Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!
தனது முன்னாள் காதலியை தாக்கிய இலங்கை மாணவரை குயின்ஸ்லாந்து James Cook பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழர் வரலாற்று மற்றும் பண்பாட்டு எழுத்தாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய 'இந்து தேசியம்' என்ற நூல், PATCA-வின் செயலாளர் சுமதி விஜயகுமார் அவர்களால் 'Hindu Nationalism' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், தினகரன் செல்லையா அவர்கள் எழுதிய ‘சனாதனம் அறிவோம்' என்ற இரண்டு நூல்களும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) என்ற அமைப்பின் வாசகர் வட்டம், சிட்னியில் இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. அது குறித்த விபரங்களை நூல் ஆசிரியர்களுடனும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான தேவி பாலா அவர்களுடனும் நேர்கண்டு, எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு முயற்சியில் ஆளுங்கட்சி தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு அதிகரிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Indigenous Australians have experienced increased racism over the past decade. Young people and multicultural communities could help shift the narrative. - பூர்வீகக்குடி மக்கள் எதிர்கொள்ளும் இனவெறி கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளன. இளைஞர்களும் பன்முக கலாச்சார சமூகங்களும் அந்தக் கதையை மாற்ற உதவக்கூடும்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Many Australians love rolling up their sleeves and undertaking their own home improvements. But before you grab a hammer or paintbrush, it's essential to understand the rules and risks so you can renovate safely and legally. - உங்கள் சமையலறையைப் புதுப்பிக்கத் திட்டமிட்டாலும் சரி அல்லது ஒரு shed அமைக்கத் திட்டமிட்டாலும் சரி, அதைப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் செய்ய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி இந்த விவரணத்தில் பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Audrey Bourget. தமிழில் தருபவர் றேனுகா துரைசிங்கம்.
விக்டோரியாவில் செப்டம்பர் முதல் நடைமுறைக்குவரும் மாநில அளவிலான வெட்டுக்கத்தி-machete தடைக்கு முன்பாக, machete ஒப்படைப்பு திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
சர்வதேச மாணவர் உச்சி மாநாடு 2025 அண்மையில் மெல்பனில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் சிலரது கருத்துக்களுடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
16 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்த கடுமையான தடைகளை ஆஸ்திரேலிய அரசு இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துகிறது. இந்தத் தடை TikTok, Instagram, Snapchat, Facebook மற்றும் X ஆகிய முக்கிய சமூக ஊடகங்களை உள்ளடக்கியது என்று அரசு முன்னர் அறிவித்திருந்தது. இப்பொழுது, முன்னதாக விலக்குக் கொடுக்கப்பட்ட YouTube தளமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 04/08/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
'ஆப்ரேஷன் அகல்' - இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை; சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மதமாற்றக் குற்றச்சாட்டில் கைது - இந்தியாவில் பரபரப்பு; தேனியில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் தடுத்து நிறுத்தம்; பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (28 – 2 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 2 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” யின் கார்த்திகேய சிவசேனபதி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருகிறார். சிட்னி, மெல்பன் நகரங்களில் அவர் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி உரையாடுகின்றனர் பொன்ராஜ் (சிட்னி) & மூர்த்தி ரங்கராஜுலு (மெல்பன்) ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 01/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு; கையகப்படுத்தப்பட்ட தமது விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு திருகோணமலை முத்துநகர் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
காசா பகுதியில் இஸ்ரேல் சர்வதேச சட்ட மீறல்களை செய்வதாக பல தரப்புகளும் குற்றச்சாட்டும் பின்னணியில் தாமும் இஸ்ரேலை கண்டிகிறோம் என்று கூறும் ஆஸ்திரேலிய அரசு பாலஸ்தீனத்தை உடனடியாக ஒரு நாடாக அங்கீகரிக்கத் திட்டமில்லை என கூறியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், கனடா எனும் மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகாரக்கப்போவதாக அறிவித்திருக்கும் பின்னணியில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா தாமதிக்கும் காரணங்களை விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வெங்கடேசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் – றைசெல்.
லேபர் அரசானது, HECS கடன்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது நேரடியாக மூன்று மில்லியன் ஆஸ்திரேலிய மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு தீர்மானமாகும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
காசாவில் அதிகரிக்கும் பட்டினி உயிரிழப்புகள்; பாலஸ்தீன விவகாரம்- இருநாடுகள் என்ற தீர்வு?; பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா திட்டம்: அமெரிக்காவின் எதிர்வினை; பசிபிக் நாடுகள், தென் அமெரிக்கா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; காங்கோ குடியரசில் ஐஎஸ் தாக்குதல்: 43 பேர் உயிரிழப்பு; அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம்; மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் காலரா அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள 80,000 குழந்தைகள் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத வரலாற்று அடையாளங்களுள் முக்கியமான பெயர் நெட் கெல்லி (Ned Kelly). போற்றவும் தூற்றவுமான இருவேறு மனோவியல்புகளை மக்களின் மத்தியில் விதைத்த ஒரு விநோத ஆளுமை. ஆஸ்திரேலியாவில் அன்றைய காலனியாதிக்கத்தின் அதிகாரத்திற்கு எதிராக, காவல்துறைக்குப் பெரும் சவாலாயிருந்து, காடுகளில் மறைந்துவாழ்ந்து, தந்திரமாய் சுற்றிவளைக்கப்பட்டு, இறுதியில் தூக்கிலடப்பட்டவர். அவர் பற்றிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Fast Track நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நான்கு அகதிகளைக் கொண்ட குழுவொன்று கன்பரா நாடாளுமன்றத்திற்குச் சென்று முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பில் இக்குழுவில் அங்கம் வகித்தவரான ரதி பாத்லட் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள், குறைந்த வருமானம் பெறும் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணங்களை வசூலித்ததற்காக, $60 மில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையை திருப்பி கொடுக்கவிருக்கின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றைசெல்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (Biomedical Research and Environmental Sciences) பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் டாக்டர் அந்தோனி ஜீவராஜன் அவர்கள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் தனது பணியை செய்து வருகிறார். தனது பணி குறித்தும் நாசா குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் 2016ஆம் ஆண்டில் Dr. Antony Jeevarajan உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 31/07/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 1.
நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 2.
மேற்கு ஆஸ்திரேலியாவில், பெர்த்திலிருந்து 2 மணி நரே பயணத்தில், நம்பூங் தேசிய பூங்காவில், செர்வாண்டஸ் அருகே அமைந்துள்ள சுண்ணாம்புக் கல் தூண்களின் பழமை, அறிவியல் உண்மைகள், அங்கு சென்றால் என்னென்ன அம்சங்களைப் பார்க்கலாம், என்னென்ன முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற தகவல்களைத் தருகிறார் உயிர்மெய்யார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட 2-நாள் இலவச பயணச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
“We're talking about thousands and thousands of incidents ... for many Muslim females who wear the headscarf, they feel that an incident of Islamophobia is what it means to be a Muslim here in Australia." - இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு காரணமாக நடைபெறும் தாக்குதல் நிகழ்வுகள் ஆஸ்திரேலியாவில் முஸ்லீமாக வாழ்வதின் ஓர் அங்கமாகவே உள்ளதாக இங்குள்ள பல முஸ்லீம் பெண்கள் கூறுகிறார்கள்.
தாய்லாந்து – கம்போடியா நாடுகளின் நீண்ட எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து தற்போது போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்தும், போர் நிறுத்த பின்னணி குறித்தும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 3.
இலங்கையில் மாற்றங்களை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்தி அரசுக்கு மலையக மக்கள் வாக்களித்தார்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிரணியினர் தெவித்துள்ளனர். இதற்கு அரசு தரப்பின் பதில்கள் என்ன என்பது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
நியூசிலாந்து அரசு, தனது சர்வதேச கல்வி சந்தையின் அளவை இரட்டிப்பாக்கும் நோக்கில் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஐக்கிய நாடுகள் சபை, 2011 ஆம் ஆண்டில், ஜூலை 30ஆம் நாளை அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் நட்பின் முக்கியத்துவத்தை மதிக்கும் நாளாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. தனிநபர்கள், கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான நட்பு உத்வேகம் மற்றும் நல்லிணக்கத்தின் சக்திவாய்ந்த ஆதாரமாக செயல்பட முடியும் என்பதை ஐ.நா அங்கீகரிக்கிறது. தனிப்பட்ட பிணைப்புகள் மற்றும் சமூக உறவுகள் முதல் சர்வதேச உறவுகள் வரை, சர்வதேச நட்பு தினத்தில் நட்பின் உணர்வைக் கொண்டாடும் ஒரு தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/07/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
சிட்னியின் புகழ்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட வாணவேடிக்கைகளை முக்கிய இடமொன்றிலிருந்து பார்ப்பதற்கு $50 கட்டணம் விதிக்க இருப்பதாக North Sydney கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெறுவதற்கான ஒரு வழியாக குடிபெயர்வோர் நியூசிலாந்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Today's highlight (29 July 2025 - Tuesday)
சோலார் மூலம் மின்சாரம் பெறும் வீடுகள் இதற்கான பேட்டரியையும் நிறுவ, பேட்டரிக்கு ஜூலை முதல் 30 சதவீத rebate – சலுகை வழங்குவதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் அவர்களின் பின்னணியைப் பொறுத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 28/07/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் Casual Sex – தற்காலிகமாக ஒருவருடன் செக்ஸ் வைப்பதில் எழும் சிக்கல்கள் குறித்து அவர் விளக்குகிறார். தொடரின் ஏழாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாட்கள் தமிழக சுற்றுப்பயணம்; இலங்கையில் நடந்த செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சீமான் போராட்டம்; ராமதாஸின் எச்சரிக்கையை மீறி அன்புமணி ராமதாஸின் நடைபயணம் - ‘அதிகார மோதலால்' உடையும் பாமக; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக்கூடிய ஓர் முக்கியமான செய்தியை நாட்டின் Productivity Commission என்ற உற்பத்தித் திறனை கண்காணிக்கும் ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியுள்ளார். வேலைக்குச் செல்பவர்கள் படிப்படியாக 2035 ஆம் ஆண்டிற்குள் 14,000 டொலர்கள் வரை கூடுதல் வருமானம் பெற முடியும் என்று உற்பத்தித் திறன் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
மெல்பனில் எந்த Suburbகளில் வீட்டு விலைகள் விரைவாக அதிகரித்து வருகின்றன என்ற தரவுகளை Domain நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Education is a pathway to opportunity, but for too long, Indigenous students in Australia have faced barriers to success. While challenges remain, positive change is happening. In this episode we'll hear from Indigenous education experts and students about what's working, why cultural education matters and how Indigenous and Western knowledge can come together to benefit all students. - பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மாணவர்கள் மத்தியில் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு விகிதங்கள் குறைந்தளவில் உள்ளதுடன் அவர்கள் பள்ளிக்கு வருகை தரும் வீதமும் பல்கலைக்கழக பிரதிநிதித்துவமும் குறைவாகவே உள்ளது. இந்தப்பின்னணியில் கல்வி தொடர்பில் நிலவும் இந்த இடைவெளியை எவ்வாறு மூடுவது என்பது பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (20 – 26 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 26 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி மேற்கில் வைத்து கொலைசெய்யப்பட்ட இந்தியப்பெண் பிரபா அருண் குமார் தொடர்பிலான விசாரணை அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
உலகில் பலரும் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினம் ஜூலை 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீச்சல் தெரிந்துவைத்திருப்பது ஏன் அவசியம் என்பது தொடர்பில் சிட்னியில் நீச்சல் பயிற்சியாளராக பணிபுரியும் அனுஷா அர்ஜுனமணி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
துவலு மற்றும் ஆஸ்திரேலியா இருநாடுகளுக்கிடையே உருவான 'Falepili Union' வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, துவலுவைச் சேர்ந்த சுமார் 280 குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 25/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.