Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!

104 போட்டிகள் மற்றும் ஒரு மாத கால மறக்க முடியாத கால்பந்துப் போட்டிக்குப் பிறகு, விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கால்பந்தின் மிகப்பெரிய பரிசை வென்று, FIFA உலகக் கோப்பை 2026 சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வென்றுள்ளது.

இரத்தப் பரிசோதனையால் Alzheimer நோயை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

ஆஸ்திரேலியாவில் பலரும் தற்போது தங்களது Tax Return-ஐ தாக்கல் செய்து வரும் நேரமிது. இவ்வேளையில் Tax தொடர்பான பல முக்கிய கேள்விகளுக்கு எளிய விளக்கம் தருகிறார் Taxation and Accounting துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஸ்ரீ பத்மநாதன் அவர்கள். அவர் Chartered Accountant மற்றும் OzLedger – Accountants & Tax Agents நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.It is tax return time in Australia, with many people currently lodging their returns. Sri Pathmanathan, a Chartered Accountant with more than 20 years of experience in taxation and accounting, provides clear explanations to some important tax-related questions. He is the founder of OzLedger – Accountants & Tax Agents.

பிரபல நிதி நிபுணர்களின் பெயரில் புதிய முதலீட்டு மோசடிகள் நடைபெறுவதாக ASIC Australian Securities and Investments Commission எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 20/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி வெளியாகிறது; சென்னையில் லஞ்ச ஒழிப்பு சோதனை எதிரொலியாக 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம்; தமிழகத்தை உலுக்கிய நாகர்கோவில் காவல் மரணம் உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.India & Tamil Nadu: News highlights from the past 7 days

ஆஸ்திரேலியாவின் இந்த வார (12 – 18 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.Top news from Australia this week (12 -18 July 2026)

FIFA உலகக் கோப்பை 2026-இன் முப்பத்தாறாம் நாளில், ஆர்ஜென்டீனா மற்றும் ஸ்பெயின் தலைநகர்களில் கால்பந்து இரசிகர்கள் அந்த பரபரப்பு, உணர்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை எவ்வாறு அனுபவித்தார்கள் என்றும் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாட்கள் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்தாறாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

2013ஆம் ஆண்டு அகதியாக ஆஸ்திரேலியா வந்த சுகன் பாலுசாமி தற்போது Sugan's Transport என்ற நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமான தொழிலதிபராக வளர்ந்து வருகிறார். சுகன் பாலுசாமி தனது கதையை எம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரிடம் கேட்டறிந்து கொள்கிறார் செல்வி இன்பசேகரன்.

It's no exaggeration when we hear that the FIFA World Cup is bringing the world together. After all, football is known as the world's most popular sport. But football really begins on the suburban ovals and in the local clubs, with everyday players of all ages and abilities. Here's how you can become one of them. - உலகின் மிகப் பிரபலமான விளையாட்டான கால்பந்து, குறிப்பாக ஃபிஃபா உலகக் கோப்பை, உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஒன்றிணைக்கிறது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் கால்பந்தின் தொடக்கம் உள்ளூர் மைதானங்களிலும் சமூக விளையாட்டுக் கிளப்புகளிலும்தான். எல்லா வயதினரும், எல்லாத் திறன் கொண்டவர்களும் இதில் விளையாடுகிறார்கள்.நீங்களும் ஒரு உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடத் தொடங்குவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

ஆஸ்திரேலியாவில் மளிகைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய சட்டத்தின் கீழ், பெரிய பல்பொருள் அங்காடிகளின் (supermarkets) விலை நிர்ணயத்தை இனி ACCC தீவிரமாகக் கண்காணிக்கவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றம்; எல் நினோ காலநிலை மாற்றம் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழிப்பூட்டும் செயற்பாடுகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.Top news from Sri Lanka this week

குழந்தை மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியாக சுரண்டும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவு - AI வேகமாக நுழைந்து புதிய ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவு கூறுகிறது. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.New Australian research reveals how artificial intelligence is being used in the online sexual exploitation of children and young people. The study examines AI-generated sexual images, sextortion, the targeting of boys, and why some victims turn to AI for help, highlighting urgent concerns about child safety, regulation and prevention.

Lionel Messiவின் வித்தைகளால் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் கடைசி நிமிடத்தில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்தைந்தாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அனைத்து விடயங்களின் மதிபீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

பண்டைய கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மொழிகளை நவீன வாழ்க்கையுடன் இணைக்கின்ற வகையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், கல்வி புகட்டும் கருவிகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை The Heritage Supply Co என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவி, இயக்கி வரும் லக்ஷ்மி எஸ். நிர்மலானந்தா அவர்களுடன் ் குலசேகரம் சஞ்சயன் 2022ஆம் ஆண்டு நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு.

Car Insurance என்றால் என்ன? Car Insuranceல் உள்ள வகைகள் என்ன? விபத்துகளில் ஈடுபட்ட கார்களின் ஓட்டுனர்கள் தங்களின் Insurance நிறுவனத்திற்கு தெரிவிக்க சேகரிக்க வேண்டிய விடயங்கள் என்ன? இது போன்று Car Insurance குறித்த பல கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கிறார் சிட்னியை சேர்ந்த வழக்கறிஞர் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

ஆஸ்திரேலியாவில் COVID பெருந்தொற்றுக்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்வது பல ஆஸ்திரேலியர்களின் வேலை வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறியுள்ளது. பலர் Work From Home முறையை விரும்புகின்றனர். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்துகின்றன. இந்த பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு ஊழியரின் சட்டப்பூர்வ உரிமையா? ஒரு Work From Home கோரிக்கையை நிறுவனம் எந்த காரணங்களின் அடிப்படையில் மறுக்க முடியும்? அண்மைய Fair Work Commission தீர்ப்புகள் என்ன சொல்கின்றன? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.Since the COVID pandemic, working from home has become a regular part of working life for many Australians. Many employees prefer the flexibility of working from home. However, an increasing number of employers are now requiring their staff to return to the office. Against this backdrop, is working from home a legal right for employees in Australia? On what grounds can an employer refuse a work-from-home request? And what do recent Fair Work Commission decisions tell us?

சிட்னி நகரின் வானளாவிய தோற்றத்தை மாற்றவுள்ள புதிய ஆடம்பர குடியிருப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் பூமணி மறைந்தார். கரிசல் மண்ணின் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும், சமூக உறவுகளையும் மிகுந்த யதார்த்தத்துடன் தனது படைப்புகளில் பதிவு செய்தவர் பூமணி. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்பட்ட காலப்பகுதியில், 2014ஆம் ஆண்டு, எழுத்தாளர் பூமணியை நாம் நேர்காணல் செய்திருந்தோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலை, எழுத்தாளர் பூமணியின் நினைவாக மீண்டும் உங்களுக்காக ஒலிபரப்புகிறோம். அவருடன் உரையாடியவர்: றைசெல்.Writer Poomani, one of the most important figures in the Tamil literary world, has passed away. Through his works, Poomani portrayed with great realism the people of the Karisal region, their lives and their social relationships. He was awarded the Sahitya Akademi Award, one of India's most prestigious literary honours, for his novel Agnaadi. Around the time he received the award in 2014, we interviewed writer Poomani. In memory of Poomani, we are rebroadcasting that interview, recorded 12 years ago.

குழந்தைகளில் அதிகரித்து வரும் பதட்டம் (Anxiety) – குழந்தைகளின் மனநலம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளில் பதட்டம் ஏன் அதிகரிக்கிறது, அதன் அறிகுறிகள் என்ன, பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, பன்முகக் கலாச்சாரப் பின்னணி மற்றும் மனஉளைச்சல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் குழந்தை உளவியலாளர் , தற்போது ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறைத் துறையில் பணியாற்றி வரும் உளவியலாளர் ஸ்மிருதி நாயர் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் அவரோடு உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

அரை இறுதிப் போட்டியில் ஃபிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. இந்தத் தோல்வி, ஃபிரான்ஸின் Les Bleus அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. தற்போது அவர்களின் கவனம் சனிக்கிழமை நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டி மீது திரும்பியுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்துநான்காம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சோகச் செய்தி நான்கு மாதக் குழந்தையின் தாயான, முப்பது வயதுடைய ஜானா ஆம்ஸ்ட்ராங் (Jana Armstrong), டூவூம்பா (Toowoomba) நகரில் காணாமல் போய், நாட்களாகத் தேடப்பட்ட நிலையில், அவரது உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில், அவரது முன்னாள் வாழ்க்கைத் துணையும், அக்குழந்தையின் தந்தையுமான, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

சிட்னி முருகன் கோவில் வளாகத்தில் Sydney Cultural Community Centre ஒன்றை உருவாக்கும் திட்டம் தொடர்பாக சைவ மன்றத்துக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இந்தத் திட்டம் தொடர்பாக நம்முடன் பேசுகிறார் சிட்னி முருகன் கோவிலை நிர்வகிக்கும் சைவ மன்றத்தின் தலைவர் அனந்தநடராஜா பகீரதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

AIHS, The Australian Institute of Health and Safety என்ற ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, இந்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள், பணியிடத்தில் இனப்பாகுபாட்டை நேரடியாக அனுபவித்திருக்கிறார்கள், அல்லது அது நடப்பதைக் கண்ணால் கண்டிருக்கிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ், முஸ்லிம் கட்சிகள் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

ஆஸ்திரேலிய சர்வதேச விமான நிலையங்களில் Passenger Arrival Card காகித வருகைப் படிவங்களுக்கு பதிலாக டிஜிட்டல் பயணிகள் அட்டைகள் அறிமுகமாகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

Centrelink வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில் புதிய வகை மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

உங்கள் மொபைலை நீங்கள் வேலைக்கு அதிகம் பயன்படுத்தினால் அதற்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது வரிச்சலுகையாக கோரலாம். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

தொடக்கத்தில் போட்டியிட்ட சாதனை அளவிலான 48 அணிகளில், தற்போது நான்கு அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கின்றன. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்திரண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள E-OCI (Electronic Overseas Citizen of India) கார்டு, OCI விண்ணப்ப செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவில் எளிதாக்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் பாடகி, S. ஜானகி அவர்கள் நேற்று முந்தினம், ஜூலை பதினோராம் தேதி, மைசூரில், தனது எண்பத்தெட்டாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் குறித்த ஒரு நினைவுப்பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் கடுமையான நடவடிக்கைகளோடு மேலும் பல மாற்றங்களையும் தற்போது அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் புதிய சவால்கள் குறித்தும் எளிதாக விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

வியட்நாம் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 10 தமிழர்கள் பலி; பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு; தமிழகத்தில் நடைபெற இருந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

ஆஸ்திரேலியாவின் இந்த வார (5 – 11 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் ஆஸ்திரேலியா பயணம் ஆஸ்திரேலியா இந்திய உறவு எந்த திசையில் நகர்கிறது என்பதை அளவிடும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. யுரேனியம் ஏற்றுமதி உட்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்திய பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

ஃபிஃபா உலகக் கோப்பையின் 29-வது நாளில், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் பிரான்ஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. Kylian Mbappé எட்டு கோல்களுடன் Lionel Messi [[lee-oh-NEL MESS-ee]] அடித்த கோல்களுடன் சமநிலையை எட்டிய அதே வேளை, Ousmane Dembélé பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தொன்பதாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Qantas கோவிட் Flight Credit வழக்கில் இழப்பீடு பெறத் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு Qantas நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

NAIDOC வாரம், இந்த வருடம் ஜூலை 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. NAIDOC வாரத்தின் முக்கியத்துவம் குறித்து ஒரு நேர்காணல். Dr ராமா ஜெயராஜ் அவர்கள், சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர். உயர்கல்வியில் விரிவான அனுபவம் கொண்ட இவர், தமிழ், மற்றும் பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராயும் ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளரும் ஆவார். பூர்வீகக் குடிமக்கள் குறித்து அவரது ஆராய்ச்சி, கடந்த ஐம்பது வருடங்களில் அவர்களது வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்துடன் அவர் கண்ட ஒற்றுமைகள் குறித்து Dr ராமா ஜெயராஜ் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

தமிழ்மொழி அதன் சொந்தச் செழுமையோடும் தனித்தன்மையோடும் வளர வேண்டும் என்று வலியுறுத்திய முக்கிய அறிஞர்களில் ஒருவர் மறைமலை அடிகள். எழுத்தாளர், சைவ சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி என பல தளங்களில் அவர் நினைவுகூரப்படுகிறார். மறைமலை அடிகள் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

ஆஸ்திரேலியர்கள் முன்பைவிடத் தற்போது நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள். ஆனால், அந்த நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்க்கையாக இருக்கிறதா? Australian Institute of Health and Welfare (AIHW) வெளியிட்டுள்ள "Australia's Health 2026" அறிக்கை, நாட்டின் தற்போதைய சுகாதார நிலை குறித்த முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

வடக்கு . கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்; சமூக ஊடக செயற்பாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள், வெள்ளிக்கிழமை அன்று, பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியுடன் மீண்டும் தொடங்குகிறது. கத்தார் நகரில் 2022 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதியிருந்தன. மொராக்கோ தனது பழிவாங்கலைத் தீர்க்குமா, அல்லது பிரான்ஸ் மீண்டும் வெற்றி பெறுமா? உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தெட்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியாவில் SMS Sender ID தொடர்பான புதிய விதிமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், நிறுவனங்களின் பெயரில் வரும் குறுஞ்செய்திகள் உண்மையானதா என்பதை மக்கள் எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதை றைசெல் விளக்குகிறார்.

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியத்தையும், மக்களிடையே ஒழிந்திருக்கும் கலை வளங்களையும் கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறனுடன் நிரந்தரப் படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும் முனைவர் K சுபாஷினி அவர்கள், தனது செயற்பாடுகள் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். பார்க்க: http://www.tamilheritage.org/