Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!

இலங்கை முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய Ditwah புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னியில் புதிய மெட்ரோ நிலையமான Gadigal Metro Station, 2025 ஆம் ஆண்டின் உலகின் அழகான பயணிகள் நிலையங்கள் பட்டியலில் Prix Versailles மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 2/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

Ethnic Communities Council of NSW (ECCNSW) முன்னெடுத்துள்ள சமூக சாலை பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்குகிறார் ECCNSW-இல் தமிழ் இருமொழி ஆசிரியராக கடமையாற்றும் மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

2025 செப்டம்பர் மாதம் வரையிலான 12 மாதங்களில் 73,000க்கும் மேற்பட்ட நியூசிலாந்து குடிமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

Airbus A320 விமானங்களில் அவசர மென்பொருள் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உலகளவில் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள்; அன்புமணி தான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு; முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

தோல் புற்றுநோய் குறித்து நம்மிடையே நிலவும் தவறான புரிதல்கள் குறித்தும், தோல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் விளக்குகின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

மெல்பனின் நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட metro tunnel- சுரங்கத்திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளோம். அந்தவகையில் Physiotherapy தொடர்பில் அறிந்துகொள்வோம். Physiotherapy சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிட்னியைச் சேர்ந்த physiotherapist பிரியா ஞானகுமாரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

அமெரிக்கா, வெனிசுவேலா மீது தாக்குதலை நடத்த ஆயத்தமாக இருப்பதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதன் பின்னணி தொடர்பிலும் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் அவரது இணையான Jodie Haydonனும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (23 – 29 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.

டாஸ்மேனியாவில் Deepinderjeet Singh என்ற 27 வயது இளைஞர் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'take it easy'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use' என்பது 'take it easy' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 28/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

எச்சரிக்கை - Black Friday விற்பனை பரபரப்புக்கிடையில், புதிய வகை இணையவழி மோசடி ஒன்று பெருமளவில் பரவி வருகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

மட்டக்களப்பில் தொல்லியல் திணைக்களத்தின்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு. அமைதியாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பலபகுதிகளில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளிட்டசெய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றைமுன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர்மதிவாணன்.

ரஷ்யா- உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நிலை; அமெரிக்கா- வெனிசுலா மோதல் போக்கு: பல நாடுகளின் முக்கிய விமானங்களுக்கு தடை; அமெரிக்காவில் தேசித காவல்படையினர் மீது ஆப்கானியரின் தாக்குதல்; மேற்குக்கரையை குறிவைத்துள்ள இஸ்ரேலிய படைகள்; வங்கதேச குடிசைப்பகுதிகளில் தீ விபத்து; ஹாங்காங்கில் அடுக்குமாடிகள் தீ விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் பிரதேசங்களிலும் கார் ஓடிக் கொண்டிருக்கும் போது சீட் பெல்ட்டை கைகளுக்கு கீழே வயிறு பகுதியில் அணிந்திருந்தால் அபராதம் விதிக்கபடும். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.

சிட்னி மருத்துவமனைகளில் இந்து சமய பிராத்தனையாளராக பணிபுரியும் ஜெயந்தி ரமணன், தனது பணி குறித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

ஒட்டகம் ஆஸ்திரேலிய மண் சார்ந்த விலங்கு அல்ல. ஒட்டகம் தாவரங்களை அழிக்கிறது, தண்ணீரை குடிக்கிறது என்பதால் ஒட்டகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இந்த நாட்டுக்குள் ஒட்டகம் எப்படி வந்தது, விருந்தாளியாக அழைத்துவரப்பட்ட ஒட்டகத்தை ஆஸ்திரேலியா எப்படி பகையாளியாக்கியது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.

மேற்குத் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் நாட்டின் மிக அதிகமாக வீட்டு வாடகைக்கு செலவாகும் தலைநகரம் என்ற நிலையை தக்க வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

விசா ரத்துச்செய்யப்பட்டவர்களை நவுருவுக்கு அனுப்பும் திட்டத்தை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'call it a day'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use' என்பது ‘call it a day' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

Obesity is one of the major health issues affecting many people in our community. The causes of obesity, its impact on health, and ways to overcome it are explained in a simple and easy-to-understand manner by General Physician Dr Thiyagarajah Srikaran. The interview is conducted by Praba Maheswaran. - நமது சமூகத்தில் பலரையும் பாதிக்கும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கதொன்று உடற் பருமன் ஆகும். உடற் பருமனுக்கான காரணங்கள், உடல்நல பாதிப்புகள் மற்றும் இதிலிருந்து மீள என்ன செய்யலாம் என்பதை எளிய முறையில் விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர்(GP) Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவின் உணவு delivery பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

"மாபெரும் மக்கள் குரல்" என்ற தொனிப்பொருளில் அரசுக்கு எதிரான பேரணி ஒன்று கூட்டு எதிர்க்கட்சியால் நடாத்தப்பட்டது. இது அரசை சீர்குலைக்கும் முயற்சி என ஆளுந்தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினாினதும் கருத்துக்களோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

நவம்பர் 17 முதல் 23ஆம் தேதி வரை Cervical screening கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும்பரிசோதனை குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும் பரிசோதனை குறித்த விரிவான விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இந்திய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் MATES - Mobility Arrangement for Talented Early professionals Schemeஇன் அடுத்த கட்டம் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

விமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் பவர் பேங்க் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

தமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். "பாரதியாருக்குப்பின் யாருடைய கவிதைகளையும் நான் படித்ததில்லை. ஆனால் தமிழன்பன் போன்றோர் நல்ல கவிதைகளைப் படைக்கிறார்கள் என்பதை அறிந்தபோது கவிதை வளர்ந்துகொண்டுதான் உள்ளது, நாம்தான் இத்தனை காலம் அவற்றை படிக்காமல் விட்டுவிட்டோம் என்று கவலைப்பட்டேன்" என்று தமிழின் மூத்த இலக்கியவாதி ஜெயகாந்தன், ஈரோடு தமிழன்பன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். இப்படியாக கவிதை உலகில் தனி முத்திரை பதித்த ஈரோடு தமிழன்பன் அவர்களது கவிதைகளில் ஒன்றை அவரது குரலியே செவிமடுப்போம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.

தமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ' எனும் கவிதை நூலுக்காக 2004ம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டபோது SBS தமிழ் அவரை நேர்கண்டிருந்தது. அந்த நேர்முகத்தின் மறுபதிவு இது. அவரோடு உரையாடியவர் றைசல்.

சிங்கப்பூர் அரசு உலகில் முதன்முறையாக ‘Sustainable Aviation Fuel Levy' SAF என்ற புதிய வரியை அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் இருவரும் கரியமில உமிழ்வு இல்லாத பசுமையான விமான எரிபொருளின் செலவை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த SAF வரி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இந்தியா முழுவதும் புதிய தொழிலாளர் சட்டம் அமல்; தமிழக சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை!; காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ”மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

நாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (16 – 22 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.

Our social cohesion is under threat. But building stronger community ties can help grow connection, trust and shared belonging. - நமது சமூக ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் வலுவான சமூக இணைப்புகளை உருவாக்குவது தொடர்பு, நம்பிக்கை மற்றும் பகிரும் உணர்வை வளர்க்க உதவும்.

“ஆஷஸ் (The Ashes)” என்பது கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் நடைபெறும் இப்போட்டியின் 74வது தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 3

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிபர் அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு மற்றும் வடக்கு , கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் ஆதரவளிப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளுந்தரப்பு மறுப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி”நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உக்ரைனில் போர் நிறுத்தம்? அமெரிக்கா, ரஷ்யாவின் புதிய திட்டம்; காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; சூடானில் உள்நாட்டு யுத்தம்: முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக டிரம்ப் அறிவிப்பு; பிரேசிலில் COP30 மாநாடு; DR காங்கோவில் சுரங்க விபத்து: 32 பேர் பலி; நைஜீரியாவில் 25 பெண் குழந்தைகள் கடத்தல்; ஆப்பிரிக்காவில் மோசமான பாதுகாப்பு சூழ்நிலை: ஐ.நா. எச்சரிக்கை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1