Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!

நாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (16 – 22 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.

Our social cohesion is under threat. But building stronger community ties can help grow connection, trust and shared belonging. - நமது சமூக ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் வலுவான சமூக இணைப்புகளை உருவாக்குவது தொடர்பு, நம்பிக்கை மற்றும் பகிரும் உணர்வை வளர்க்க உதவும்.

“ஆஷஸ் (The Ashes)” என்பது கிரிக்கெட் உலகின் மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் நடைபெறும் இப்போட்டியின் 74வது தொடர் இன்று பேர்த் நகரில் ஆரம்பமாகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 3

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிபர் அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு மற்றும் வடக்கு , கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் ஆதரவளிப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு ஆளுந்தரப்பு மறுப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி”நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உக்ரைனில் போர் நிறுத்தம்? அமெரிக்கா, ரஷ்யாவின் புதிய திட்டம்; காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்; சூடானில் உள்நாட்டு யுத்தம்: முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக டிரம்ப் அறிவிப்பு; பிரேசிலில் COP30 மாநாடு; DR காங்கோவில் சுரங்க விபத்து: 32 பேர் பலி; நைஜீரியாவில் 25 பெண் குழந்தைகள் கடத்தல்; ஆப்பிரிக்காவில் மோசமான பாதுகாப்பு சூழ்நிலை: ஐ.நா. எச்சரிக்கை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள பின்னணியில் நாட்டின் வட்டிவீதம் மீண்டும் அதிகரிக்குமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

அண்மையில், Broome நகரத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு Australian Border Force (ABF) கப்பலில், மாற்றியமைக்கப்பட்ட நான்கு மீன்பிடிப் படகுகள் இருந்தன. இதன்மூலம், நாடு முழுவதும் மீன்பிடிப் படகுகளை வாங்கி மாற்றும் காமன்வெல்த் அரசு திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

அமெரிக்காவில் Epstein files விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிபர் Donald Trumpஐ தொடர்புபடுத்தி பேசப்படும் Epstein Files என்றால் என்ன, அதன் பின்னணி என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் திகதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஆண்கள் தமது உடல்நலனில் மாத்திரமல்லாமல் மனநலனிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதற்கான உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார் மெல்பனில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் Dr நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலக தமிழ் வர்த்தக சபையும் (World Tamil Chamber of Commerce), Greater Cumberland Chamber of Commerce அமைப்பும் இணைந்து 12வது ஆண்டு சர்வதேச வர்த்தக மாநாட்டை சிட்னி நகரில் நடத்துகின்றன. இந்திய அரசு மற்றும் Invest NSW ஆதரவுடன் டிசம்பர் 6 & 7 ஆகிய நாட்களில் Blacktown Leisure Centre, Stanhopeயில் நடைபெறும் இம்மாநாடு குறித்து விளக்குகிறார் Greater Cumberland Chamber of Commerceயின் தலைவர் இம்மானுவேல் செல்வராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 20/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

ராஜாத்தி சல்மா, தமிழ் இஸ்லாமிய பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். அண்மையில் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Parramatta Westfield Shopping மையத்தில் இந்தியப் பின்னணிகொண்ட ஒருவர் இனவெறித் தாக்குதலை எதிர்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'a piece of cake' - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use' என்பது ‘a piece of cake' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட நிறமூட்டப்பட்ட play sand விளையாட்டு மணல் தயாரிப்புகள், asbestos கலப்புடன் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அதனைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேநேரம் பல பள்ளிகளும் இதனால் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். ஆங்கில மூலம்: SBS Newsயின் Briana Charles.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 19/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றிய காவல்துறையினர் மீண்டும் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை நிறுவுவதற்கு அனுமதியளித்துள்ளார்கள். இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

சிட்னி Hornsby விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப்பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 18/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

Crossed eyes- மாறுகண் என்பது பலரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இது ஏன் ஏற்படுகிறது என்பது பற்றியும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

சுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2

உணவு உற்பத்தியாளர்கள் 70% பொருட்களில் Health Star Rating HSR-ஐ பயன்படுத்த வேண்டும் என நான்கு ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை 37% பொருட்களில் மட்டுமே HSR பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 17/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

பீகார் மாநில சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி; ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து. 9 பேர் பலி; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

சுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 1

ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (9 – 15 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

ஐரோப்பாவில் பிரபலமான பயணிகள் பேருந்து சேவை நிறுவனம் Flixbus ஆஸ்திரேலியாவிலும் கால்பதிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நியூசிலாந்து அரசு, Accredited Employer Work விசாவின் கீழ் இரண்டு புதிய பருவகால வேலை விசாக்களை அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Experts say caste discrimination and the practice of ‘untouchability' are on the rise in Australia. But some South Asians are fighting back. - ஆஸ்திரேலியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் ‘தீண்டக்கூடாதவர்' என்ற நடைமுறை அதிகரித்து வருகிறது. ஆனால் சில தெற்காசியர்கள் இதற்கு எதிராக போராடி வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் விற்பனை செய்யப்படும் பல உணவுப் பொருட்களை ஆராய்ந்ததில் பலவற்றில் இன்னும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்துறை ட்ரான்ஸ் கொழுப்புகள் இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோரோடு ஒரு சந்திப்பு. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரின் பெற்றோரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு. இதில் கலந்து கொண்டவர்கள்: ஸ்ரீநிதி, சுகந்தி, நித்யா, வள்ளிப்பன், ராஜேஷ், மூர்த்தி ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Thinking of going fishing in Australia? Make sure you are familiar with local regulations, including licensing systems, closed seasons, size limits, permitted gear, and protected species. - ஆஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்தல் என்பது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதை பலர் அறியாமல் இருக்கலாம். உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து, மீன்பிடிக்க உரிமம் தேவையா இல்லையா, தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் மீன்பிடிக்கக்கூடாத பருவங்கள், அளவு வரம்புகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் போன்ற விடயங்களுக்கு வெவ்வேறு விதிகள் பொருந்தும். இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 14/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் பாவனைக்கு படைத்தரப்பு காரணம் என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டை ஆளுந்தரப்பு மறுக்கிறது; புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை வெளியேற்ற அரச உயர் மட்டத்திற்கு கோரிக்கை முன்வைத்துள்தோம் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அறிவிப்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

சூடானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, நிலைமை மிக மோசமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன . சூடானில் என்ன நடக்கிறது? விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

இந்தியா, பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; காசா நிலவரம்; மாலியில் கடத்தப்பட்ட தமிழர்கள்; G20 மாநாட்டை புறக்கணிக்கும் அமெரிக்கா; மலேசியா- தாய்லாந்து எல்லை அருகே ரோஹிங்கியா அகதிகள் படகு விபத்து; லிபியா குடியேறிகள் படகு விபத்து: 42 பேர் பலி; ஈராக் தேர்தல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஆஸ்திரேலியாவில் தனது வணிகத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக Menulog அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கரைப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மலிவு விலையில் விற்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Schizophrenia ஒரு வகையான மனச்சிதைவு நோய் - இந்திய பின்னணி குறிப்பாக தமிழர்களுக்கு இந்நோய் தாக்குவதற்கு காரணி உள்ளதா? உள்ளது எனில் அந்நோய் ஏற்படுவதற்கான DNA மூலக்கூறுகள் என்ன? போன்று Schizophrenia குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம். இந்த ஆய்வில் தரவு ஆய்வாளராக (Data Analyst) பணிபுரியும் சதிஷ் பெரியசாமி அவர்கள் செல்வியுடன் இது குறித்து கலந்துரையாடுகிறார்.

“Adult Time for Violent Crime” எனப்படும் புதிய சட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களின் கீழ், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை பெரியவர்களுக்கான நீதிமன்றத்தில் விசாரித்து, தேவையானால் ஆயுள்த்தண்டனை (life imprisonment) வரை வழங்கும் வாய்ப்பு ஏற்படும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 13/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

SBS ஊடக அனுசரணையுடன் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரில் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் திஷான் அவர்களை சந்தித்தோம். இளைஞர்கள் பலரும் உள்ளூர் பகுதிகளிலிருந்து நகரங்களுக்கு குடிபெயரும்போது, திஷான் அவர்கள் மெல்பனிலிருந்து பிராந்திய நகரமான Cairnsக்கு குடிபெயர்ந்து வாழ்ந்துவருகிறார். Cairns நகரில் அவரை நேரடியாக சந்தித்து அவரின் கதையைக் கேட்டறிந்தவர் றைசெல்.

ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் கௌரவம் மிக்க விருது சிட்னி அமைதி விருது - Sydney Peace Prize. 2025 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுக்கொண்டார் தமிழ் பின்னணி கொண்ட நவி பிள்ளை அவர்கள். தென்னாப்பிரிக்க நாட்டைச் சார்ந்த அவர், ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் ஆவார். SBS ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்முகம் இது.

விக்டோரியா Shepparton அருகே display home நீச்சல் குளத்தில் மூழ்கி இந்திய பின்னணிகொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஃப்ளோரைடு நமது பல் சுகாதாரத்திற்கு ஏன் முக்கியம்? எந்தெந்த வழிமுறைகளில் ஃப்ளோரைடை நாம் எடுத்துக்கொள்ள முடியும் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் பல் மருத்துவராக பணிபுரியும் டாக்டர் மாலினி ராகவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

பிரம்மகுமாரிகள் அமைப்பு நடத்தும் "பார்வையில் புதுமை வாழ்க்கையில் இனிமை" ஆன்மீக முகாம் நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது. இதுதொடர்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த ரஞ்சினி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்