Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!

Shakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஏற்பாடும் செய்யும் பெர்த் நகரைச் சார்ந்த பிரபல வீணை இசைக் கலைஞர் யசோ பொன்னுதுரை அவர்கள் அவரின் கலைப் பயணம் தொடர்பாகவும், இந்த நிகழ்ச்சிகள் குறித்தும் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

AI எனப்படும் Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவின் பெரும் பாய்ச்சலை உலகம் சந்தித்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில் AI வரவினால் அதிக ஆபத்தில் உள்ள வேலைகள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு எனக்கும் வியாபிக்கும் நிலையில் தனிநபர் தனது தனிப்பட்ட தகவல்களைப் எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். சுகன்யா அவர்கள் முன்வைக்கும் தகவல்களும், ஆலோசனைகளும் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 07/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை மற்றும் மக்கள் எதிர்ப்பை அடுத்து மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நிறுத்த அதிபர் அனுரகுமார திசநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு வரவேற்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

நியூயார்க் மேயராக சோஹ்ரான் மம்தானி; காசா நிலை; கல்மேகி புயல்: பிலிப்பைன்சில் 114 பேர் பலி; ஆப்கான் நிலநடுக்கம்; மீண்டும் அணு ஆயுத சோதனைகள்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

Zohran Mamdani - நியூயார்க் நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இந்திய, இஸ்லாமிய மற்றும் தென் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த நபராக வரலாறு படைத்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இந்தியாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலிவான ஆனால் தரமான வீடுகள் கட்டி தரும் பணியில் ஈடுபட்டு வரும் தமிழகத்தில் வாழும் பொறியியலாளர் மதன்ராஜ் அவர்கள். தன்னுடைய கண்டுபிடிப்பை "உறையுள்" என்று அழைக்கும் மதன்ராஜ் தனது கண்டுபிடிப்பு பற்றியும் அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விரிவாக உரையாடுகிறார். அவரோடு உரையாடுபவர் செல்வி.

Solar - சூரிய ஒளி ஆற்றலை மக்களிடம் நேரடியாக பகிர பெடரல் அரசு புதிய ‘Solar Sharer' திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 06/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

மெல்பனில் Lankan Fest என்ற நிகழ்வு நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் ஒருவரான தனேஷ்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Shakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க வருகிறார் பிரபல கடம் வாத்திய கலைஞர் சுகன்யா ராம்கோபால் அவர்கள். அவரது இசைப்பயணம் தொடர்பிலும், ஆஸ்திரேலிய பயணம் தொடர்பிலும் சுகன்யா ராம்கோபால் அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.

மெல்பன் கப் குதிரைப்பந்தயப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் பெண் குதிரையோட்டியான Jamie Melham சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 05/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்கள் காரணமாக இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் பாதிப்புக்களும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு என்ன? இது தொடர்பில் செய்தியின் பின்னணி நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் இளம் செல்வந்தர்களின் பட்டியலை The Australian Financial Review சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள இளம்செல்வந்தர்கள் யாரென்ற விவரங்களைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வரும் ART Administrative Review Tribunal நிர்வாக மீளாய்வு நியாயசபை என்றால் என்ன? அதன் நடைமுறை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளிக்கிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை, தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள், தமிழ் இலக்கியம் என்று பல அம்சங்கள் குறித்து உரையாடுகிறார் இலக்கிய சொற்பொழிவாளர் முத்து சிதம்பரபாரதி அவர்கள். சிட்னி வந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்துள்ள புதிய தடைகள் உலகளாவிய சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி, எரிபொருள் விலைகளை உயர்த்தும் அபாயம் நிலவுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு; அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவை குறித்து விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். SBS On Demand is a free online streaming service operated by Australia's SBS. It allows viewers to watch TV shows, movies, documentaries, news programs, and international content anytime over the internet. R. Sathyanathan explains the range of services available on SBS On Demand.

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (26 அக்டோபர் – 1 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

பூர்வீகக்குடிமக்களுடன் முறையான Treaty- ஒப்பந்தம் ஒன்றை விக்டோரிய மாநில அரசு உருவாக்குகிறது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Each time you donate blood, you can save up to three lives. In Australia, we rely on strangers to donate blood voluntarily, so it's a truly generous and selfless act. This ensures that it's free when you need it—but it also means we need people from all backgrounds to donate whenever they can. Here's how you can help boost Australia's precious blood supply. - ஆஸ்திரேலியாவில் இரத்ததானம் ஏன் மிகவும் விலைமதிப்பற்றது, அதை வலுவாக வைத்திருப்பதில் நீங்கள் எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

GPs are sounding the alarm on Australia's influenza vaccination rates, following a record flu season in which more than 410,000 lab-confirmed cases have been reported so far in 2025. Speaking about this issue, Dr. Yalini Devasangar, a General Practitioner (GP) from Griffith, shared her insights with us. Segment produced by Praba Maheswaran. - நாட்டில் காய்ச்சல்(Influenza) தடுப்பூசி விகிதம் குறைந்துவிட்டதைப் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 4 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது வரலாற்றிலேயே மிக அதிகமான காய்ச்சல் பரவலாகக் கணக்கிடப்படுகிறது. இதுபற்றி NSW மாநிலத்தின் Griffithஇல் பொது மருத்துவராகக்(GP) கடமையாற்றிவரும் வைத்தியர் யாழினி தேவசங்கர் அவர்கள் எமக்கு விளக்குகிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். GPs are sounding the alarm on Australia's influenza vaccination rates, following a record flu season in which more than 410,000 lab-confirmed cases have been reported so far in 2025. Speaking about this issue, Dr. Yalini Devasangar, a General Practitioner (GP) from Griffith, shared her insights with us. Segment produced by Praba Maheswaran.

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பது இன்று பல குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய நிதிச் சவாலாக மாறியுள்ளது. வீட்டு விலை உயர்வு, உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகள் அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளன. சமீபத்திய அறிக்கைகள் படி, ஒரு குழந்தையை பிறப்பிலிருந்து 18 ஆண்டுகள் வரை வளர்ப்பதற்கான சராசரி செலவு பத்து லட்சம் டாலர்களை தாண்டுகிறது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 31/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

நாடு முழுவதும் போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் அதிபர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பம். 2026ஆம் ஆண்டில் உலகில் சென்று பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

காசா மீது மீண்டும் தாக்குதல்; சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு; ரஷ்யாவின் அணு ஆயுதச்சோதனை, அணு ஆயுதச்சோதனைக்கு தயாராகும் அமெரிக்கா; ஆப்கான்- பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி; சூடானில் துணை ராணுவப்படையின் ஆதிக்கம்; மெலிசா சூறாவளி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

பிரதமர் Anthony Albanese வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியபோது அவர் Joy division என்ற ஆங்கில இசைக்குழுவின் பெயரும் அவர்கள் முதன் முதலில் வெளியிட்ட ஆல்பத்தின் பெயர் படம் இடம்பெற்றிருந்த t shirt ஒன்றை அணிந்திருந்தார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறார். ஏன் இந்த T Shirt விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

ஆஸ்திரேலிய நுகர்வோர் நலன் பாதுகாப்பு நோக்கில் இயங்கும் அரசு அமைப்பான Australian Competition and Consumer Commission - ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் உலக தொழில்நுட்பத்தின் மாபெரும் நிறுவனமான Microsoft மீது ஆஸ்திரேலிய Federal நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

அடையாள ஆவணத் திருட்டு என்பது ஒரு முக்கியமான குற்றமாக தற்பொழுது பெருகி வருகிறது. இதற்கு குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்கள் பலியாகின்றனர். தனக்கு இப்படியாக நடந்த ஒரு சம்பவத்தை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் ஒரு புகலிடக் கோரிக்கையாளர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

எழுத்துக்களை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்தநாள் அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.

Thunderstorm ஆஸ்துமா தொடர்பிலான எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதை நாம் அவதானித்திருப்போம். Thunderstorm ஆஸ்துமா என்றால் என்ன? இதன் தாக்கத்திலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது? இதன் அறிகுறிகள் என்னென்ன என்பது தொடர்பில் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் சர்மிளா சுரேஷ்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Discover how skilled migrants navigate challenges in Australia's ICT sector, from job hunting and local experience to networking and thriving in tech careers. - ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) துறையில் பணியாற்றும் திறமை அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடல், உள்ளூர் அனுபவம் பெறல் மற்றும் நெட்வொர்க்கிங் செய்து தொழில்துறையில் முன்னேறுவது தொடர்பில் சந்திக்கும் சவால்களை எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 30/10/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

சிட்னியில் உள்ள Sutherland மருத்துவமனையில் ஆண் நோயாளி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் புதிய விசாரணை ஆரம்பிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Uprooted, Stories from the Sri Lankan Tamil Diaspora என்ற நூல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழ்வியலை ஆழமாக ஆராய்ந்து, அதன் வேரூன்றிய உணர்ச்சியையும் வெளிநாட்டு மண்ணில் புதிய அடையாளங்களைக் கட்டியெழுப்பிய உறுதியையும் சித்தரிக்கும் ஒரு ஆய்வு நூல். அதனை எழுதியிருக்கும் ஆனா பரராஜசிங்கம் அவர்களிடம் அவரது பின்னணி குறித்தும் இந்த நூலை எழுதியதன் நோக்கம் குறித்தும் சிட்னி நகரில் நடைபெற இருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு குறித்தும் கேட்டறிந்து கொள்கிறார் றைசெல்.

Shakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க வருகிறார் பிரபல மிருதங்க வாத்திய கலைஞர் லஷ்மி ராஜசேகர் அவர்கள். அவரது இசைப்பயணம் தொடர்பிலும், ஆஸ்திரேலிய பயணம் தொடர்பிலும் லஷ்மி ராஜசேகர் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 29/10/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவில் Superannuation பணத்தை திரும்பப்பெறுவதற்கான விதிகளில் நவம்பர் 2 முதல் மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீர்வுகளின்றி தொடர்கின்றது. இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோரின் நினைவு நாள் நிகழ்வு கம்பஹாவில் இடம்பெற்றது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முதல் குழுவை நவுரு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில சுரங்க விபத்தில் இருவர் பலியாகினர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 28/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

தமிழ்நாட்டில் மிக முக்கிய சமூக இயக்கமாக பார்க்கப்படும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள். திராவிட அரசியல் சார்ந்த களத்திலும், தமிழக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வரும் அருள்மொழி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்கள்: குலசேகரம் சஞ்சயன் & றைசெல் ஆகியோர். இரண்டு பாகங்களாக பதிவேற்றப்பட்டிருக்கும் நேர்முகத்தின் நிறைவுப்பாகம் இது.

தமிழ்நாட்டில் மிக முக்கிய சமூக இயக்கமாக பார்க்கப்படும் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள். திராவிட அரசியல் சார்ந்த களத்திலும், தமிழக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வரும் அருள்மொழி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர்கள்: குலசேகரம் சஞ்சயன் மற்றும் றைசெல் ஆகியோர். இரண்டு பாகங்களாக பதிவேற்றப்பட்டிருக்கும் நேர்முகத்தின் முதல் பாகம் இது.

Work From Home WFH - வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து Fair Work Commission வழங்கியுள்ள சமீபத்திய தீர்பபு ஒன்று வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்த விவாதத்திற்கு புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 27/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.