Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!
Alfred is an Indonesian migrant, and Clinton is an Aboriginal man from Western Australia. Their friendship changed the way Alfred understood his identity as a migrant Australian. - Alfred இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், Clinton மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பூர்வீகக்குடியின பின்னணி கொண்டவர். Clinton உடனான நட்பு புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியராக தனது அடையாளத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றியது என்கிறார் Alfred.
ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.5 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
SBS வானொலி தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், பன்முகத்தன்மை கொண்ட மற்றும் அர்ப்பணிப்புள்ள SBS வானொலி நேயர்கள் குறித்து, நான்கு நீண்டகால நேயர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3700 ஆக உயர்வு; தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்ததாக நடிகர் கமலஹாசனின் சர்ச்சை பேச்சு - கர்நாடகாவில் வலுக்கும் போராட்டங்கள்; அதிமுக கூட்டணிக்கு வந்தால், துணை முதலமைச்சர் ஆக்குவதாக வாக்குறுதி! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி; பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே உச்சகட்ட மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்று வாங்குவது என்பது வெறும் கனவு மட்டும் அல்ல அது ஒரு குறிக்கோளாகவும் பார்க்கப்படுகிறது. வீடு ஒன்று வாங்க திட்டமிடும் போது அதற்கு எவ்வாறு நாம் தயாராவது மற்றும் 'Open House ' போன்றவற்றிக்கு சென்று வீடுகளை பார்க்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் Real Estate துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான திரு அரன் கந்தையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் steel எஃகு மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி ஜூன் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (25 மே – 31 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 31 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
சிட்னி Mount Colahஇல் மரக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய நபருக்கு 30 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
காலத்துளி நிகழ்ச்சியில் தற்கொலையைத் தவிர்க்க வைக்கும் Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் Sex Toys பற்றி விளக்குகிறார். தொடரின் ஐந்தாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை அடுத்து வடக்கில் சுமார் 6000 ஏக்கர் நில சுவீகரிப்பினை மீளப்பெற்றது இலங்கை அரசு; இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் சுமார் 800 கிலோ போதைப் பொருளுடன் இரு படகுகளில் 11 பேர் கைது; பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள உகந்தைமலை புத்தர் சிலை விவகாரம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
மாணவர் விசா நேர்காணலை நிறுத்திய அமெரிக்கா; இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் ராஜாங்க மோதல்; வங்கதேசத்தில் ஜூன் 2026க்குள் தேர்தல்; ரஷ்யா- உக்ரைன் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு; முதல் இனப்படுகொலை நினைவு தினத்தை அனுசரித்த நமீபியா; காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஆஸ்திரேலிய அரசு HECS-HELP மற்றும் பிற மாணவர் கடன்களில் 20% குறைப்பு செய்யும் திட்டத்தை நவம்பர் 2024இல் அறிவித்தது. இந்த குறைப்பு 2025 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய outback என்று சொல்லப்படும் தொலைதூர இடங்களை நிலஅளவை செய்ய ஊக்குவித்த Donald George Mackay குறித்தும், 1930ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட அளவை குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அரும்பிய ஆயுர்வேதம் வாழ்க்கை மற்றும நீ்ண்ட ஆயுளுக்கான அறிவியலாகும் என்றும் அதுவே உலகின் மிகவும் பழமையான ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பாகும் எனக் கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வர்மக் கலை பற்றி உரையாடுகிறார் சிட்னியில் ஆயுர்வேத மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் நிக்கிலா வேணுகோபால். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
விமான எரிபொருளின் விலைகள் குறைவாக உள்ள காரணத்தினால் Domestic Airlines உள்நாட்டு விமானச் சேவைகளின் விமானக் கட்டணங்கள் குறைத்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
யோகாவில் பல வகைகள் இருப்பதை நாம் அறிவோம். இது சற்றுவித்தியாசமான சிரிப்பு யோகா. இதை பல இடங்களில் பரப்பி வருகிறார் சிரிப்பானந்தா. அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
லிபரல் கட்சியும் நஷனல் கட்சியும் மீண்டும் கூட்டணியாக இணைந்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
கைலாய மலையை சுற்றிய பரிக்கரமா(கிரிவலம்) நடை பயணம் சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. கைலாய மலை பரிக்கரமா நடை பயணம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள Touch Kailash Australiaவை சேர்ந்த செல்வராஜ் ராஜேந்திரன் அவர்கள் கைலாய மலைக்கு குழுவாக அழைத்து செல்லும் பணியும் செய்துவருகிறார். கடந்த ஆண்டு கைலாய மலை சென்று திரும்பியுள்ள 15 வயதான தியானா மற்றும் செல்வராஜ் ராஜேந்திரன் இருவரும் SBS ஒலிப்பதிவுக்கூடம் வரை வந்து தங்களின் பயண அனுபவங்கள் மற்றும் கைலாய மலை பயணத்திற்கு எப்படி தயாராக வேண்டும் மேலும் அதில் உள்ள சவால்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக உரையாடுகிறார்கள். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.
Do you know someone who makes an extraordinary impact in the community? It could be a person from any background or field of endeavour. You can help celebrate their achievements by nominating them for an Order of Australia. The more we recognise extraordinary members within our communities, the more Australia's true diversity is reflected in the Australian honours list. - எமது சமூகத்திலுள்ள சாதாரண உறுப்பினர்களின் சிறந்த சாதனைகளைக் கொண்டாடுவது ஏன் முக்கியம் என்பது தொடர்பிலும், அவர்களை Order of Australia விருதுக்கு எப்படி பரிந்துரைக்கலாம் என்பது தொடர்பிலும், Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
விக்டோரியா மாநிலத்தில், மே 28 புதன்கிழமை மதியம் முதல், Machete எனப்படும் வெட்டுக்கத்திகளின் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இந்தியாவில் நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக திமுக- அதிமுக கட்சிகளின் தொடரும் காரசார விவாதம்; சென்னை அடையார் ஆற்றங்கரை பகுதியில் வீடுகள் இடிப்பும், எதிர்ப்பும்; மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் உள்பட பலர் சுட்டுக்கொலை; ஆவணங்களற்ற குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வங்கதேசிகளை நாடுகடத்தியுள்ள இந்தியா உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/05/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
2025–26 விக்டோரிய நிதிநிலை அறிக்கையில் அகதிகள் தொடர்பில் என்னென்ன உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
அல்சைமர் நோயின் தீவிரத்தன்மையை மெதுவாக்கும் ஒரு மருந்து ஆஸ்திரேலியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Australia has a dark chapter of history that many are still learning about. Following European settlement, Aboriginal and Torres Strait Islander children were removed from their families and forced into non-Indigenous society. The trauma and abuse they experienced left deep scars, and the pain still echoes through the generations. But communities are creating positive change. Today these people are recognised as survivors of the Stolen Generations. - ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம் உள்ளது, அதைப் பற்றி பலர் இன்னமும் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதுதொடர்பில் Melissa Compagnoni மற்றும் Rachael Knowles இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இவ்வேளையில் SBS தமிழ் ஒலிபரப்பு கடந்துவந்த பாதையை விளக்கும் விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்க துறை விசாரணைக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு - இ.டி விசாரணைக்கு பயந்து ஸ்டாலின் பங்கேற்றதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
இணையம், மொபைல் என்று பல வழிகளில் ஒருவர் எமாற்றப்படுவதும், Scam போன்ற மீள முடியாத சிக்க்களில் மாட்டிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த பின்னணியில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நீங்கள் scam – மோசடி கும்பலினால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தவுடன் IDCARE அமைப்பை 1800 595 160 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/05/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
$3 மில்லியனுக்கும் அதிகமான இருப்பு உள்ள Superannuation ஓய்வூதிய கணக்குகள் ஈட்டும் வருவாய் மீதான வரியை 15 சதவீத்திற்கு பதிலாக 30 சதவீதமாக இரட்டிப்பாக்கும் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் போன நிலையில் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (18 மே – 24 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 24 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் சிந்து நதி நீர் பங்கீடு விவகாரம்; காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்; தென்னாப்பிரிக்காவில் 'வெள்ளை இனப்படுகொலை' பற்றிய அமெரிக்க அதிபரின் கேள்விக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா; போர்க்கப்பல் விபத்தை 'குற்றச் செயல்' என்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்; மியான்மரில் ராணுவ அரசாங்கத்துக்கும் ஜனநாயகத்தை கோரும் எதிர் தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
சிட்னிக்கும் கோல்டு கோஸ்ட்க்கும் இடையை இருக்கும் காவ்ஸ் ஹார்பர் (Coffs Harbour) என்ற இடத்தில் அமைந்துள்ள பிக் பனானா என்ற பொழுதுபோக்கு தளத்தின் வரலாறு, அதில் உள்ள பல்வேறு சுவையான அம்சங்கள், அது எப்படி ஆஸ்திரேலியாவின் ஒரு சின்னமாக விளங்குகிறது என்பன போன்ற தகவல்களை “ஆஸ்திரேலியா அறிவோம்” எனும் தொடர் வழி தருகிறார் உயிர்மெய்யார்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
முல்லைத்தீவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்; வன்னியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் இணைந்து கண்டனம்; சர்வதேச தேயிலை தினத்தில் உரிமை கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
NSW மாநிலத்தில், வாடகைக்குக் குடியிருப்போருக்கு சாதகமான புதிய சட்ட மாற்றங்கள் இம்மாதம்(May 2025) 19ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
வேலைக்கு ஒருவரை தெரிவு செய்வதில் AI - Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு நேரடியாக களம் இறங்கியுள்ளது. AI கருவிகளைப் பயன்படுத்தி திறமையாளர்களை மதிப்பீடு செய்து, நேர்முகம் செய்து பணிக்கு அமர்த்தும் முறை ஆஸ்திரேலியாவில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
மைதா மாவில் உருவாகும் பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை நாம் ஏன் தவிர்க்கவேண்டும் என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
இந்திய எழுத்தாளர் பானு முஷ்டாக் இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஒருவருக்கு தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பற்றியும் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 22 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள், எவ்வாறு தேனீக்களை பாதுகாப்பது மற்றும் வீட்டில் எவ்வாறு தேனீக்கள் வளர்ப்பது போன்ற பல தகவல்களை எடுத்து வருகிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
‘காவியத்துக்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன்' என்று இலக்கியத்தின் பேராளுமை ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார். அப்படியான தமிழ் சிறுகதையின் முன்னோடியான புதுமைப்பித்தன் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
சிட்னி விலவூட் குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து சிட்னி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்ற நபர் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Jaffna Medical Faculty Overseas Alumini – Australia Doctors Charity Fund இலங்கையில் உள்ள முதியோர் நல மேம்பாட்டிற்காக சிட்னியில் நடத்தவுள்ள Charity Walk நிதிதிரட்டும் நடைபயணம் குறித்து உரையாடுகிறார்கள் சிட்னியில் Westmead மருத்துவமனையில் முதியோர் நல மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் பூரணி முருகானந்தம் மற்றும் Hunter New England Health Care Services-இல் Emergency Physician-ஆக பணியாற்றிவரும் டாக்டர் புஷ்பகுமார் பூர்ணலிங்கம். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.