Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!
சிட்னி புத்தாண்டு கொண்டாட்ட வாணவேடிக்கையை இலவசமாக பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டுக்களைப் பெறுவதற்கான வலைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியா வரும்போது மல்லிகைப்பூ சரத்தைக் கொண்டுவந்த இந்திய நடிகைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சிட்னியைச் சேர்ந்த கேதாரன் பார்த்தீபன் எழுதி இயக்கிய தமிழ்–ஆங்கில இருமொழி நாடகமான 'Twice Upon a Time' எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று UNSW-இல் மேடையேறுகிறது. இதுதொடர்பில் கேதாரன் பார்த்தீபனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
வார இறுதியில் மெல்பனின் மேற்கில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, gang crime-கும்பல் குற்றங்களை கையாள்வதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள் தேவையா என்பதை விசாரித்து வருவதாக விக்டோரிய Premier Jacinta Allan தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
ஐ,நா மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
அமெரிக்காவுக்கு பார்சல் - பொதிகளை அனுப்பும் சேவையை Australia Post மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் சிறப்புகளில் “Ute” வாகனமும் ஒன்று. ஆஸ்திரேலியாவில்தான் இந்த Ute வாகனம் முதன் முதல் வடிவமைக்கப்பட்டது. அதன் வரலாற்றை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 09/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
சிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்தும் கீதாவணி விருதுகள் 2025 நிகழ்ச்சி செப்டம்பர் 14 ஆம் தேதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் சிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரவி ராஜ் வேலுப்பிள்ளை அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
குரு காரைக்குடி மணி அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி இசை நிகழ்ச்சி ஒன்றை ஸ்ருதி லய கேந்திரா, ஆஸ்திரேலியா என்ற அமைப்பின் சாய் சகோதரர்கள் வழங்க உள்ளார்கள். கர்நாடக தாள வாத்தியத்தில் புரட்சியை ஏற்படுத்திய, மிகச்சிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான காரைக்குடி மணி அவர்களை நினைவுகூரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியில் இரண்டு சிறப்புப் பிரிவுகள் உள்ளன, அத்துடன் இந்தத் தலைமுறையின் முன்னணி கலைஞர்களில் சிலராக பரவலாகக் கொண்டாடப்படும் முன்னணி இந்தியக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளார்கள். காரைக்குடி மணி அவர்களின் நான்கு மூத்த சீடர்களைக் கொண்ட தாள நிகழ்ச்சியில் ஸ்ரீ சுந்தர்குமார், குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா, மற்றும் சாய் சகோதரர்கள் (சாய்-நிநேதன் & சாய்-சாரங்கன் ரவிசந்திரா) ஆகியோரும், குன்னக்குடி எம்.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் மாபெரும் கர்நாடக இசை நிகழ்ச்சியில் மைசூர் என்.கார்த்திக் (வயலின்), சாய் சகோதரர்கள் சாய்-நிநேதன் ரவிசந்திரா (சிட்னி), சாய்-சாரங்கன் ரவிசந்திரா (மெல்பன்), ஸ்ரீ சுந்தர்குமார் மிருதங்கமும் வாசிக்கவுள்ளார்கள். இது குறித்த மேலதிக விபரங்களை, குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் கேடறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
அரசு நலன்புரி கொடுப்பனவு பெறும் சுமார் 12 லட்சம் பேரின் $250 டாலர்கள் வரை உள்ள கடன்கள் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. சுமார் $300 மில்லியன் அளவிலான தவறான கடன்களை வசூலிக்க முயற்சிக்கும் போது, அதன் நிர்வாகச் செலவுகள், வசூலிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருந்திருக்கும் என அரசு வாதிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
இந்தியாவில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது; நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்: டெல்லி திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு; செங்கோட்டையன் பதவி பறிப்பு - எடப்பாடி பழனிசாமி அதிரடி; தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ஆஸ்திரேலிய எதிர்கட்சியான லிபரல் கட்சியை சார்ந்த பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்ட செனட்டர் Jacinta Nampijinpa Price அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி பின்னணி கொண்ட குடியேற்றவாசிகள் குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை விளக்குகிறார் றைசெல்.
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (31 – 6 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 6 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
மதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 4.
மதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 3.
வசந்த காலத்தில் அதிக மழை காரணமாக 'thunderstorm ஆஸ்துமா' அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர்களில் பிரியா ஜெர்சனும் ஒருவர். அவர் எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Home Care Packages - இது Australia-வில் வயதானோருக்கான வாழ்வின் அடிப்படை ஆதரவாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய நிலவரத்தில் இந்த முக்கியமான உதவி பலருக்கும் வழங்கப்படுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 5/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
அதிபர் அனுரகுமார திசநாயக்க இரு நாட்கள் பயணமாக வடபகுதிக்கு வருகை; மனித புதை குழிகளுக்கு நீதியும், சர்வதேச விசாரணை வேண்டியும் வடக்கு ,கிழக்கில் போராட்டங்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்; நெருக்கம் காட்டும் சீனா- இந்தியா- ரஷ்யா; சீனாவின் ராணுவ அணிவகுப்பு; சூடானில் நிலச்சரிவு; வெனிசுலாவிலிருந்து சென்ற படகின் மீது அமெரிக்கா தாக்குதல்; போர்த்துகல் கேபிள் கார் விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான பேச்சாளரும், ஆன்மீகவாதியுமான சுகி.சிவம் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி வழியாக SBS தமிழ் நிகழ்ச்சிக்கு வழங்கிய “தந்தையர் தினம்” தொடர்பான கருத்துரை.
SRM பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுபவரும், தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பை இயக்கி வருபவருமான, பேராசிரியர் இல சுந்தரம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு சிட்னிக்கு வந்திருந்தபோது, அவரது செயற்பாடுகள் குறித்தும், மெல்பேர்ணில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை(Australian Tamil Academy)யுடன் இணைந்து அயலகத் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் கலந்துரையாடியிருந்தார். கலந்துரையாடலில் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் தலைவர் மு சுகுமாரனும் இணைந்து கொண்டார். அந்த கலந்துரையாடலின் மறு ஒலிபரப்பு இது.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய புதிய “Cheaper Medicines Bill 2025” சட்டத்தின் மூலம் PBS மருந்துகளுக்கான கட்டணம் 25 டொலர்களாகக் குறைக்கப்படுகிறது. அடுத்த வருடம் முதல் நாள் (2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல்) நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின் மூலம், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மருந்து செலவு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியாவிலிருந்து நவுருவுக்கு நாடுகடத்தப்படுபவர்களின் மீள்குடியேற்றத்திற்கு சுமார் இரண்டரை பில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 4/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
ஆஸ்திரேலியாவின் தொன்ம அடையாளங்களுள் மிக முக்கியமானது பூமராங். பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியா என்பது நமக்கு பெருமை. ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தொன்மைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கும் பூமராங் பற்றி நாம் இதுவரை அறிந்திராத பல தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Transgender people represent a small minority in our population, and while their visibility has increased, they've been the focus of charged legislative debates and online hate. - நமது மக்கள்தொகையில் திருநர்கள் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினராக உள்ளனர், மேலும் அவர்களின் தெரிவு நிலை அதிகரித்துள்ள போதிலும், அவர்கள் கடுமையான சட்டமன்ற விவாதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்பின் மையமாக இருந்து வருகின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு AI கமராக்கள் ஊடாக அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Cervical cancer is preventable, but only if you catch it early. Cultural and personal barriers have often meant that women avoid cervical cancer testing. But now with the help of a world-leading test, Australia is aiming to eliminate cervical cancer by 2035. The test is a safe and culturally sensitive option for women from all backgrounds. Best of all it could save your life—or that of someone close to you. - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனைத் தடுக்க முடியும். ஆனால், கலாச்சார மற்றும் தனிப்பட்ட தடைகள் காரணமாக பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையைத் தவிர்க்கின்றனர் என்று தரவுகள் சொல்கின்றன. ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் றேனுகா துரைசிங்கம்.
A forced marriage occurs when one or both individuals do not consent freely, often due to threats, coercion, deception, or if they are under 16 or those with mental incapacities. No matter how long you've been living here, it's vital to know: You have the right to choose who you marry. In this episode, we'll explore the difference between arranged and forced marriage and where you can turn for help if you or someone you know is affected. - நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ கட்டாயத் திருமணத்தினால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து விடுபட என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஈரானின் Islamic Revolutionary Guard Corps எனும் ஆயுத குழுவை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கூடவே, ஆஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதர் அஹ்மத் சதேகி ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த பரபரப்பான செய்தியின் பின்னணியில் இருக்கும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் உயிர்மெய்யார்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மாறாமல் பேணப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக மாநிலமொன்று மீன் வடிவ Soy sauce குப்பிகளை தடைசெய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 02/09/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியாவுக்குள் லட்சக் கணக்கில் குடியேற்றவாசிகளை அரசு அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் ஆஸ்திரேலிய நகரங்களில் கடந்த ஞாயிறு நடைபெற்றன. SBS Newsக்காக Sam Dover தயாரித்த விவரணத்தின் சாரத்தோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக தயாரித்தவர் றைசெல்.
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் முன்னெடுப்பில் September 21ஆம் தேதி சிட்னியில் நடக்கும் ‘இனிய இலக்கிய சந்திப்பு' என்ற நிகழ்ச்சியில் ‘தமிழே தவம்' என்ற தலைப்பிலே பேச வருகிறார், திரைப்படக் கலைஞர், இலக்கியவாதி, சொற்பொழிவாளர், புகைப்படக் கலைஞர், குறும்பட இயக்குனர், கலை இயக்குனர், வெளியீட்டாளர், இசையமைப்பாளர் என்று பன்முகம் கொண்ட ஜோ மல்லூரி அவர்கள். அவரைத் தொலைபேசி வழியாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
‘வெளிநாடுகளில் பிறந்தவர்கள் நாடுகடத்தப்படுதல்' குறித்து அரசு அறிமுகப்படுத்திய சட்டம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள அதே நேரம், அவர்களை நாடு கடத்துவதற்கு 400 மில்லியன் டொலர்களுக்கு நவ்ரூ தீவுடன் ஒரு ஒப்பந்தத்தை அரசு கடந்த வாரம் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/09/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன பயணம் - சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு : இரு நாட்டு உறவில் மாற்றம் நிகழுமா? “மரங்களோடு பேசுவோம்” மாநாடு - சீமானின் அதிரடி பேச்சு; ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை! மோதல் முடிவுக்கு வந்ததா?; தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (24 – 30 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 30 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
நியூசிலாந்தில் குடியேறுவதற்கான புதிய விசா ஒன்றை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இசையமைப்பாளர் 'தேனிசைத்தென்றல்' தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர் அஜய் கிருஷ்ணா எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். Music Director 'Thenisai Thendral' Deva will be visiting Australia on a musical tour. As part of the events, singer Ajay Krishna, who will be performing, having a conversation with Praba Maheswaran.
ஆஸ்திரேலிய அரசு இந்த வாரம் Penalty Rates Billஐ சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இது ஊழியர்களின் penalty rates, overtime rates போன்ற உரிமைகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் ஒரு முயற்சி எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 29/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
விக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்படும் Dezi Freeman எனபவர் Sovereign Citizens - ‘இறையாண்மையுடைய குடிமக்கள்' எனும் கொள்கையை கடைபிடிப்பவர் என்றும், இது தீவிர விளிம்பு நிலை குழு என்றும் கருதப்படுகிறது. இந்த பின்னணியில் Sovereign Citizens பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.