Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!
E-Arrival Card - டிஜிட்டல் முறையில் வருகை அட்டைகளை நிரப்பும் வசதியை இந்தியா இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Superannuation வைத்திருக்கும் பலர் தங்களின் super கணக்கில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. Super கணக்கு உள்ள ஒவ்வொருவரும் தங்களின் super கணக்கில் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக உரையாடுகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
வங்கிகள் தரும் Credit Card மற்றும் Debit Card போன்றவற்றை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது, எமாற்றப்படுவதை தவிர்ப்பது குறித்து விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்திற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன. அதேநேரம் ஹமாஸ் இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாகக் கூறுகிறது.இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
மன்னார் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இங்கு செயற்படுத்தப்பட்டு வரும் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக மன்னார் மக்களின் போராட்டம் தீவிரம் பெற்று வருகின்றது. இந்நிலையில் போராடும் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
LuLu hypermarket கிளையை ஆஸ்திரேலியாவில் தொடங்குமாறு பிரதமர் Albanese அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
Choosing to legally change your name is a significant life decision that reflects your personal circumstances. Each year, tens of thousands of Australians lodge an application through the Registry of Births, Deaths & Marriages. If you're considering a change of name, this episode takes you through the process. - உங்களது பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் அல்லது குடும்பப் பெயரை எப்படி மாற்றுவது என்பது குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
அமெரிக்காவின் skilled migrant visa - திறமை அடிப்படையில் குடிபெயர்வோருக்கான விசா விண்ணப்பக் கட்டணத்தை $100,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது ஆஸ்திரேலியாவிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வாங்குகிறார் செல்வி.
டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் செக்ஸ் என்பது திருமண உறவில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்து விளக்குகிறார். தொடரின் ஒன்பதாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
லடாக்கில் மாநில அந்தஸ்து வழங்க கோரி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி; கரூரில் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சார கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம், 'திட்டமிட்ட சதி' என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
தமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்களை தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. தமிழக அரசியலைக் கவனித்து வரும் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர் Gen Z இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு, ரசிக மனப்பான்மை, நடிகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக உருவெடுத்தவர்கள் நடத்திய கூட்டங்கள் பற்றி அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
தமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (21 – 27 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 27 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை மிகுந்த வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் கல்வித் துறைக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குபவர் செல்வி.
மெல்பனைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் பிரின்ஸ் கென்னட் அவர்களது இரண்டாவது நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 27 சனிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
அதிபர் அனுரகுமார திசநாயக்க பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மேலும் மன்னார் காற்றாலை, திருகோணமலை விவசாய மக்களின் தொடரும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
காசா மீது தொடரும் தாக்குதல்கள்; பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த முக்கிய நாடுகள்; டென்மார்க்கில் ட்ரோன் ஊடுருவல்கள் முயற்சி: ரஷ்ய தலையீடா?; அமெரிக்கா: H1B விசா கட்டண உயர்வு; நாடு திரும்பிய 10 லட்சம் சிரிய அகதிகள்; ஆப்கானிஸ்தானில் விமானத்தளத்தை திரும்ப பெற முயற்சிக்கும் அமெரிக்கா; ரகாசா புயல் பாதிப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
1100-க்கும் மேற்பட்ட தொந்தரவு அழைப்புகளை மேற்கொண்ட நபருக்கு மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கும், அகதிகளுக்கும் எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த எதிர்ப்பு மனநிலை உயர என்ன காரணங்கள்? இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
இயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை. இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன என்றும் எப்படி கற்றாழையை பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
திரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தேவன் ஏகாம்பரம் அவர்கள் அண்மையில் மெல்பன் வருகை தந்திருந்தார். அவரை SBS மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
குழந்தைகளுக்கான கார் இருக்கை (Child car seat) பயன்படுத்துவது ஏன் அவசியம்? அதனை சரியாக பொருத்துவது எப்படி? குழந்தைகளுக்கான கார் சீட் வாங்கும்போது பெற்றோர் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் NSW Blacktown-இல் 18 ஆண்டுகளாக Supreme Driving School நடத்தி வரும் சிவகுருநாதன் ஶ்ரீகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே காணப்படும் இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை மீளப்பெறுமாறு தமிழக அரசியல்வாதிகள் தெரிவித்துவரும் நிலையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
மெல்பன் வடக்கிலுள்ள recycling plantஇல் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
அமெரிக்காவின் H-1B விசா கட்டணம் 100,000 அமெரிக்க டொலர்கள் அதாவது 150,000 ஆஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டமை தொடர்பாக வெள்ளை மாளிகை முக்கிய விளக்கம் வழங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளுடன் ஆஸ்திரேலியா இணைந்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் வாழும் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் சுமார் 50 கோடி டாலர்கள் வரை Superannuation சேமிப்பு இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என ஓய்வூதிய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
சிட்னியில் சமீபத்தில் நடந்து முடிந்த Sydney Marathon 2025 எனும் பெருந்தூர ஓட்டப்பந்தயத்தில் காலந்துகொண்டவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சையது அலி அவர்கள். சுமார் 35,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் 59 வயதிலும் இளைஞராக ஓடும் சையது அலி அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.
ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் - விலை குறையும் பொருட்கள்! பிரதமர் நரேந்திர மோடியின் உரை; நாம் தமிழர் சீமான், விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பது ஏன்?;தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
தமிழ்நாட்டில் கடந்த வாரம் காலமான நகைச்சுவை நடிகர் “கலைமாமணி” ரோபோ சங்கர் அவர்கள் 2012 ஆம் ஆண்டு சிட்னியில் கலைநிகழச்சி படைப்பதற்கு வருகை தந்திருந்தார். அவ்வேளையில் அந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் நம்முடன் உரையாடியதை மறுபதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல்.
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (14 – 20 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 20 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 1800 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Australia is home to an array of diverse and beautiful wildlife, and knowing how to respond when you encounter wildlife in your home or on your property will help protect our precious wildlife species whilst keeping you, your family and your pets safe. - உங்கள் வீட்டிற்குள் அல்லது காணிக்குள் வரும் வனவிலங்குகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிவது, நமது விலைமதிப்பற்ற வனவிலங்கு இனங்களைப் பாதுகாக்க உதவுவதற்கும், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் செல்லப்பிராணிகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் முக்கியம். இது குறித்த விவரணத்தை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Phil Tucak. தமிழில் தருபவர் றேனுகா துரைசிங்கம்.
Kmart நிறுவனம் facial recognition technology - முக அங்கீகாரம் தொடர்பிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் ஆஸ்திரேலிய தனியுரிமைச் சட்டங்களை மீறியுள்ளது என்று privacy commissioner - தனியுரிமை ஆணையர் கண்டறிந்துள்ளார். இது பற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
யுத்த குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறி முறையிலேயே விசாரணை என உறுதியாக நிற்கும் தேசிய மக்கள் சக்தி அரசு; பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலிய மன்னனின் யாழிலுள்ள மந்திரிமனை சேதமடைந்துள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
தென்னகத்து சினிமாவின் பெண் ஆளுமைகளில் தவிர்க்க முடியாதவர் நடிகை பி. பானுமதி அவர்கள். அவரின் நூற்றாண்டு பிறந்த நாள் (7 Sep 1925 – 24 Dec 2005) கொண்டாட்ட வேளையில் அவர் குறித்த விவரணத்தை முன்வைப்பவர் சுமார் முப்பது ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்ட பத்திரிகையாளர் சுந்தரதாஸ் அவர்கள். ஒலிக்கும் குரல்கள்: சுந்தரதாஸ் & கர்ணன் ஆகியோர். தயாரிப்பு: றைசெல்.
காசா நிலவரம்; கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான இஸ்லாமிய நாடுகளின் சந்திப்பு; லிபியாவில் படகு விபத்து; இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சர்ச்சை; சவுதி அரேபியா- பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்; தாய்லாந்து- கம்போடியா எல்லை மோதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னனியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
கடந்த செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலும் இதுகுறித்த விழிப்புணர்வையூட்டும் நோக்கிலும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை சம்பவங்கள் நமது சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் தொடர்பிலும் இதற்கு எப்படி எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் உளவியலாளரான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். மெல்பனில் வாழும் கௌரிஹரன் அவர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக உளவியலாளராக பணியற்றிவரும் அதேநேரம் பூர்வீக குடி பின்னணிகொண்டவர்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
Autism உள்ள குழந்தைகளை NDIS-இலிருந்து மாற்றி "Thriving Kids" என்ற புதிய திட்டத்திற்குள் உள்வாங்கும் திட்டத்தை அரசு அண்மையில் அறிவித்தது. இதுகுறித்த விவரணத்தை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
செப்டம்பர் 16ஆம் தேதி - சர்வதேச ozone பாதுகாப்பு தினம். Ozone படலம் என்றால் என்ன? அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் மேலும் ozone படலத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் குறித்து விரிவான தகவல்களுடன் ஒரு விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
எதிர்வரும் செப்டம்பர் 20 முதல், பல்வேறு Centrelink கொடுப்பனவுகளின் விகிதங்கள் மற்றும் வரம்புகள் சீரமைக்கப்படுவதால், Centrelink கொடுப்பனவு பெறுபவர்கள் கூடுதல் தொகை பெறுவர். குறிப்பாக ஓய்வூதியத் தொகையும் சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.