Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (21 – 27 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

2025ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டுகள் மற்றும் முடிவுகளில் சிலவற்றின் தொகுப்பு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Praba Maheswaran reviews major sporting events and stories that made headlines in 2025.

2025ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள் மற்றும் அதிகம் பேசப்பட்ட செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

2025ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தாண்டு உலகளவில் தாக்கத்தையும் கவனத்தையும் பெற்ற முக்கிய உலக நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers' எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2

கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers' எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் திகதி பொதுவாக “Boxing Day” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கடல் தொடர்பிலான விளையாட்டை நேசிக்கும் மக்களுக்கு, அந்த நாள் Sydney to Hobart Yacht Race என அழைக்கப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், டென்மார்க் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள புள்ளி விவரத்திலும் டென்மார்க் No 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை முன்வைக்கும் நிகழ்ச்சியை SBS-Newsக்காக ஆங்கிலத்தில் Jennifer Scherer எழுதிய விவரணத்தோடு SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.

Grace of Christmas எனும் தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு கனடா நாட்டில் மேடையில் அரங்கேறிய நாடகத்தை SBS தமிழ் ஒலிபரப்புக்காக தயாரித்து முன்வைக்கிறார் றைசெல். இந்த நாடகத்தில் நடித்தவர்கள்: Joseph Benher Dhason & Mary Sharmila Joseph Benher ஆகியோர். எழுத்தும், இயக்கமும்: Mathew Albert அவர்கள்.

கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

கடந்து செல்லும் 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் செல்வி.

யாழ். தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதில் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவில் நுகர்வோர் மத்தியில் மிகப்பிரபலமான ஒன்று 'Buy now, pay later' திட்டம். இதன்கீழ் பொருட்களை வாங்கும் ஒருவர் முழுத்தொகையையும் உடனே செலுத்தாமல் தவணைமுறையில் அதனைச் செலுத்த முடியும். இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

தனது கணவன் மதுபோதையுடன் வாகனம் ஓட்டிய சம்பவம் குறித்து விக்டோரியா Premier Jacinta Allan மன்னிப்புகோரியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

அடிலெய்டில் இந்தியப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரிய வகை சாம்பல் மற்றும் வெள்ளை நிற கங்காருக்கள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Superannuation Nomination என்பது, நீங்கள் இறந்தால் உங்கள் ஓய்வூதிய நிதியை யார் பெற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கும் செயல்முறையாகும். இது குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சம் பேர் நீக்கம்; செவிலியர்கள் போராட்டம்; 100 நாள் வேலைத்திட்டத்துக்கு மாற்றாக மோடி அரசின் புதிய திட்டம்; நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா- ராகுல் காந்தி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு உள்ளிட்ட தமிழக/இந்தியச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் காவல் துறை உயரதிகாரி (Inspector General of Police) கே. ஆர்கேஷ் அவர்கள். மிகவும் கடினமான, சவாலான பகுதிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் கிளர்ச்சி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று செயல்பட்டவர். சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். அவர் ஒரு கல்வியாளரும் கூட. மனிதவியல் (Anthropology) துறையில் முதுகலைப் பட்டமும், நாட்டுப்புறவியல் (Folklore) துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மெல்பனில் நடைபெற்ற Fourth International Humanists Conference யில் கலந்துகொண்ட அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.

மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 20 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற gamelan இசை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Gamelan மட்டுமல்ல tuba, baritone, euphonium என பல வாத்தியங்களை வாசிக்கும் திறமை கொண்டவர் மெல்பனைச் சேர்ந்த ரோஹன் ஐயர். அவரது இசைப் பயணம் தொடர்பிலும் அவரது பின்னணி தொடர்பிலும் அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மெல்பன் கலையகத்தில் அவரை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'to be stuffed'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use' என்பது 'to be stuffed' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

Many newly arrived migrants in Australia seek relationships not only for romance but to regain a sense of belonging. Separation from loved ones often drives this need for connection. This episode explores how dating in Australia differs from more collectivist cultures and how newcomers can find partners. From social events and dating apps to professional matchmaking, it highlights how migrants can build confidence, connection, and safety as they find love in a new country. - ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிறகு காதல் துணையை தேடுபவர்கள் எப்படி தங்களின் காதல் பயணத்தை தொடங்கலாம், அதில் எதைக் கவனிக்க வேண்டும், பாதுகாப்பான மற்றும் உண்மையான முறையில் நீடித்த உறவை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து ஆங்கிலத்தில் Maram Ismail எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

தம்மை பாதுகாப்பான இடங்களில் மீளவும் குடியேற்ற கோரி மக்கள் போராட்டம் மற்றும் அண்மைய அனர்த்தம் குறித்து விவாதிக்க விசேட நாடாளுமன்ற அமர்வு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Bondi கடற்கரைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பிரதமர் Anthony Albanese, இனவெறுப்பினைத் தூண்டும் பேச்சு, இனவன்மம், மதவன்மம் மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்களை எதிர்க்கும் வகையில், நாட்டின் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

அமெரிக்கா- வெனிசுலா இடையே முற்றும் மோதல் போக்கு; காசா: போர் நிறுத்த மீறல்கள்; அமெரிக்கா- ரஷ்யா அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை; எகிப்து- இஸ்ரேல் இடையே இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஒப்பந்தம்; தைவானுக்கு 11 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத விற்பனை: அமெரிக்காவின் அறிவிப்பு; கம்போடியா- தாய்லாந்து இடையில் மீண்டும் மோதல்; சிரியாவில் அமெரிக்க படையினர் மீது ஐஎஸ் தாக்குதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் தமிழ்ப் பிரபாகரன்.

Bondi கடற்கரை தாக்குதலில் தனது தந்தையுடன் இணைந்து ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நவீத் அக்ரமுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தந்தை மகன் தொடர்பிலான விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னி Bondi கடற்கரையில் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய படுகொலை சம்பவம் எனப்படுகிறது. 29 ஆண்டுகளுக்கு முன் தஸ்மேனிய மாநிலத்தில் இடம்பெற்ற Port Arthur படுகொலைகள் இன்று அதிகம் பேசப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Elders Financial Abuse - முதியோர் வருமான சுரண்டல் என்றால் என்ன? இதற்கான சட்ட உதவிகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

நம்மில் பலர் தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோம். கண் தொடர்பான பிரச்சினைகளாலும் தலைவலி வரக்கூடுமா? விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/12/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Bondi கடற்கரை துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலையடுத்து NSW மாநிலத்தில் சட்டபூர்வமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து தீவிரமான விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து சில பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் கருத்துக்களை கேட்டறிந்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி Bondi கடற்கரையில் ஹனுக்கா விழாவுக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள்மீது இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தீவிரவாத தாக்குதல் என காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்த பிந்தைய செய்திகள் அடங்கிய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகள் அனர்த்தங்களினால் பெரும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Bondi கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக சிட்னி நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

விக்டோரியா மாநிலத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் சமீபதில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். நாம் பாரதி என்றழைக்கும் சுப்ரமணிய பாரதியின் நண்பர்தான் சோமசுந்தர பாரதியார். பாரதி போன்று தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தவர்தான் சத்தியானந்த சோமசுந்தரன். அவர் எப்படி சோமசுந்தர பாரதி ஆனார்? காலத்துளி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

சிட்னி Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உயிர் காக்கும் மருத்துவ தொழில்நுட்பங்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் பாவனைக்கு வர சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Sydney Lang தயாரித்த விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் - 14 நாள் காவல்; திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

சிட்னியின் பிரபல Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த பிந்திய செய்திகளை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.