தமிழின் தனிதுவம் அறிந்த தமிழன் -இவன் இராவி
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா .....இது அல்ல நமது தலைப்புக்கான சிந்தனை குரல் பதிவை கேளுங்கள் தங்களது கருத்துக்களை பகிருங்கள்
*Warm & heartiest welcome madam* *Contamination* Contaminated mindஉடன் இருந்தால்.... Negative comments வெறுப்பை உண்டாக்கும்.... நாம் சுத்தமாக இருந்தால், நம் சுற்றுப்புறமும்..... *மாறுபட்ட சிந்தனை. நல்ல குரல் வளம். தொடரட்டும் தங்களின் சேவை*
பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார். ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சில இவை: செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பிரகடனங்கள் பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள் உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள் அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற ‘உழைப்பில்லாத வருவாயை' உருவாக்குவதற்கான வழிகள்?
உலகிலே அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கை வழிகாட்டி புத்தகம் இது. எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய பல புத்தகங்களில் "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" எனும் இந்நூல் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்.
உலகிலே அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கை வழிகாட்டி புத்தகம் இது. எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய பல புத்தகங்களில் "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" எனும் இந்நூல் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்.
உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி ....Written by Legendary writter ROBIN SHARMA - 5th and 6 chapter
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் - புத்தக திறனாய்வு ! அத்தியாயங்கள் 7 & 8. By : சுய சிற்பி. ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️புத்தகம் பற்றிய சிறு குறிப்பு:
எமோஷனல் இனடெலிஜென்ஸ். Author : சோம.வள்ளியப்பன் 6th chapter. அவசரம், பரம அவசரம்.
"அவல ஓவியங்கள்" என்ற 9வது அத்தியாயத்தை தினாய்வு செய்யக்கிடைத்த வாய்ப்புக்கு நிகில் குழுவினருக்கு நன்றி நன்றி by Suya Sirpi
பேராசிரியர் Dr ரா. சீனிவாசன் (ரா.சீ) BOOK TITLE: "அணியும் மணியும்" Description தமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலான "அணியும மணியும் ஆகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம். By Jc Vivekraja (Data collection).
கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. ஔரங்கசீப்பின் சகோதரர் தாராசிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த ஔரங்கசீப் தன் சகோதரர் தாராசிகாவின் மேல் படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தாராசிகாவும் ஷாஜகானும் படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஔரங்கசீப்பிற்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்தது தில்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் ஔரங்கசீப்பின் படை தில்லி விரைந்தது. தில்லியில் தாரசிகாவின் படையை வெற்றி கொண்டார். தாராசிகா சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். ஷாஜகான் சிறைபிடிக்கப்பட்டார். தனது மற்ற இரு சகோதரர்களான சுஜாவையும் முராத்தையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீர் முடிசூட்டிக்கொண்டார்.
ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார் ஆலம்கீர் எனில் (பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்). இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
Important discussed points ....10 bullets
NF RMR PUNCH Readers Enclave -ன் புத்தகத் திறனாய்வு பகுதியின் 6 வது அத்தியாயம். தலைப்பு : "இரும்புக்கரம்"
Nihil Foundation & team நடத்தும் புத்தகத் திறனாய்வு நிகழ்ச்சியின் மூன்றாவது நாள் ....அத்தியாயம் 5 ...டெல்லி ஆண்ட பெண்புலி ரஸியா பேகம்.
வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும். வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம்.
பொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டங்களை நிரப்பலாம். கணிப்பொறியிலோ, செல்ஃபோனிலோ பதிவிறக்கம் செய்யப்பட்ட புதியதொரு மென்பொருளைப் பற்றி ஆராயலாம். ஆனால் இவையெல்லாம் போதாது. கீழே சொல்லப்பட்ட முறையான பயிற்சிகளை சரியாக செய்து வந்தால், மூளைக்குள்ளே உள்ள பலதரப்பட்ட திறமைகளை, முதுமையின் காரணமாகவோ, சரியான தூண்டுகோலின்மையினாலோ, அத்திறமைகள் மங்குவதற்கு முன்பாகவே, எப்போதும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
✍️
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். | குறள் எண் – 619
எந்த ஒரு விஷயத்தையும் நாம் தீர்க்கமான மனநிலையுடன் ஆழ்ந்து கற்கும் பொழுது நமக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும் ....அப்படி வரும் சந்தேகங்களை அலசி ஆராய்ந்து ஆழமாக கற்கும்பொழுதும் அதுசார்ந்த வல்லுநர்களிடம் உரையாடல் செய்து வரும் தெளிவே "கசடற கற்பது" என நான் நினைக்கிறேன்... நண்பர்களே, அன்பர்களே..!!
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. படம் :சுமைதாங்கி (1962) பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ் இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. தெய்வமாகலாம்.. ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம் ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம் யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம் மனம்! மனம்! அது கோவிலாகலாம்.. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம்! குணம்! அது கோவிலாகலாம்... மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.. தெய்வமாகலாம்..
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்னை விமர்சிப்பவர்களைப் பற்றி நான் கவலைப் கொள்வதில்லை - ஆனால் அனுதாபப்படுகிறேன் என்னை விமர்சிப்பர்கள் இன்று(இங்கு) மட்டுமில்லை என்னை விமர்சிப்பவர்கள் யாரும் வேற்று கிரக வாசிகளில்லை என்னுடன் ஒரு காலத்தில் நட்புக் கொண்டவர்கள் மட்டுமே நான் எழுந்தால் ஒருஎட்டு வந்து பார்க்காதவர்கள் நான் விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பவர்கள் அவர்கள் என்னைப் பற்றி சிந்திப்பதை விடுங்கள்!!! எனக்கு தாகம் அதிகம் மழை நீர் போதாது -என் பயணம் சமுத்திரத்தை நோக்கி தான்!!! என்னால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும் என் நம்பிக்கைக்கு பல கைகள் உண்டு விதியை நம்பி முகந்தொங்க மாட்டேன் - நான் மூலிகைத் தமிழன் என் கர்வமெல்லாம் கிராம்; கணக்கில் தான் - ஆனால் நம்பிக்கை கிலோ கணக்கில்! விலகி போன பிறகு விழுந்து கிடப்பதெல்லாம் முட்டாள்தனம் நான் முட்டாளில்லை!!! என் பின்னால் என்னைப் பற்றி பேசி என்னை பெரியவனாக மாற்றி விடாதீர்கள்!!! என்னால் தீயையும் மூட்ட முடியும் தீபமும் ஏற்றவும் முடியும் ஆனால் ஒன்று மட்டும் இறுதியாக "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்னை மிரள வைத்து மட்டும் பார்த்து விடாதீர்கள் இழப்பு உங்களுக்கு உங்களுக்கு மட்டுமே!!!
*குரல் பதிவிற்கான அங்கிகாரம்* எனது கடவுளர்கள் அனைவரும் சேர்ந்து *தேவி சரஸ்வதியிடம்
40. கைவினை கரவேல். (பதவுரை) கைவினை - (உனக்குத் தெரிந்த) கைத் தொழிலை, கரவேல் - ஒளியாதே. (பொழிப்புரை) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய். (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)
கலைநிறை கணபதி சரணம் சரணம் கஜமுக குணபதி சரணம் சரணம் தலைவநின் இணையடி சரணம் சரணம் சரவண பவகுக சரணம் சரணம் சிலைமலை யுடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் உலைவறு மொருபரை சரணம் சரணம் உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
தோல்வி என்பது கற்றுக்கொள்வது வெற்றி என்பது பெற்றுக்கொள்வது..!!
ஞானப் பாடல்கள் 83. ஆத்ம ஜயம் கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே! என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ! தன்னை வென்றா லவை யாவும் பெறுவது சத்திய மாகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் முற்றுமுணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ?
1. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. 2.“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து.”
ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல் (Motivation) என்பது மக்களின் செயல்கள், ஆசைகள் மற்றும் தேவைகளுக்குக் காரணமாக அமைவதாகும். ... உணர்வு நிலைக் காரணிகள் மற்றும் தன்னையறியாமல் இருக்கும் உள்மன நிலைக் காரணிகள் ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த விளைவாகவே ஊக்கம் இருக்கின்றது.
உவமைத் தொடர் நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது "உவமையணி". அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர்கள் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன. இலைமறை காய்போல் - ஆற்றல் வெளிப்படாமல் இருத்தல் அத்தி பூத்தாற்போல் - எப்போதாவது கீரியும் பாம்பும் போல் - எப்போதும் பகை உணர்ச்சி பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் - பசுமை ....இவ்வாறாக இந்தப் பட்டியல் நீள்கிறது...... வாருங்கள் நண்பர்களே நம் தலைப்பிற்கு செல்வோம்
என் கவனச்சிதறல்களால் உணர்ந்து கொண்டவை..... 1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை. 2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன். 3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்து விட்டேன். 4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன். 5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2, 3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும். ......plz hear the audio give your valuable feedback
புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும் - அடால்ஃப் ஹிட்லர் .....என்ற தகுதிவாய்ந்த புரிதல் வந்துவிட்டால் நம்வாழ்வில் எப்பொழுதும் வெற்றியே-இராவி
எனது தமிழ்வழி பள்ளிக்கல்வி அதைத்தொடர்ந்து ஆங்கில தொழிட்கல்வி பயம்,பதற்றம், தாழ்வு மனப்பான்மை, மொழிசார்ந்த பின்னடைவு என பலப்பல பட்டரிவுகள் மற்றும் தோல்விகள். JCI அனுபவங்கள் பயிற்சிகள் அதைச்சார்ந்த முயற்சிகள் கடைசீயில் கிடைத்த வெற்றி.....என்று எனக்காக நான் வைத்துக்கொண்ட பலப்பரிட்சைகள் ஏராளம்.... இப்படிக்கு இராவி
ஏன் இந்த குரல் பதிவு?? உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர். "பதினாறு பண்புகள்"
ரங்கராட்டினம் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை நமக்கு தருகிறது..... வாருங்கள் சுற்றுவோம் ராட்டினத்தில்
இரவை துன்பங்களோடும், பகலை வெற்றியோடும் ஒப்பிட்டு பார்த்து, பகுத்து ஒரு முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவு நம்மை குறிப்பிட்ட இந்த தலைப்பை நோக்கி நகர்த்துகிறது. நன்றி வணக்கம்.
நம் அனைவருக்கும் அற்புதமான மகிழ்ச்சி பொங்கும் குடும்ப சூழல் அதிகமாகவே உள்ளது... ஆனால் அவைகளை நாம் சரியாக அடையாளம்கான தவருவதால் மட்டுமே பிரச்சனைகள் பெரிதாக தோன்றுகிறது என்பது முற்றிலும் உண்மை.
எவ்வளவுதான் உயர்ந்தாலும் இன்னும் உயர வானம் என்ற ஒன்று இருப்பது போல... என்னதான் ஒருவன் பலசாலியாக இருந்தாலும் அவனையும் விஞ்சும் பலம் கொண்டவர் மற்றொருவர் இருக்கத்தான் செய்வார் என்பது நிதர்சனம். இப்படிக்கு ஜேசி இரா. விவேக்ராஜா