Sadhguru, founder of Isha Foundation is a yogi, mystic and spiritual master with a difference. An arresting blend of profundity and pragmatism, his life and work serve as a reminder that inner sciences are not esoteric philosophies from an outdated past,
இங்கே உறவுச் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. "கஷ்டப்படுத்தும் இந்த உறவுகளை என்ன செய்வது?" சத்குரு அவர்களிடம், இப்படி ஒருவர் கேட்டபோது, சத்குரு கூறிய சுவாரஸ்ய பதிலை, இந்த ஆடியோ பதிவில் காணலாம்.
பொதுவாக, அசைவ உணவு வகைகள் (NonVeg) மிகவும் ருசியானது என்றும், சைவ உணவுகளை (Veg) மட்டுமே சாப்பிடுபவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை என்றும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன! சைவ உணவு பழக்கமுள்ள திரு.பாலா இதுகுறித்து தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை சத்குருவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கையில் உணவு, ருசி, ஆரோக்கியம் குறித்து நாம் கவனிக்க வேண்டியவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
ருத்ராட்சம் என்றாலே பிரம்மச்சாரிகளுக்கானது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. திருமணத்திற்குப் பின் ருத்ராட்சம் போன்ற ஆன்மீக வாய்ப்புகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், சிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். ருத்ராட்சம் அணிவது பற்றிய கேள்விக்கு சத்குருவின் பதில்.
‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!' என்று பாரதி அன்றே பாடியிருந்தாலும், பெண்களைப் பொறுத்த வரையில் தாங்கள் ஆண்களுக்கு கீழ், இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுவதாக உணர்கிறார்கள். சமூகத்தில் ஏன் இந்த நிலை? இந்நிலை மாற அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? சத்குருவின் பதில் ஆடியோவில்!
மனதில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை நிறுத்த வேண்டுமென்ற ஆவல் தியானம் செய்பவர்களிடத்தில் பரவலாக இருக்கிறது. எண்ணங்கள் இல்லாத நிலையை எய்திய பின்புதான் தியானம் சாத்தியமாகும் என்ற பார்வையை மாற்றும் விதமாக சத்குருவின் இந்த உரை அமைகிறது.
மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்' என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.
கண்கள் மூடி அமர்ந்துவிட்டாலே தியானம்தான் நிகழ்கிறது என்ற பொதுவான பார்வை உள்ளது. அதுபோல தியானம் மனதை செம்மைப்படுத்தும், மென்மைப்படுத்தும் போன்ற பற்பல கருத்துக்களும் உலாவருகின்றன. ஆனால், தியானம் என்பது உண்மையில் என்ன என்பதை பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் சத்குரு புரியவைக்கிறார்!
"'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" ஆடியோவில் , நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், இன்னும் தலைநிமிராத அவலத்தையும் சாடுகிறார். நல்ல தலைவனை உருவாக்குவதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்பதையும் ஆடியோவில் கேட்கலாம்!
கடவுளைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களது சுய அபிப்ராயங்களைக் கொண்டுள்ளனர். கடவுளின் நிறம் என்ன?; ஆணா அல்லது பெண்ணா? இப்படி கடவுளைப்பற்றி அனைத்து கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்துள்ளனர். ஆனால், இவர்களால் ஏன் இன்னும் கடவுளை அறிய முடியவில்லை? ஒரு மனிதனுக்குள் கடவுள் தேடல் எப்போது துவங்குகிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆடியோவில் சத்குருவின் இந்த பதில், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்கிறது.
முன்னணி திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் அழிந்துவிட்ட பல்வேறு பருப்பு வகைகள் குறித்து சத்குரு முன்பு பேசியதை நினைவுகூர்ந்து அதுகுறித்து கேள்வியெழுப்புகிறார். பல சத்துமிக்க பருப்பு மற்றும் கீரை வகைகள் எப்படி அழிந்தன என்பதை சத்குரு விளக்குகிறார்!
"பிரசித்தி பெற்ற பல கோயில்களில் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா சத்குரு?" என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்க, நம் கலாச்சாரத்தில் கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும், தற்போது கோயில்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் தனக்கே உரிய நுட்பத்துடன் சத்குரு ஆடியோவில் விளக்குகிறார்.
வாழ்க்கையில் தோல்வி வரும்போதெல்லாம், "நம்மை மட்டும் கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார்?" என்ற புலம்பும் மக்கள் ஏராளம். அப்படி உண்மையிலேயே கடவுள் நம்மை சோதிக்கத்தான் செய்கிறாரா? இதற்கு சத்குரு சொல்லும் பதிலென்ன? பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்களுடனான இந்த உரையாடலில் சத்குரு அவர்கள் தரும் விளக்கம் இந்த ஆடியோவில் .
"நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த ஆடியோவில் கேட்கலாம்!
புகழடைவதை விரும்பாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம்! புகழ்பெறும் நோக்கில் பலரும் பல காரியங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். புகழைத் தேடி அலையும் இத்தகைய மனிதர்களுக்கு சத்குரு சொல்வது என்ன? இந்தக் கேள்வியை பிரபல திரைப்பட இயக்குனர் திரு.வசந்த் அவர்கள் சத்குருவிடம் கேட்க, சத்குரு கூறிய பதில் இந்த ஆடியோவில்!
"காதல் திருமணம் நல்லதா? அரேஞ்டு மேரேஜ் நல்லதா?" என்று பாரத் மேட்ரிமோனி நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள் கேட்க, காதல் பற்றியும் திருமணம் பற்றியும் சத்குரு அவர்கள் கூறும் பதில் சற்றே நம்மை சிந்திக்க வைக்கின்றன!
சண்டைகளுக்கும் கலவரங்களுக்கும் அவ்வப்போது பற்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றின் வேர் என்னவென்று ஆராய்ந்தால், அவை ஜாதி-மதங்களாகவே இருக்கும். பல்வேறு கலவரங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த அனுபவத்தில் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன என்றபோது, ஜாதி-மத பிரச்சனைகளை வேரோடு களையக் கூடிய அந்த வழி என்வென்று சத்குரு விளக்குகிறார்.
இன்னொரு உயிரைக் கொன்று சாப்பிடக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், தாவரங்களுக்கும் உயிர் உள்ளதல்லவா? அப்படியென்றால் சைவ உணவு எப்படி உயர்ந்ததாகும்? சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோக மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் இதுகுறித்து கேட்டார். சைவ உணவு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்.
கி.பி. 2000 வருடத்தில் உலகம் அழிந்துவிடும் என்று வதந்திகள் பரவின. பின் 2012லும் பரபரப்பாக பேசிக்கொண்டனர். ஆனால், தொடர்ந்து இந்த பூமி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. உலகம் அழியப்போகிறது என்று சொல்வது பற்றி திரைப்பட இயக்குனர் திரு.A.R.முருகதாஸ் அவர்கள், சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார் என்பதை அறிய, இந்த ஆடியோவை கேளுங்கள்! உண்மையில், மனித இனம் எப்படி அழியப்போகிறது என்பதை சத்குரு விளக்குகிறார்!
நமக்கு வழிகாட்ட குரு அவசியமா? ஒரு சரியான குருவை எப்படி அடையாளம் காண்பது? உங்களை சத்குருவாக ஆக்குவது எது, போன்ற கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் ஆழமான பதில்களை இந்த ஆடியோவில் கேட்கலாம்
குரு பௌர்ணமி நாளுக்கு அப்படியென்ன சிறப்பு? குரு பௌர்ணமி நாளை ஏன் கொண்டாட வேண்டும்? தட்சிணாயணம் - உத்தராயணம் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?” இந்த அனைத்து கேள்விகளுக்கும் சத்குருவின் வாயிலாக ஆடியோவில் விடை அறியலாம்!
"என்னை யாராவது வெளியிலிருந்து இயக்குகிறார்களா? அப்படி இயக்குவது கடவுளா? அல்லது வேறு ஏதேனும் ஒரு சக்தியா?" என்று தனக்கே உரிய நகைச்சுவை நடையில் திரு.கிரேஸி மோகன் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு அளிக்கும் பதிலானது, "நான் யார்" என்பதை அறிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழமாகவும் தெளிவாகவும் எடுத்துரைப்பதாய் அமைகிறது.
நாம் ஆரோக்கியம் பற்றி சிந்திக்க சரியான நேரம் எது, என்பதை சத்குருவின் உரை உணர்த்துகிறது. மேலும், இயற்கையை நம் அனுபவத்தில் உணர்வதற்கு, சத்குரு சொல்லும் வழியையும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்!
"உனக்கு நெஞ்சுல கொஞ்சமாவது பயம் இருக்கா? எத செஞ்சாலும் பய-பக்தியோடு செய்!" இப்படி அதட்டி அறிவுரை கூறும் அப்பாக்களை அன்றாடம் பார்க்கிறோம். உண்மையில், பயப்படுவது நல்ல விஷயமா? பய-பக்தியோடு இருக்க முடியுமா? ஆடியோவில் சத்குருவின் விளக்கம் விடை தருகிறது.
ஈடா பிங்காளா நாடிகளை சமநிலையில் வைத்து தீவிரம் குறையாமல் இருப்பது எப்படி என்று சத்குரு விளக்குகிறார்.
மூன்று ஜென்மங்களின் ஒரே நோக்கமாக இருந்துவந்த தியானலிங்கம், சத்குருவின் கடும் சாதனாவினாலும் பிரயத்தனத்தினாலும் இன்று நம் முன்னே உயிருள்ள ஒரு குருவாக நிதர்சனமாய் வீற்றிருக்கிறது. இந்த ஆடியோ மற்ற லிங்கங்களிலிருந்து தியானலிங்கம் எவ்வகையில் தனித்துவம்பெற்று விளங்குகிறது என்பதை விளக்குவதாக அமைகிறது.What are the most important things to know about Dhyanalinga? This audio explains the 5 most important facts about Dhyanalinga.
குழந்தை பிறந்தவுடன் ஒருசில மாதங்களில் மொட்டை எடுப்பது நம் கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. அதோடு, வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும் பலர் முடியை காணிக்கையாக செலுத்தி, மொட்டை அடிக்கின்றனர். எழுத்தாளர்கள் சுபா இதுகுறித்து கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள ஆழமான விஞ்ஞானத்தை சத்குரு விளக்குகிறார்.
உலகப்புகழ் பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி... ஏன் இந்த முரண்? இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள ஆடியோவை கேளுங்கள்
விபூதி-குங்குமம் வைத்துக்கொண்டால் மனபயம் அகன்று விடும் என்று சொல்லி பாட்டிமார்கள் பூசிவிடுவார்கள். இது மருத்துவத்தில் சொல்லப்படும் placebo effect போன்றதா? கிரேஸி மோகன் அவர்களின் சுவாரஸ்ய கேள்விக்கு பதிலளிக்கையில் இதுகுறித்து விரிவாக பேசுகிறார் சத்குரு!
பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் பக்தி குறித்து சத்குருவின் கருத்தை கேட்க விளைந்தபோது, பக்தி என்பது உண்மையில் என்ன என்பதை விளக்குகிறார் சத்குரு; பிரபஞ்சத்தின் பல சூட்சும கதவுகளை திறக்கும் கருவியாக பக்தி இருப்பதையும் இதில் தெளிவுபடுத்துகிறார்!
"யாரது காலையும் தாண்ட கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்களே இது எதனால்?” என்ற கேள்விக்கு, சத்குரு அவர்கள் தமது பாணியில் சிறப்பான ஒரு பதிலை வழங்குகிறார்.
சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், மேலை நாடுகளில் ஆன்மீக தேடுதல் குறைந்து வருவதற்கு அங்குள்ள அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார வசதி வாய்ப்பும்தான் காரணமா என ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் இந்த ஆடியோவில்
பிரபல திரைப்பட இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள் தொழிலில் வெற்றிபெற நினைப்பவர்களுக்காக சத்குரு சொல்லும் ஒரு யோசனை என்ன எனக் கேட்டபோது, ஒருவரின் தொழில் வளர்ச்சி எதைப் பொறுத்து அமையும் என்பதை தெள்ளத் தெளிவாக்கும் சத்குரு, எதைச் செய்தால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்பதையும் புரியவைக்கிறார்.
கொரோனா இரண்டாம் அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா பெருந்தொற்று எப்போது முடியும்? இந்நேரத்தில் நம் வாழ்க்கைக்கு நாம் எப்படி திட்டமிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் பதிலை இந்த ஆடியோவில் கேட்கலாம்.
கடவுள் வழிபாடு செய்வது குறித்த தவறான புரிதலைக் களைந்து, உருவ வழிபாடு உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை சத்குரு விவரிக்கிறார்!Sadhguru talks about how proper worship should be.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்ற பழமொழி பய உணர்வினால் ஒருவரின் கண்ணோட்டம் முழுவதுமே தவறாகிவிடுவதைக் காட்டுகிறது. பெரும்பாலானோருக்கு பயம் வாழ்க்கையின் வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மனதின் சமநிலைக்கும் பெரும்சவாலாக உள்ளது. இந்த பயம் ஏன் வருகிறது என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்ற நோக்கம் மனிதர்களுக்கு இருந்தாலும், அதற்கு எதிர்மாறாக, இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் வருவதும் அதிகரித்துள்ளன. மனிதன் ஆயுளை நீட்டி, ஆரோக்கியமாய் வாழ்வதற்கான வழிமுறை பற்றி சத்குரு இந்த ஆடியோவில் பேசுகிறார்.
"ஞானிகள் என்றாலே அதிகம் பேசமாட்டார்கள்; மௌனமாகவே இருப்பார்கள் என்று பொதுவாக ஒரு கருத்துண்டு. அப்படி அவர்கள் பேசாமல் இருப்பதால் என்ன பயன்?" திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.பார்த்திபன் அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளித்த சுவாரஸ்ய பதிலை இந்த ஆடியோவில் கேட்கலாம்!
Do this for 20 minutes everyday to overcome anxiety and suffering.ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்கு அனைவருக்கும் ஆசைதான்! ஆனால், வீட்டில் மனைவி மாமியார் குழந்தைகள் என ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்துவதென்பது பலருக்கும் பெரும் சிக்கலாகவே உள்ளது. நம் கிரகிக்கும் தன்மையை அதிகரித்து ஆனந்தமாய் வாழ்வதற்கு சத்குரு சொல்லும் ஒரு வழி, இந்த ஆடியோவில்!#Suffering #Anxiety
வாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருவது காலங்காலமாக நடந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையை மங்களகரமான நாளாக வைத்துள்ளோம். இதன் காரணத்தை ஈஷா சத்குருவிடம் ஒருவர் கேட்க, "வாரத்தின் ஏழு நாட்கள் உருவான விதம், அமாவாசை - பௌர்ணமியின் பின்புலன்கள்" இவற்றை இந்த ஆடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.
சிவனின் நேரடி சீடரும், பக்தருமான ப்ருகு முனியின் கதையை சத்குரு விவரிக்கிறார். சிவன் அர்தநாரியாகி, மாதொரு பாகனாக அவருக்கு காட்சி அளித்தார். ஒரு முழுமையான உயிராக ஆவதற்கு, ஒருவர் தனக்குள் இருக்கும் ஆண்தன்மையையும் பெண்தன்மையையும் சரிசமமாக வளர்ப்பதன் முக்கியத்துவத்தை பற்றியும் பேசுகிறார்.
சித்தர்கள் மஹாசமாதி அடைந்தார்கள், மஹாசமாதி நிலையை அடைவதற்காக பிரயதனப்பட்டார்கள் என்று நாம் தமிழ் சுவடுகளில் படித்திருப்போம். ஆனால், நம்மை போன்ற ஒருவர், இல்லற வாழ்வில் வாழ்ந்தவர், இல்லத்தரசி - மேன்மையாய் மஹாசமாதி அடைந்த உண்மை தெரியுமா உங்களுக்கு? அதுவும் தமிழகத்தில். விஜி - இன்று ஆன்மீகப் பாதையில் இருப்போர் பலருக்கும் ஊக்கசக்தியாய், பாமரர்களுக்கும் இந்நிலை சாத்தியம் என்பதை உணரவைத்து, மாபெரும் யோக நிலையை சுலபமாய் அடைந்திருக்கிறார்.வெற்றித் திருமகள் விஜியின் வெற்றிப் பயணத்தை சித்தரிக்கும் ஆடியோ இது.
சிலப்பதிகாரத்தில் சோம-சூரிய குண்டங்கள் இருந்துள்ள வரலாற்றை சத்குருவிடம் கூறி, ஈஷாவிலுள்ள சூரிய-சந்திர குண்டங்கள் பற்றிக் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அதற்கு பதிலளிக்கையில், ஆண்-பெண் தன்மை குறித்தும், இரண்டு தன்மைக்குமிடையே உள்ள நுட்பமான இடைவெளி குறித்தும் விளக்கும் சத்குரு, அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை எதைக் குறிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்
தூக்கத்தில் வரும் கனவு பலிக்குமா? - Rare & Unseen Talk | Will Dreams in Sleep Come True? | Sadhguru
அமைதியும் நிசப்தமும் வாயை மூடிக்கொள்வதினால் மட்டுமே கிடைத்துவிடுமென நீங்கள் நினைத்தால் சத்குருவின் இந்த உரை உங்களுக்கு உண்மையை உண்ர்த்துவதாய் இருக்கும். நமது தலை, குப்பைகளால் நிறைந்துள்ளபோது அமைதியாய் இருப்பது நல்லது என்ற கருத்தை சத்குரு, அழகான அந்தப் பறவைக்கதை மூலம் விளக்குகிறார்.
சொல்லிக்கொடுத்தால் பக்தி வருமென்றால் அனைவரையும் உட்கார வைத்து சொல்லிக்கொடுத்துவிடலாம். வெறும் பேச்சளவில் சிலர் பக்தியாக இருக்கிறார்கள். சிலர் உண்மையான பக்தி கொண்டிருக்கிறார்கள். பக்தி எப்போது உண்டாகிறது? குருபக்தி பற்றி சத்குருவிடம் கேட்டபோது....
தம் உடல்கூட மிஞ்சாமல், காற்றில் கரைந்த யோகிகள் பற்றிக் கேள்வி வர, அந்தக் கேள்விக்கான விடையோடு சிதம்பரம் நடராஜர் கோயிலின் விஞ்ஞான மகத்துவத்தையும் இந்த ஆடியோவில் எடுத்துரைக்கிறார் சத்குரு.
ஒருவர் ஆன்மீகப் பாதையில் நடையிடுவதற்கு குடும்பம் என்பது ஒரு தடையாகப் பார்க்கப்படுகின்ற ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது. ஆனால், 15000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதியோகி சிவன், அப்போதே குடும்பம், குழந்தைகள், செல்லப்பிராணிகள் என முழுமையான கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டு, ஆன்மீகத்தின் உச்சத்தில் திளைத்திருந்தார். இது எப்படி அவருக்கு சாத்தியமானது? கிரகஸ்த வாழ்க்கையில் இருந்துகொண்டே ஒருவர் யோகியாக செய்யவேண்டியது என்ன? ஆடியோவில் சத்குருவின் விடை!
தீவிர சாதனாக்கள் செய்த புத்தருக்கு ஏதோ ஒரு கணத்தில், அந்த போதி மர நிழலில் அதிர்ஷ்டமாய் ஞானம் கிட்டியது என்போர் உண்டு. எத்தனை எத்தனை சாதகம் செய்தாலும், ஜென்ம ஜென்மமாய் முயன்றாலும் ஞானத்திற்காக பாடுபடும் பலரும் உண்டு. இப்படி வாழ்வின் தினசரி விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், " அதிர்ஷடமிருப்பவர்களுக்கு மட்டும்தான் ஞானமா?" என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு "அதிர்ஷடம்" என்பதன் செயல்பாட்டை இந்த ஆடியோவில் ஆணித்தரமாக விளக்குகிறார் சத்குரு.
முற்பிறவி பற்றியும் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை பற்றியும் ஏராளமான விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. ஆனால், இன்னும் பலருக்கும் குழப்பங்கள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இது குறித்து சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதிலானது, ஆன்மீகத்திற்கு அடிப்படையாக இருப்பது மரணம் என்பதையும், புரியாத இந்த புதிர்களை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் உணர்த்துகிறது.
நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு பழக்கமும் காரணமில்லாமல் செய்யப்படவில்லை. ஆனால், இப்போது காரணத்தை மறந்துவிட்டு வெறும் பழக்கங்கள் மட்டும் சடங்குகளாக செய்யப்பட்டு வருகின்றன. அப்படியொரு பழக்கம்தான் கல்யாணம் செய்த பின் மெட்டியணிவது. இந்தப் பழக்கம் ஏன் வந்தது? சத்குருவின் விளக்கம் இந்த ஆடியோவில்!
நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? விளக்குகிறார் சத்குரு.