Shiva. On the prayer of pachus pathi's grace destroys tArakan (mAyai), siN^gamukan (kanmam) and sUrapadhman (ANavam). Translation: Ignorants say the Lord with red matted hair, source of all, burnt three cities. Three cities signify the three impurities. Who knows the burning of those impurities. The entire thiruman^dhiram has a rich collection of the pathi pachu and pAcham concept. (For example 2405 to 2424). thirumuRai which is twelve in number are very sacred for the shaiva sidhdhanthis. It is mainly the tenth thirumuRai (thiruman^dhiram) that talks more of nyAna and yOga concepts. It is mainly based on the AgamAs. So it is called sAththiram. While those are widespread in all other thirumuRais also, it is the devotion that is given major emphasis. The bliss which is achieved by controlling the breath, meditating with all other thoughts carefully excluded which is the state of chummA iru, chol aRa (be idle, don't talk - not just in body level but in mind level), and sleeping (continuing) in the state effortlessly, is achieved through the flow of devotion which removes all the hurdles in the path as one who lies on that flow reaches the destination effortlessly. When a desire for God is developed all the other desires slowly get excluded liberating the pachu from the pAcham. While the rituals are duly acknowledged for enforcing the devotion, it is emphasized that it is the devotion and not just the rituals that lead to eternal bliss. There are a lot of books in thamiz which describe in detail about the principles of shaiva sidhdhantham. After the period of emergence of thirumuRais (after 12th century), a set of books known as san^dhAna n^UlakaL (meykaNda n^UlakL) were written which discuss in detail the principles of shaiva sidhdhantham. Like the samayak kuravar(champan^dhar, appar, sun^dharar, mANikka vAchkar) the four teachers who gave these books are called san^dhAnak kuravar. san^dhAna books are fourteen in number. thiruvun^dhiyAr and thirukkaLiRRuppAdiyAr to name a few. They talk about the thirty six principles and other much involved concepts of shaiva sidhdhantha.

    Mapadiyam - Thalaimaiyurai

    Play Episode Listen Later Oct 31, 2021 3:19


    Though for learned persons this may not seem a good introduction to shaiva sidhdhantha, this page is out of the wish to talk about that. This is similar to a kinder garden boy trying to explain the construction of a nuclear reactor. Still there will be persons who enjoy the efforts of a kid to act matured. In shaiva sidhdhantham God is called pathi, all the souls (creatures, all lives except pathi) which take birth and die are called pachu(pashu)s, the bondage is calledpAcham (pAsam). The pAcham can be classified into three - ANavam, kanamam, and mAyai (ego, deed and effects, illusion). Only these three things exist. Now the relation between them. It is the pAcham that brings suffering to the affiliated things. Due to the affiliation with pAcham the pachu suffers, and the affiliation is without origin. (that is by nature pachu is impure with pAcham). The pathi is never affected by pAcham. (pathi never gets affiliated to it). When pathi approaches pachu (blessing the pachu) the pAcham that binds the pachu making it suffer, is driven off. It is like a leaf loaded with snow. Due to the weight the leaf is pushed down (to suffer). When the sun, pathi comes the snow of pAcham escapes with the leaf coming up and smiling with the sigh of relief. In the presence of pathi pAcham won't stay with pachu. (like in the presence of sun snow disappears from the leaf). The thirumandhiram, which is one of the very old scripture that talks in detail about the sidhdhantham, explains further, Translation: Among the three things of pathi, pachu, pAcham, like the pathi pachu and pAcham are without origin. pAcham which affect the pachus will not affect the pathi. If pathi approaches (the pachu) then the pAcham of pachu won't stay (with pachu).

    Sivagnana Mapadiyam - 2

    Play Episode Listen Later Oct 30, 2021 42:43


    எவ்வெவ கோட்படு பொருளும் அஞ்செழுத்தின் அடக்கி அவற்றியல்பு காட்டி மெய்வகை அஞ்சவத்தையினும் நிற்குமுறை ஓதுமுறை விளங்கத் தேற்றி அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச் சிவபோகத்து அழுத்தி நாயேன் செய்வினையும் கைக் கொண்ட வேலப்ப தேசிகன்தாள் சென்னி சேர்ப்பாம் எனக் காஞ்சிபுராணத்துள் கூறியவாற்றால் இனிது விளங்கும். சிவஞானயோகிகள் ஜமதக்கினி முனிவருடைய புத்திரரும், அகத்திய மகா முனிவருடைய முதன்மாணாக்கரும், இடைச் சங்கப் புலவர் ஐம்பத்தொன்பதின்மருள் ஒருவருமாகிய திருணதூமாக்கினி என்னும் தொல்காப்பிய முனிவர் அருளிச் செய்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு உரையாசிரியராகிய இளம்பூரணர் செய்த உரையாகிய இளம்பூரணமும், சேனாவரையர் செய்த உரையாகிய சேனாவரையமும், நச்சினார்க்கினியர் செய்த உரையாகிய நச்சினார்க்கினியமும் எனப்படும் மூன்று உரைகளினும் உள்ள ஆசங்கைகளை நீக்கித் தெளிவிக்கும் பொருட்டு அத்தொல்காப்பியத்தின் பாயிரத்திற்கும், முதற்சூத்திரத்திற்கும் சூத்திரவிருத்தி எனப் பெயரிய பாடியமும், வடமொழித் தருக்க சங்கிரக அன்னம்பட்டீயங்களின் மொழிபெயர்ப்பும், நன்னூலுக்குச் சங்கரநமச்சிவாயப் புலவர் செய்த புத்துரையாகிய விருத்தியுரைத் திருத்தமும் செய்தருளினார். இவை மூன்றும் திராவிட மாபாடியத்திற்கு அங்கங்கள் எனப்படும்.

    Sivagnana Mapadiyam - 1

    Play Episode Listen Later Oct 9, 2021 35:11


    வணங்கிய முக்களா லிங்கர் ஞானதேசிகரிடத்தே சைவ சந்நியாசமும் சிவதீட்சையும் சிவஞானயோகிகள் என்னும் தீட்சாநாமமும் பெற்று மெய்கண்ட சாத்திரம் பண்டாரசாத்திரங்களைக் கேட்டருளினார். சிவஞானயோகிகள் அகத்திய மகா முனிவர் வரத்தால் அவதரித்தருளியவர் ஆகலின், எளிதிலே வடமொழிக் கடலும், தென்மொழிக் கடலும் முற்று ஒருங்கு உணர்ந்து மெய்யுணர்வின் முற்றுப் பேறு உடையராய் அமர்ந்தருளினார். வேலப்ப தேசிகர் சிவஞானயோகிகளுக்கு மெய் உபதேசம் செய்தருளிய ஞானாசாரியர் என்பது,

    Sivagnana Mapadiyam - Nandriyurai

    Play Episode Listen Later Sep 25, 2021 6:38


    பின்னர் ஆனந்தக் கூத்தர் புத்திரராகிய முக்களா லிங்கரோடு ஆதீன முனிவர்களிடத்தே போய் வணங்கியவழிச் சத்திநிபாதம் உடைய புத்திரர் பிறவிப் பெருந்துன்பக் கடலினின்றும் கரையேறக் கருதி, அம்முனிவர்களோடு தாம் செல்ல வேண்டும் என்னும் குறிப்பினைத் தந்தையாருக்கு உணர்த்த, அவர் புத்திரரைப் பிரியச் சிறிதும் மனமில்லாது இருந்தும் ஒருவாறு இசைந்து அவரை அவர்களோடு விடுத்து வீட்டுக்குத் திரும்பினார். தந்தையார் நீங்கிய பின்பு, முக்களாலிங்கர் ஆதீனத்து முனிவர்களோடு வழிக்கொண்டு மார்க்கங்களில் உள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு, சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறையை அடைந்து, மடாலயத்தின் உள்ளே புகுந்து, ஆதீன பரம முதற்குரவராகிய நமச்சிவாய மூர்த்திகளைத் தரிசித்துத் திருவருள் நோக்கம் பெற்றுக் கொண்டு, அப்பொழுது சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகிய பின்வேலப்ப தேசிகரை ஒடுக்கத்திலே போய்த் தரிசித்துப் பேரன்போடு வணங்கினார்.

    Sivagnana Mapadiyam - Kalanthuraiyaadal

    Play Episode Listen Later Sep 18, 2021 21:04


    அருந்ததிஎன் அம்மை அடியவர்கட்கு என்றும் திருந்த அமுதளிக்கும் செல்வி -பொருந்தவே ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டு செயும் மானம் தவாத மயில் என்னும் செய்யுளை இயற்றிச் சென்றருளினார்கள். அதன்பின்பு புறத்தே போயிருந்த ஆனந்தக் கூத்தர் வீட்டிற்கு வந்த போது நிகழ்ந்த அரிய செயல்களைக் கேள்வியுற்றுப் பேரின்பக் கடலிலே முழுகினார்.

    Sivagnana Mapadiyam - Muyatchi-Oozh

    Play Episode Listen Later Sep 4, 2021 26:32


    பள்ளிக்கூடத்தினின்றும் வந்த முக்களாலிங்கர் அம்முனிவர்களைச் சந்தித்துத் தரிசித்து வணங்கி,"சுவாமிகாள்! அடியேன் வீட்டிற்கு எழுந்தருளித் திருவமுது செய்து, பின்பு சென்றருளல் வேண்டும்' என்று பிரார்த்திக்க, அம்முனிவர்கள் ஆண்டின் இளையரும் அறிவின் முதியருமாகிய முக்களாலிங்கர் பிரார்த்தனைக்கு இரங்கி, விருப்பத்தோடு உடன்பட்டு அவருடன் அவரது வீட்டுக்குப் போயினர். அங்கே தமது புத்திரர் அருமைக் கருத்தை உணர்ந்து, அருந்ததியினும் சிறந்த மயிலம்மையார் அன்போது உபசரிக்கத் திருவமுது செய்து, அவரது கற்பின் திறத்தையும், சிவனடியார்க்குச் செய்யும் திருத்தொண்டின் திறத்தையும் தெய்வம்தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக நாயகனையே தெய்வம் எனக் கொண்டு ஒழுகும் நலத்தினையும் சிறப்பித்து,

    Sivagnana Mapadiyam - Sirappu Paayiram

    Play Episode Listen Later Aug 21, 2021 25:12


    அவரது திருவயிற்றிலே, ஏழாவது தலைமுறையாகத் தமிழ்நாடு செய்த தவத்தானே, ஒரு சற்புத்திரர் திருவவதாரம் செய்து முக்களாலிங்கர் என்னும் பிள்ளைத் திருநாமம் சாத்தப் பெற்று ஒழுக்கம் அன்பு அருள் முதலிய நற்குணங்களோடு வளருவார் ஆயினார். பின்பு முக்களாலிங்கர் ஐந்து பிராயத்திலே, பிதாவினாலே வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றுப் பள்ளிக் கூடத்தில் அமர்ந்து கற்பாராயினார். அங்ஙனம் கற்கும் காலத்திலே, திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து சிவஸ்தலயாத்திரையாகப் புறப்பட்ட சில முனிவர்கள் விக்கிரமசிங்கபுரத்து வீதியிலே சென்றார்கள்.

    Sivagnana Mapadiyam - Nirvaana Theekkai

    Play Episode Listen Later Aug 7, 2021 26:50


    பாண்டிவள நாட்டிலே, பொதியமலைச் சாரலிலே, பாவநாசம் என்னும் திருப்பதியைச் சார்ந்த விக்கிரமசிங்கபுரத்திலே, அகத்திய மாமுனிவரிடத்தே எழுதலைமுறை அளவும் அருட்புலமை நிரம்பும் வண்ணம் வரம் பெற்ற பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே, சிவபத்தி அடியார் பத்திகளில் சிறந்தவரும் கல்வி செல்வம் என்னும் இரண்டும் ஒருங்குடையவரும் ஆகிய ஆனந்தக் கூத்தர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் கற்பிலே தமக்கு உயர்வு ஒப்பில்லாத மயிலம்மையார் என்று எவராலும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர்.

    Sivagnana Mapadiyam - Visehsha Theekkai

    Play Episode Listen Later Jul 31, 2021 24:09


    சிவஞான பாடியம் என்பது 18 ம் நூற்றாண்டியில் சிவஞான முனிவரால் சைவ சிந்தாந்த முதன்மை நூற்களில் ஒன்றான சிவஞானபோதத்திற்கு எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இதை மாபாடியம் என்றும் அழைப்பர். இந்த நூல் திருவாவடுதுறையில் அரங்கேற்றப்பட்டது.

    Sivagnana Mapadiyam - Samaya Theekkai

    Play Episode Listen Later Jul 20, 2021 29:48


    சுத்தாத்துவித சித்தாந்த சைவப் பாடியகாரர் என்ற பெயரில் இவருக்குத் தனிச் சந்நிதி அமைத்து வழிபடுதலும் தக்கதே. இவ்வகையில் முதலடி எடுத்து வைத்து இம்மரபினைத் தொடங்கி வைத்திருக்கும் திருநணா (பவானி) சிவனடியார் திருக்கூட்டத்தின் பணி பாராட்டுக்குரியது. மெய்கண்ட தேவர் திருவடி வாழ்க மாதவச் சிவஞான முனிவர் திருவடி வாழ்க! தமிழ்ச் சித்தாந்த சைவச் செந்நெறி ஓங்குக!

    samaya
    Sivagnana Mapadiyam - Divaagamam Pramaanam

    Play Episode Listen Later Jul 17, 2021 30:03


    மாதவச்சிவஞான முனிவரின் வரலாற்றைத் திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு புராணமாக விரிவாகப்பாடுவதற்குத் தொடங்கினார் எனத் தெரிகின்றது. இதுவரை மாதவச் சிவஞான முனிவர் தமிழுக்கும், சித்தாந்த சைவத்துக்கும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பலவகையாலும் புகழ்மிகுமாறு தொண்டாற்றி வாழ்ந்த திறம் ஒருவாறு சுருக்கமாக எழுதப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க மாதவச் சிவஞான முனிவரைச் சித்தாந்த சைவர்கள் பல வகையாலும் நினைவு கூறக் கடமைப்பட்டவர்கள் என்பது இதனால் ஒரளவு விளங்கும். இம்முனிவர் பெருமானின் திருவுருவத்தைப் சிவாலயங்களில் சந்தானாசாரியர்களை அடுத்து எழுந்தருளச் செய்து நாள் வழிபாடும் குருபூசையும் செய்தல் வேண்டும்

    Sivagnana Mapadiyam - Vanpagai

    Play Episode Listen Later Jul 13, 2021 29:36


    மாணாக்கர்கள் மாதவச் சிவஞானமுனிவருக்கு அமைந்த மாணாக்கர்களுள் பன்னிருவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களுள்ளும் கவிராட்சச கச்சியப்ப முனிவர் முதன்மை மாணாக்கராக மதிக்கப்படுகின்றார். மற்றும் தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணிய முனிவர், காஞ்சிபுரம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர். புகழ்நூல்கள் மாதவச் சிவஞான முனிவர் பெருமானின் புகழினை விரிவாகக் கூறும் தனிப்பாடல்களும், பதிகங்களும், சிற்றிலக்கியங்களும் மிகப்பல உள்ளன. அவற்றுள் தொட்டிக்கலை – மதுரகவி சுப்பிரமணிய முனிவர் பாடிய தனிப்பாடல்கள் மிகச் சிறப்புடையன. இப்பாடலகளில் ஞானமே வடிவானவர் என்றும் சிவாகமங்களுக்கெல்லாம் ஆகாரமாய் (இருப்பிடமாய்) விளங்குபவர் என்னும் நூலும் குறிப்பிடத்தக்க சிறப்புடையது.

    Sivagnana Mapadiyam - Sivaagamanggal

    Play Episode Listen Later Jul 10, 2021 19:23


    திருவாவடுதுறை ஆதீனக்குலதீபம் திருநந்தி மரபு – மெய்கண்டசந்தானத்தின் வழியில் வந்த நமச்சிவாய தேசிகரால் நிறுவப்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழ் இம்முனிவர் பெருமானால் பெரிதும் விளக்கமுற்றுத் திகழ்ந்ததனால் இவர் திருவாவடுதுறை ஆதினக் குல தீபம் எனப் போற்றப்படுகின்றார். இன்னும் இம்முனிவர் பெருமான் பாடிய வாழ்த்துப் பாடலே இவ்வாதீனத்துக் குருமரபு வாழ்த்தாக இவ்வாதினத்தால் பாடப்பட்டு வருகிறது. சீர்வளர்சீர் குருமகா சந்நிதானங்கள் நமச்சிவாய தேசிகரை வழிபடும் பொழுது ஓதுவா மூர்த்திகளால் இம்முனிவர் பெருமான் பாடிய பஞ்சாக்கரதேசிகர் மாலையில் உள்ள பாடல்களை ஓதுவதே வழக்கமாக உள்ளது. திருவடிப்பேறு இங்ஙனம் பலவகையாலும் புகழ்பெற்று விளங்கிய மாதவச் சிவஞான முனிவர் திருவாவடுதுறையில் ஒரு விசுவாவசு ஆண்டு – சித்திரை திங்கள் – ஆயிலிய நாளில் திருவடிப்பேறு எய்தினார். அது கி.பி. 1785 என்று கணக்கிடப்படுகின்றது. இன்று 225 ஆண்டுகள் ஆகின்றன.

    Sivagnana Mapadiyam - Pothu,Sirappu Nool

    Play Episode Listen Later Jul 6, 2021 26:59


    வடமொழியில் பிரமசூத்திரம் என்னும் வேதாந்த சூத்திரத்திற்கு சங்கரபாடியம் (இது அத்வைத பாடியம்) இராமாநுஜபாடியம் (இது விசிட்டாத்வைதபாடியம்) நீலகண்ட பாடியம் (இது சிவாத்வைத பாடியம்) எனப் பலபாடியங்கள் உள்ளன. அவ்வக் கொள்கையினர் அவ்வப்பாடியம் எழுதியவர்களைப் பாடியகாரர் எனச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சித்தாந்த சைவத்துக்குத் தமிழ்ச்சூத்திர நூலாகிய சிவஞான போத சூத்திரத்திற்குத் தமிழில் எழுதப்பட்ட ஒரே பாடியம் மாதவச் சிவஞான முனிவர் எழுதிய சிவஞான பாடியம் மட்டுமே உள்ளது. எனவே மாதவச்சிவஞானமுனிவர் சித்தாந்த சைவர்களால் பாடியகாரர் என மதித்துக் கொண்டாடத் தக்கவராக விளங்குகின்றார். இது பற்றியே இவருக்குத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான முனிவர் எனப் பெயர் வழங்கி வருகின்றது. (இங்குத் திராவிடம் என்பது தமிழ் என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது).

    nool
    Sivagnana Mapadiyam - Sirappu Paayiram

    Play Episode Listen Later Jul 3, 2021 30:03


    சென்னையை அடுத்த திருவொற்றியூர் என்னும் தலத்தில் அன்பர்களின் உதவியினால் சிவாச்சாரியார்களுடன் கலந்து சிவாகமங்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்தார். சிவஞானபாடியம் மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கியிருந்து சித்தாந்த சைவத் தத்துவ ஞானத்துக்குத் தமிழ்த் தலைமை நூலாக விளங்கும் சிவ ஞானபோதம் என்னும் நூலுக்குத் தமிழில் மாபாடியம் எழுதினார். அதனைத் திருவாவடுதுறைக்கு வந்து அப்பொழுது பீடாதிபதிகளாக வீற்றிருந்த பதினோராவது குருமகா சந்நிதானங்களாகிய சீர்வளர்சீர் பின்வேலப்பதேசிகர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். அப்பொழுது இளையபட்டத்தில் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிகர் என்பவர் வீற்றிருந்தார். (இவரே மாதவச் சிவஞான முனிவரின் முதல் மாணாக்கராகிய கச்சியப்ப முனிவருக்கு ஆசாரியராக விளங்கியவர்).

    Sivagnana Mapadiyam - Noolaasiriyar Sirappu

    Play Episode Listen Later Jun 30, 2021 29:55


    கம்பராமாயண முதற் செய்யுள் (நாடிய பொருள் கைகூடும் என்னும் தொடக்கத்தையுடையது) சங்கோத்திரவிருத்தி என்னும் உரை நூலையும் எழுதினார். சென்னை காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த காலத்தில் அன்பர்களின் அழைப்பினால் சென்னையைச் சார்ந்த தொட்டிக்கலை, குளத்தூர் முதலிய ஊர்களுக்குச் சென்று தங்கியிருந்தார். அப்பொழுது கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கியங்களைப் பாடினார். தொட்டிக்கலை என்னும் பகுதியைச் சார்ந்த மதுரகவி சுப்பிரமணிய முனிவர் என்பவர் இவருடைய மாணாக்கர்களுள் ஒருவராய் விளங்கினார். தொட்டிக்கலை சிதம்பரேசுவரர் சந்நிதியில் மாதவச் சிவஞானமுனிவருக்குத் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

    Claim Saiva Siddhanta

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel